நண்பர்களே ஆசிரியர்: மைக்கேல் ஹெச். ஹார்ட் இப் பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில் வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் அளவுக்கு மிகப்பெரும் செல்வாக்கு வல்லமை பெற்றிருந்தவர்கள் யார் யார் என்பதை மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் The 100 என்ற தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதலாம் இடத்தை கொடுத்து அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறார்.இனி அவரது வரிகளை படிப்போம்
.
இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.
எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.
இந்நூலில் இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மையானவர்கள் பண்பாடு மிக்க அல்லது அரசியலில் நடுநாயகமாக விளங்கிய நாகரிகத்தின் கேத்திரங்களில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், முஹம்மதோ (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேத்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்காலத்தில் உலகத்தின் பின்தங்கிய பகுதிகளாகவும் இருந்த தென் அரேபிய நாட்டிலுள்ள மக்கா என்னும் பேரூரில் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள். ஆறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர்கள், எளிய மூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள்.
அன்னார் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது. தம் இருபத்தைந்தாம் வயதில் அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்தார்கள். அதிலிருந்து அவர்களின் பொருளாதார நிலை சீரடைந்தது. எனினும், அவர்கள் தம் நாற்பதாம் வயதை எட்டும் முன்னர், குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.
அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோராய் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்தே பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப் பற்றி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது, உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும், சத்தியத்தைப் பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை கொண்டார்கள்.
இதன் பின், மூன்றாண்டு காலம் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை செய்யலானார்கள்.
பையப்பைய, தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் கருதலானர்கள். கி.பி. 622ஆம் ஆண்டில், தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு ஏகினார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிட்டிற்று.
இவ்வாறு அவர்கள் மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்திகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் மதீனாவிலோ, மிகுந்த ஆதரவாளர்களைப் பெறலானார்கள். இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக்கிற்று. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை பின்பற்றுவோர் தொகைவேகமாகப் பெருகத் துவங்கியதும் மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன.
இறுதியில் 630ஆம் ஆண்டில் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும், இப்போர் ஒய்ந்தது. அரபுக் கேத்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக் கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் கண்டன, அவர்கள் 632ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள். அரபு நாட்டின் படவீகள் என்னும் நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி, ஒருவரையொருவர் ஒழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள், நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படவீகள் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றில் முதன் முறையாக முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் ஐக்கியப்படுத்தப்பட்டு, உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழிய நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின.
அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கள் புதிய பேரரசு பரந்து கிடந்து, வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால், இத்தகு எதிரிகளுடன் அரபு ஈடுகொடுக்க முடியதோர்தாம். எனினும், எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம் முழுவதையும் வெகுவேகமாக வெற்றி கொண்டனர். கி.பி. 642ஆம் ஆண்டில் பெஸாந்தியப் பேரரசிடமிருந்து எகிப்தைப் கைப்பற்றினர். 637இல் காதிஸிய்யாவிலும், 642இல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.
முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நெருங்கிய தோழர்கள், முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப் பேற்றவர்களுமான அபூபக்ர், உமர் இப்னு அல்-கத்தாப் (ரளியல்லாஹ¤ அன்ஹ¤ம்) ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை. கி.பி. 711க்குள் அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடபுலம் நோக்கித் திரும்பி, ஜிப்ரால்டர் கடலிடுக்கைக் கடந்து, ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன. கிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்று கூட ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால், 732ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிடட் ஒரு முஸ்லிம் படை, பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த படவீக் கோத்திரத்தினர், குறைந்த ஒரு நூற்றாண்டு காலப் போர்களின் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத -இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.
ஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே நிலைபெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு விசுவாசம் பூண்டவர்களாக இருந்து வந்தாலும் கூட, அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள் போர் நடப்புகளுக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கிறிஸ்துவர்கள் மறு வெற்றி கொண்டனர். இருப்பினுங்கூடப் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டில்களாக விளங்கிய மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக் கடற்கரைப் பகுதிகளும் இருக்கின்றன.
முஸ்லிம்கள் துவக்கத்தில் வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது. இப்போது, ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும் கூட வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேஷியாவில், இப்புது மார்க்கமே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) யின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.(St. PAUL)
ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல்(THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன.
அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும்.
குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம். இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.
வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல, தவிர்க்க முடியாமல் நிகழக் கூடியவை தாம்: அவற்றை நடத்துவதற்குரிய குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லக்கூடும். சான்றாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்காவிட்டாலும் கூட, ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும். அதனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை.
எனவே அன்னார் இல்லாமலே இத்தகு வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை. மனித வரலாற்றில் இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால், இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில் மிகுந்திருந்தாலும்-நிலைத்திருக்கவில்லை. இன்று மங்கோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான். ஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெரிதும் வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் மட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு, இராக்கிலிருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன. குர்ஆன் இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பதும், அது அரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் தாம் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கிடையில் அம்மொழி ஒன்றுக்கொன்று விளங்காவிட்டார மொழிகளாகச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம்.
இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான வேறுபாடுகளும், பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும், பகுதியளவிலான இவ்வொற்றுமைக் குறைவு இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே தம் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடாது. சான்றாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானும், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.
ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில் இன்னும் முக்கியமான பங்கு வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல் துறையிலும் முஹம்மது நபி ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத்தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது என நான் கருதுகிறேன்.
நண்பர்களே குவைதில் பனிபுரியும் இந்தியர்கள் ஏதேனும் ஒருகாரனதிர்காக(பாஸ்போட் புதிபிக்கவோ,பாஸ்போட் துளைந்துபோனாலோ விசா விஷயமாகவோ,,,,,,,,,) இந்திய தூதரகம் செல்ல நேர்கையில் அங்கே முதலில் விண்ணப்பம் படிவம் வாங்கவேண்டும்,
பொதுவாக குவைத்தில் இந்தியதூதரகம் எந்நேரமும் கூட்டமாகவே(busy)காணபடுகின்றது
ஆகவே காலையில் நாம் தூதரகம் சென்றால் அரைநாள் அங்கேபோய்விடும் ஆகவே நாம் ஒருசில முன் தயாரிப்புடன் தூதரகம் சென்றால்,நேரத்தை மிச்சபடுத்தலாம்,
தூதரகம் செல்லும் முன் பாஸ்போட்காபி,சிவில்ஐடி காபி,மற்றும் காபி(ஜெராக்ஸ்) எடுக்க வேண்டிய பேப்பர் இருக்கும்மானால் முன்பே எடுத்து வைத்துகொள்ளுங்கள் தூதரகத்தில் ஜெராக்ஸ்(Photocopying)எடுக்க போதுமான வசதிகள் இல்லை,ஒரே ஒரு கைதர் காலத்து மிஷன் வைத்து இருக்கின்றார்கள்,அதுக்கே போடோ காபி எடுக்க நான் நீ என்று போட்டிபோடுவதும்(தேவைபட்டால் நம்மவர்கள் கோதாவில் இறங்குவதையும் காணமுடிகின்றது)சரி வெளியில் போய் காபி எடுக்கலாம் என்றால் சுற்று வட்டாரத்தில் துதரகன்களை தவிர வேற ஏதும் இல்லை,
அடுத்ததாக விண்ணப்ப படிவம் வாங்குவது,காலையில் எட்டு மணிக்கு இந்திய தூதரகம் திறக்கபடுகின்றது ஆனால் நம்மவர்கள் காலை ஆறுமணி முதல் வருசையில் நிற்பதை காணமுடிகின்றது,தூதரகம் திறந்தவுடன் வுள்ளே செல்லும் நாம் முதலில் விண்ணப்ப படிவம் வாங்க வரிசையில்நிற்க வேண்டும் அதிலே நமக்கு அரைமணி நேரம் செலவாகிவிடும்,இதை தவிர்க்க ஆன்லைனில் அணைத்து விண்ணப்ப படிவங்களும் கிடைகின்றன(இங்குகிளிக் செய்து தாங்களுக்கு தேவையான படிவத்தை டவுன்லோட் செய்து பிரின்ட்அவுட் செய்து கொள்ளவும்)பிறகு, தூதரகம் செல்லும்முன்பே விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து எடுத்துசென்றால்,ஒருமணி நேரம் வுங்களுக்குமிச்சம் ஆகும்,தூதரகம் திறந்ததும் அனைவரும் விண்ணப்ப படிவம் வங்க வருசையில் நிற்க,நீங்களோ பூர்த்தி செய்த படிவத்துடன் செல்வதால் டோக்கன் வாங்கி நேராக கௌண்டர் சென்று விடலாம்(இன்னும் சொல்ல போனால் வுங்களுக்கு பலமணி நேரம் மிச்சமாகும்)மறக்காமல் எழுதுகோல் எடுத்து செல்லவும்,பொதுவாக வின்னபிப்பது காலை பொழுதிலும்(08:00 hrs – 12:00 hrs)
,டெலிவரி செய்வது மாலை பொழுதிலும்(16:00 hrs – 20:00 hrs),எனவே அவர்கள் ஒரு தேதி குடுத்து அன்று வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று சொன்னால்,நீங்கள் மாலை தான் செல்ல வேண்டும்,வெள்ளிகிழமை விடுமுறை,சனிகிழமை மதியம் மட்டும் (16:00 hrs – 20:00 hrs),
தற்போது நமக்கு வசதிக்காக குவைத்தில் இருக்கும் இந்தியதூதரகம்,குவைத்தில் இரண்டு இடத்தில தனது கிளையை,துடங்கி இருக்கின்றது,ஒன்று சர்கிலும்(Sharq)
Emad Commercial Center, Basement floor
Ahmed Al Jaber Street, Sharq, Kuwait city
Telephone: 22470005 - Telefax: 22470006,
மற்றொன்று
பஹஹில்லிலும்(Fahaheel)Fahaheel
Mujamma Unood, 4th floor, Office no. 25-26
Makka Street, Entrance 5, Fahaheel, Kuwait
Telephone: 23912352 - Telefax: 23912354,வுள்ளது இங்கும் நிங்கள் சென்று வுங்கள் துதரக வேலைகளை முடித்துகொல்லலாம்
இறைவனின் பெயரால்.
நண்பர்களே பொதுவாக அரபு நாட்டில் வசிக்கும் பலர் கிட்னியில் கல் என்று சொல்லி அவதி படுவதை பரவலாக பார்க்கிறோம் அதற்கு காரணம் அரபு நடுகல் கடல் நீரை குடிநீராக மாற்றபடுவது தான் கரணம் என்று பரவலாக சொல்ல படுகின்றது ஆகவே இந்த படைப்பு பலருக்கு பயன் பட எழுதுகிறேன். சிறுநீர்க் கல்
சிலருக்கு அடிவயிற்றில் வலப்புறத்தில் வலி தோன்றும். வேறு சிலருக்கு முதுகுவலி ஏற்படும். நடக்கும்போது இந்த வலி அதிகமாகும். சுற்றுப்புறத்தில் பரவும். இந்த அடையாளம் இருந்தால், சிறுநீர்க்கல் தோன்றியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.இது முற்றினால், சிறுநீர் கழிக்கச் சிரமம் ஏற்படும். சிறுநீர் கழிப்பது தடைபடைவும் கூடும். எனவே இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு நோய். முதலிலேயே கண்டுபிடித்து மருந்து சாப்பிட்டால் செலவு இல்லாமல் குணமாகிவிடும்
சிறுநீர்க் கல் என்பது என்ன?
நமது உடலிலிருந்து சிறுநீரை வெளியேற்றுவது சிறுநீரகம். இது அவரை விதை வடிவத்தில் இருக்கும். நமது உடலில் சேரும் கழிவுகளை நீரில் கலந்து வெளியேற்றுவது இதன் வேலை. இந்த சிறுநீரகத்தில் சிறுசிறு கற்கள் தோன்றக்கூடும். இதையே சிறுநீர்க் கற்கள் என்று சொல்கிறோம்.
பொதுவாக இந்த கற்கள் வெள்ளையாக இருக்கும். நவமணிகள் போல் சில கற்கள் வண்ண வண்ணமாக இருக்கும். பஞ்சு போன்ற மென்மையான கற்கள் உண்டு. சில கற்கள் கடினமாக இருக்கும். இந்தக் கடினக் கற்றகள் சிறுநீரகத்தையும், சிறுநீர்ப் பாதையையும் கிழித்துப் புண்ணாக்கிவிடும். அப்போது சிறுநீருடன் கலந்து, இரத்தம் வரும்.
ஏன் தோன்றுகிறது? சிறுநீர்க் கற்கள் எப்படித் தோன்றுகின்றன? இவை சுண்ணாம்புக் கற்கள். நமது உடலில் அளவுக்கு அதிகமாகச் சேரும் சுண்ணாம்புச்சத்து, முழுமையாக வெளியேற்றப்படாமல், சிறுநீரகத்தில் தங்கிவிடுகிறது. அதுவே கல்லாக மாறுகிறது.
சுண்ணாம்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதே இதற்கு முதல் காரணம். பாலில் சுண்ணாம்புச் சத்து அதிகம். கீரைகளில் சுண்ணாம்புச்சத்து மிகுதி. இவற்றை அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே நஞ்சுதானே?
வேலை பார்க்கும் சிலர் சிறுநீரை அடக்கிக் கொண்டிருப்பார்கள். இதனாலும் சிறுநீர்க்கல் தோன்றும்.
சிறுநீர் தாராளமாகப் போகும்படி நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லையென்றால், கழிவுப் பொருட்கள் சிறுநீரகத்தில் தங்கி, கல்லாக இறுகிவிடும்.
சில மருந்துகளின் பக்கவிளைவாகவும் சிறுநீர்க் கல் தோன்றும்.
மது குடிப்பதும் ஒரு காரணம். அடிக்கடி இறைச்சி சாப்பிடுவது, நிறைய மசாலா சேர்த்துக்கொள்ளுவது ஆகியவையும் காரணம்.
அறிகுறி
சிறுநீர்க் கல் என்பது சிறுநீரகத்தில் தோன்றக்கூடியது. வெளியில் தெரியாது. எனவே, நமக்குத் தெரியாமல் வளர்ந்து கொண்டிருக்கும்.
முதுகில் வலி தோன்றும். இது இடுப்புக்கு வந்து, அடிவயிற்றில் வலிக்கும். நடக்கும்போது, மாடி ஏறும்போது வலி அதிகமாகும்.
சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். சொட்டுச் சொட்டாக விழும். சிலருக்கு அடியோடு அடைத்துக் கொள்ளும். சிலவேளை சிறுநீரில் இரத்தம் கலந்து வரும்.
இந்த அடையாளங்களைக் கொண்டு, சிறுநீர்க் கல் தோன்றியிருக்குமோ என்று சந்தோகப்படலாம். எக்ஸ்ரே அல்லது ஸ்கேன் எடுத்து, உறுதி செய்துகொள்ள முடியும்.
கரைக்க முடியும்
தொடக்க நிலையில் சிறுநீர்க் கற்களைக் கரைப்பது எளிது.
மாத்திரைகள் கொடுத்தே மருத்துவர்கள் கரைத்துவிடுவார்கள்.
வீட்டு வைத்தியமும் உண்டு. நாள்தோறும் காலையில் வாழைத்தண்டு அல்லது முள்ளங்கிச் சாறு எடுத்து, அரை தம்ளர் குடிக்க வேண்டும்.
வாழைத் தண்டு அல்லது முள்ளங்கி சாம்பார் வைத்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இளநீர் குடிக்கலாம். வெள்ளரிக்காய் தின்னலாம். நன்னாரி சர்பத் அல்லது கசாயம் குடிக்கலாம் எல்லாவற்றையும்விட, நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். கற்கள் கரைத்து, சிறுநீரில் வெளியேறிவிடும்.
கற்கள் நன்கு வளர்ச்சி அடைந்துவிட்ட நிலையில், உடைக்க வேண்டியிருக்கும். அல்லது, அறுவை செய்து எடுக்க வேண்டியிருக்கும். இதை மருத்துவர் பார்த்துக்கொள்ளுவார்.
நிறையத் தண்ணீர் குடியுங்கள். சிறுநீரை அடக்காமல் கழியுங்கள். சிறுநீர்க் கல் தோன்றாது
வாழைத் தண்டு வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில்
நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் & கற்களை விடுவிக்கும்.
சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது
மூன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும்
இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.
இன்னும் விரிவாக பாப்போம்.
சிறுநீர்:சராசரியாக 24 மணி நேர அளவில் ஒரு மனிதனின் சிறுநீரகங்கள் ஒரு லிட்டர் முதல் இரண்டு லிட்டர் வரை சிறுநீரை வெளியேற்றும் தன்மை கொண்டவை. இந்தச் சிறுநீரின் அளவு கிழ்க்கண்ட சூழ்நிலையில் மாறக்கூடும்.
உணவின் தன்மை (திரவநிலை அல்லது திண்மநிலை) சூழ்நிலை வெப்பம்
உடற்பயிற்சி
மருந்துகள், (காலமல், அசிடேட், சலிசிலேட் போன்றவை சிறுநீரின் அளவை அதிகரிக்கும்.)
நோய் நிலை (வாந்தி, பேதி, காய்ச்சல், இருதய நோய் போன்றவை சிறுநீரின் அளவைக் குறைக்கும்.
பொதுவான நிலையில் 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் கழிவுப் பொருள்களை வெளியேற்றுகின்றன. உணவைப் பொறுத்து இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடும்.
இவை தவிர மிகச் சிறிய அளவில் இப்பூரிக் அமிலம், இண்டிகேன், ஆக்சாலிக் அமிலம், அமினோ அமிலங்கள், கால்சியம், மெக்னீசியம், சல்பேட்டு, அம்மோனியம் போன்றவற்றையும் வெளியேற்றுகின்றன. நீரிழிவு போன்ற காலங்களில் குளுகோஸ், அசிடோன் போன்ற வேறுசில பொருள்களையும் வெளியேற்றுகின்றன.
சிறுநீர்க்கல் நோய்:
மேற்கண்ட பொருள்களைக் கொண்ட கரைசலான சிறுநீரில் அது வெளியேறும் வழிகளில் (சிறுநீரகம், நாளம், சிறுநீர்ப்பை) கற்கள் தோன்றி, ஒருசில மனிதர்களைப் பழங்காலம் முதற்கொண்டு இந்நாள் வரை பெருந்தொல்லைப்படுத்தி வருகின்றன. சிறுநீர்வழிப் பகுதிக் கற்கள் தோன்றும் நோயினை யூரோலிதியாசிஸ் (Urolithiasis) என்று ஆங்கிலத்தில் அழைப்பர். சிறுநீரகம், சிறுநீர்க் கழிவு நாளம் மற்றும் சிறுநீர்ப்பை போன்ற பகுதிகளில் தோன்றும் இக்கற்களை சிறுநீர்க் கற்கள் (Urinary Calculi) என்பர்.
இந்நோய் பொதுவாக நடுவயதினரிடையே காணப்பட்டாலும் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் தோன்றுவதாக சில அமெரிக்க மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.
நோயின் அறிகுறிகள்:
ஆரம்ப நிலையில் நோயாளி, தான் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதைப் பொதுவாக உணருவதில்லை. ஆனால் நோய் முதிர முதிர கீழ்க்கண்ட சில அறிகுறிகள் வரிசைப்படி தோன்றலாம்.
பொதுவாக இடுப்பில் சோர்ந்த கடுமையான வலி,
சிறுநீர் வெளியேறுமுன் அடிவயிற்றில் வலி ஆரம்பித்து இடுப்பில் விலா எலும்பிற்கும் இடுப்பிற்கும் இடைப்பட்ட சதைப்பற்றில் வலி எடுத்தல்.
சிறுநீர் வெளியேற்றத் துன்பப்படுதல்.
சொட்டு சொட்டாக நீர் வெளியேறுதல்.
சிறுநீரில் இரத்தம் வெளிப்படுதல்.
நோய்க்காரணம்:
சிறுநீர்க்கல் நோய் பொதுவாக இந்தியா, சைனா ஆகிய நாடுகளில் நிறைந்து காணப்படுவதால் இதற்கு சில இயல்பு ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
மேலும், உணவுத் தட்ப வெப்பநிலை ஆகியவையும் இந்நோய்க்குச் சில காரணங்களாகக் கருதப்படுகின்றன. சயரோகம், கீல்வாதம், எலும்பு முறிவு போன்ற நோய்க் காலங்களில் படுக்கை நிலையிலேயே இருக்கும் நோயாளிகள் இந் நோயினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சல்பா பெரிடின், சல்பாதையசோல, சல்பாடைžன், சல்பாகுவானிடீன், வைட்டமின் D போன்ற மருந்துகள் மிகுவதும் சிறுநீர்க் கற்கள் தோன்றக் காரணமாகும்.
சிறுநீர்க் கற்களின் வேதியல் தன்மை:
சிறுநீர்க் கற்கள் பெரும்பாலும் பாஸ்பேட், ஆக்சலேட், யூரேட் போன்றவற்றின் கால்சியம், மெக்னீசியம் உப்புக்களாகவே இருக்கின்றன. சில கற்கள் யூரிக் அமிலம், சிஸ்டின் போன்ற பொருள்களையும் கொண்டிருக்கின்றன.
இயற்பியல் (Physical) பண்பின்படி பார்க்கும்பொழுது மேற்கூறிய சிறுநீர்க் கழிவுப் பொருள்கள் அனைத்தும் குறைந்த கரைதன்மை (Solubility) கொண்டவையாகும்.
கற்கள் தோன்றும் முறை:
கீழ்க்கண்ட சில சூழ்நிலைகளில் சிறுநீரின் அளவு குறைகிறது.
குறைந்த அளவு நீரைப் பருகுதல்.
வெப்பமான தட்ப வெப்ப நிலை.
அதிக வேர்வை வெளியேறிய சூழ்நிலையில் சரியான அளவு நீர் பருகாமல் இருத்தல்.
கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் குறைந்த கரைதன்மை கொண்ட மேற்கூறிய கற்பொருள்களின் அளவு சிறுநீரில் அதிகரிக்கும்.
யூரிக் அமிலம், கால்சியம், ஆச்சலேட் போன்றவற்றைத் தரும் உணவுப் பொருள்களை அதிகமாக உட்கொள்ளுதல். ஸ்டிராபெர்ரி (Strawberry), சீமைப்பசலைக்கீரை (Spinacea Oleracea)., சீன மஞ்சள் (Rhubarb).
பாராதைராய்டு சுரப்பியின் மிதமிஞ்சிய செயல்பாட்டினால் தோன்றக்கூடிய ஹைபர் கால்சியமியா போன்ற நோய்நிலை.
சிறுநீரின் அளவு குறையும்போதும், குறைந்த கரைதன்மையுடைய பொருள்களின் அளவு சிறுநீரில் அதிகரிக்கும்போதும் அப்பொருள்களின் செறிவு அதிகரித்து அவை சிறுநீரில் மீச்செறிவை (Super saturation) விரைவில் அடைகின்றன. இந்நிலையில் அப்பொருள்கள் சிறுநீரில் இருந்து வீழ்படிவாக வெளியேறுகின்றன.
வீழ்படிவான துகள்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிப் படிகங்களாக வளருவதற்கான சூழ்நிலை சிறுநீரகங்களிலோ, நீரக நாளங்களிலோ, சிறுநீர்ப் பைகளிலோ தோன்றும்போது அங்கே படிகங்கள் வளர்ந்து கற்கள் தோன்றுகின்றன.
வீழ்படிவுகள் ஒட்டிப் படிகங்கள் வளருவதற்கு இரு பொருள்கள் தேவைப்படுகின்றன.
வீழ்படிவுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டுவதற்குப் பசைத்தன்மை கொண்ட பொருள்.
ஒட்டிய வீழ்படிவுகள் படிகங்களாக வளருவதற்கு மைய நுனிப் பொருள்.
நோய் படர்ந்த சிறுநீரகப் பாதையில் எரிவு ஏற்படுவதால் உருவாகும் பொருள்கள் பசை போன்று செயல்படுகின்றன.
சில சூழ்நிலையில் சிறுநீர்ப் பாதையை அடைந்த இறந்த பாக்டீரியாக்களின் நுண்ணிய உடல்கள், களிச்சவ்வு, žழ்செல்கள் போன்றவை படிகங்கள் படிந்து வளருவதற்கான மையநுனிப் பொருள்களாக அமைந்துவிடுகின்றன.
எனவே குறைந்த கரைதன்மை கொண்ட பொருள்கள் சிறுநீரில் மீச்செறிவு அடைந்து வீழ்படிவாக மாறிப், பசைப்பொருள்கள் அருகில் இருப்பின் ஒன்றொடு ஒன்று ஒட்டி ஏதேனும் மையநுனிப் பொருள் கிடைப்பின் படிகங்களாக படிந்து வளர்ந்து கற்கள் தோன்றுகின்றன.
கற்களின் அளவு: அமைப்பு:
இவ்வாறு தோன்றும் சிறுநீர்க் கற்கள், சிறுநீர் நாளங்கள் வழியாகச் செல்லும்படியாகச் சிறியவையாக இருப்பின் சிறுநீருடன் வெளியேறுகின்றன. அவ்வாறு செல்லும்பொழுது நாளங்கள் விரிக்கப்படுவதால் வலி ஏற்படுகிறது. மேலும் நாளங்கள் வழியே அவை செல்லும்போது சிராய்வு ஏற்படுவதால் சிறுநீருடன் இரத்தம், தசைநார் நுனிகள் போன்றன வெளியேறும்.
பலகற்கள் தோன்றும்பொழுது நோய் கடுமையாகும். மேலும், சில கற்கள் வளர்ந்து பருத்துச் சிறுநீரகத்தையே சிதைத்து விடுகின்றன.
சிறுநீர்ப்பையில் தோன்றும் கற்கள் பெண்ணின் குறுநாளத்தின் வழியே எளிதில் வெளியேறிவிடுகின்றன. ஆணின் சிறுநீர்ப்பையில் தோன்றும் கற்கள் அங்கேயே வளர்ந்து பருக்கின்றன.
சிறுநீரின் pH ம் சிறுநீர்க் கற்களும்:
சிறுநீர்க் கற்களில் காணப்படும் வேதிப்பொருள்களைக் கட்டுப்படுத்தும் குணகமாக சிறுநீரின் pH செயல்படுகிறது.
(pH - என்பது அமில காரத் தன்மையைக் காட்டும் குணகம் ஆகும். pH = 7 க்குக் கீழே அமிலத்தன்மை; pH = 7 க்கு மேலே 14 வரை காரத்தன்மை. pH = 7 நடுநிலைத்தன்மை.)
சாதாரண நிலையில் சிறுநீரின் pH, 4,5 லிருந்து 7.5 வரை வேறுபட்டுக் காணப்படும்.
சிறுநீர் சற்று அமிலத்தன்மையில் இருக்கும்பொழுது (PH = 5) யூரிக் அமிலம் வீழ்படிவாக வெளியேறுகிறது.
மற்றப் படிகங்களைவிட யூரிக் அமில வீழ்படிவு பல்வேறு வகை அமைப்பைக் கொண்டிருக்கும்.
ரோம்பிக் வடிவ அமைப்புப் படிகங்கள்.
வீட்ஸ்டோன் வடிவ அமைப்புப் படிகங்கள்,
நான்முக வடிவ அமைப்புப் படிகங்கள்.
நீண்ட புள்ளி முடிவு கொண்ட படிகங்கள்.
கிளைப் படிகங்கள்.
புள்ளிக்கற்றைப் படிகங்கள்.
சிறுநீரின் pH மதிப்பு 6 - ஆக இருக்கும்பொழுது யூரிக் அமிலம், சோடியம் யூரேட், கால்சியம் பாஸ்பேட், கால்சியம் ஆக்சலேட் ஆகியவற்றைக் கொண்ட சிறுநீர்க் கற்கள் உருவாகின்றன.
கால்சியம் ஆக்சலேட் படிகங்கள் இருவகையில் காணப்படுகின்றன.
எண்முகப் படிக அமைப்பு.கவிழ்க்கப்பட்ட இருமணிகளின் அமைப்புப் படிகங்கள். கால்சியம் பாஸ்பேட் மூன்றுவகைகளில் காணப்படுகிறது. தூள், துகள்வகை, படிகவகை. படிகங்கள் புள்ளி முடிவு கற்றை அமைப்பு.
சிறுநீரின் pH மதிப்பு, 7 ஆக இருக்கும்பொழுது கால்சியம் பாஸ்பேட் கற்கள் உருவாகின்றன. pH-7 க்கும் 8 க்கும் இடைப்பட்ட நிலையில் கால்சியம் பாஸ்பேட், மெக்னீசியம், அம்மோனியம் பாஸ்பேட், அம்மோனியம் யூரேட் போன்றவைகளை உடைய கற்கள் உருவாகலாம்.
அம்மோனியம் மக்னீசியம் பாஸ்பேட் படிகங்கள் பலமுக அமைப்பு உடையனவாகவும் சில சமயங்களில் இறகு அமைப்புடையனவாகவும் காணப்படுகின்றன
சிறுநீரின் pH மதிப்பு 8 க்கும் அதற்கு மேலும் அமையும்பொழுது கால்சியம் கார்பனேட், அம்மோனியம், மெக்னீசியம் பாஸ்பேட், அம்மோனியம் யூரேட் போன்றவற்றைக் கொண்ட மென்மையான கற்கள் உருவாகலாம்.
கால்சியம் கார்பனேட் படிகங்கள் உருதுகள் படிகங்களாகவோ கவிழ்ந்த இருமணி வடிவப் படிகங்களாகவோ காணப்படுகின்றன.
எனவே, சிறுநீரின் pH-ஐ அறிந்தும், சிறுநீரில் தோன்றும் படிகங்களை
நுண்ணோக்கி வழியாகக் கண்டும், எவ்வினக் கற்கள் உருவாகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.
குணப்படுத்துதல்:
சில கற்கள் மிகச் சிறியவைகளாக இருப்பின் தாமாகவே வெளியேறி விடுகின்றன. நாளங்களில் தங்கிவிடுகின்ற சற்றுப் பெரிதளவான கற்களைச் சிறுநீரகப் பாதை வழியாகத் துணைக் கருவிகளை நுழைத்து நீக்கிவிட முடியும்.
சிறுநீர்ப் பைகளில் தங்கிவிடும் கற்களைத் தனிப்பட்ட சில கருவிகளைக் கொண்டு உடைத்துப் பின் நீக்கிவிடலாம்.
மிகப்பெரிய சிறுநீர்க் கற்களை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்க முடியும். இன்றைய மருத்துவ அறிவியல், சிறுநீர்க் கற்களைத் தொல்லையின்றி கரைத்துவிடும் அளவிற்கு மருந்துகளை நமக்கு அளித்துள்ளது. "Solution-G" எனப்படும் கீழ்க்கண்ட வேதிப் பொருள்களைக் கொண்ட கரைசல் பாஸ்பேட், கார்பனேட் கற்களைக் கரைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
சிட்ரிக் அமிலம் 32.25 கிராம்
மக்னீசியம் ஆக்சைடு 3.84 கிராம்
சோடியம் கார்பனேட் 4.37 கிராம்
(இவை ஒரு லிட்டர் நீரில் கரைக்கப்பட வேண்டும்.)
நோய்த் தடுப்பு:
சிறுநீர்க் கற்கள் மேற்கொண்டு தோன்றாமல் தடுப்பது, மேலே நாம் கண்ட தோற்றக் காரணத்தைப் புரிந்துகொள்வதைப் பொறுத்தமையும். அதிக அளவு சல்பா மருந்துகள், திக வைட்டமின் D, பாராதைராய்டுச் சுரப்பியின் மீள் செயல், போன்றவற்றைக் கட்டுப்படுத்திச் சிறுநீர்க் கற்கள் தோன்றாமலும் காத்துக் கொள்ளலாம்.
சிறுநீர்க் கல் அடைப்புத் தொல்லையுற்றோர், எல்லாவற்றிற்கும் மேலாக அதிக அளவில் நீரைப் பருகி, அளவோடு சத்துணவை உண்டு, கற்கள் உருவாவதற்கு அடிப்படையான உணவைத் தவிர்த்து நல்வழியில் வாழும் முறையை அமைத்துக் கொள்வதே இந்நோயினின்று விடுபட்டிருக்கச் சாலச் சிறந்த வழி.
பெரும்பான்மையான மக்களுக்குச் சிறுநீர்க் கல்லடைப்பு ஏற்படுவதில்லை - பிறப்பின் இயல்பாலோ நோய்க் காரணமாகவோதான் இத்துன்பம் நேரும். எனவே பொதுப்படையான தற்காப்புகள் தேவையில்லை.
சிறுநீரகங்கள் கழிவுப் பொருள்களை வெளியேற்றுகின்றன. உணவைப் பொறுத்து இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடும்.
நீர் 1200.00 கி.
யூரியா 30.00 "
யூரிக் அமிலம் 1.00 கி.
(யூரேட் உட்பட)
கிரியேட்டினின் 1.20 கி.
சோடியம் குளோரைடு 12.00 கி.
சோடியம் 4.0 கி.
பொட்டாசியம் 2.0 கி.
பாஸ்பேட்டு
(பாஸ்பரசாக) 1.1 கி.
மஜீத் குவைத்.
நண்பர்களே;திரும்பி பார்போமா வரலாறை;என்ற லேபிளில் நான் தரும் வரலாற்றிற்கு நல்ல வரேவேற்பு தந்த நண்பர்கள்,மகாத்மா காந்தி கொள்ளப்பட்ட வரலாற்றை விரிவாக எழுதும்படி கேட்டு கொண்டதுக்காக.
இருபதாம் நூற்றாண்டில் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்த நிகழ்ச்சி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதாகும், சுதந்திரம் பெற்ற 5 மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே, சதித்திட்டம் தீட்டிய ஆப்தே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
(கோட்சே காந்தியை கொள்வதற்கு முன் தன் கையில் இஸ்லாமிய பெயராகிய இஸ்மாயில் என்று பசை குத்தி இருந்தான் இதன் மூலம் மத சண்டை மூண்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் அளிக்க படுவார்கள் என்று அவன் போட்ட திட்டம் அவன் வுஇறுடன் பிடி பட்டதால் பலிக்கவில்லை)
கோட்சே: வயது 37. முழுப்பெயர் நாதுராம் விநாயக் கோட்சே. இவனுடைய தந்தை, தபால் துறையில் மாதம் 15 ரூபாய் சம்பளம் பெற்று வந்தவர்.
கோட்சேக்கு மூன்று சகோதரர்கள்; இரண்டு சகோதரிகள். தென் மராட்டியத்தில் உள்ள சாங்லி என்ற இடத்தில் கோட்சே பிறந்தான் புனாவில் படித்த கோட்சே, பத்தாம் வகுப்பைக்கூட பூர்த்தி செய்யவில்லை. படிப்பில் நாட்டம் இல்லாமல் துறைமுகத்தில் வேலை பார்த்தான். பின்னர் பழ வியாபாரம், கார் டயர்களை பழுதுபார்த்தல்... இப்படி பல வேலைகளைப் பார்த்துவிட்டு, கடைசியில் தையல் வேலை கற்றுக்கொண்டு தையல் கடை வைத்தான்.
படிப்பு அதிகம் இல்லையென்றாலும், ஆங்கிலத்தில் நன்றாக எழுதவும், பேசவும் தெரியும். கார் ஓட்டுவதிலும் சூரன்.
1937_ம் ஆண்டில் சவர்க்கார் தொடங்கிய இந்து மகா சபையில் சேர்ந்தான். சிறு வயதில், ரத்தத்தை கண்டாலே கோட்சேக்கு "அலர்ஜி" என்றால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் அது உண்மை. 1947 ஜுலை முதல், "தி ஹிந்து ராஷ்டிரா" என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து வந்தான்.
2,ஆப்தே: வயது 34. ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஆப்தே, "பி.எஸ்.சி" பட்டதாரி. பிறகு 1941, 42_ல் ஆசிரியர் வேலைக்கு ("பி.டி") படித்துத்தேறினான்.
1943_ல், இந்திய விமானப்படையில் 4 மாதம் பணியாற்றினான். தம்பி இறந்து போனதால், குடும்பத்தை கவனிப்பதற்காக வேலையை விட்டு விலகி, சொந்த ஊர் திரும்பினான். அகமது நகர் பள்ளியில் ஆசிரியராகவும், பிறகு அமெரிக்கன் மிஷன் உயர் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகவும் பணிபுரிந்தான். 1934_ல் கோட்சேயுடன் பழக்கம் ஏற்பட்டது.
புனாவில், துப்பாக்கி பயிற்சி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, இந்து இளைஞர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து வந்தான், ஆப்தே. பின்னர் கோட்சேயுடன் சேர்ந்து, 1944_ல் "தி அக்ரானி" என்ற பத்திரிகையைத் தொடங்கினான். அந்தப் பத்திரிகையை வெள்ளையர் அரசாங்கம் தடை செய்தது. பின்னர் 13.7.1947_ல், இருவரும் சேர்ந்து "தி ஹிந்து ராஷ்டிரா" என்ற பத்திரிகையைத் தொடங்கினர். இதன் ஆசிரியர் கோட்சே; நிர்வாகி ஆப்தே. இதில், மகாத்மா காந்தியை கடுமையாகத் தாக்கியும், பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காரசாரமாகக் கட்டுரைகள் எழுதி வந்தனர்.
ஆப்தே, எல்லோருடனும் கலகலப்பாக பழகும் சுபாவம் உடையவன். ஆங்கிலம் பிரமாதமாகப் பேசுவான். பெண் சினேகிதிகள் ஏராளம். இவனுடைய முதல் குழந்தை ஊனமாகப் பிறந்தது. அதனால் மனைவி மீது ஆசை போய்விட்டது. பிற பெண்களின் மீது மோகம் அதிகரித்தது. ஓட்டல்களில் பணிபுரியும் பெண்கள், விமானப் பணிப்பெண்கள், காபரே நடனம் ஆடும் பெண்கள் இப்படி பலரகப்பட்ட பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தான். இந்தப் பெண் ஆசையால்தான், காந்தி கொலையில் இவன் போலீசாரிடம் சிக்க நேர்ந்தது, கைரேகை, ஜோசியம் என்றால் ஆப்தேக்கு ஒரே பைத்தியம். அவனுக்கும் ஜோதிடம் பார்க்கத் தெரியும். விலை உயர்ந்த மேல் நாட்டு மது, மராட்டியரின் இனிப்பு வகைகள், நல்ல உடல் கட்டு உடைய பெண்கள் என்றால் ஆப்தேக்கு ரொம்பவும் பிடிக்கும்.
3வீரசவர்க்கார் 1883 மே 28_ந்தேதி பிறந்தவர். லண்டனில் சட்டம் (பார்_அட்_லா) படிக்கச் சென்றவர். சுதந்திரப் போராட்ட தீவிரவாதி. லண்டனில் ஒரு வெள்ளைக்கார அதிகாரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இந்தியாவுக்குக் கப்பலில் அனுப்பப்பட்டார். அப்போது கப்பலில் இருந்து தப்பி, கடலில் குதித்து நீந்தி, பிரான்சுக்குப்போனார். பிறகு போலீசாரிடம் பிடிபட்டார். அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டார். 10 ஆண்டு காலம் சிறையில் கழித்தார். விடுதலை அடைந்த பிறகு, "இந்து மகா சபை"யைத் தொடங்கினார். இந்து _ முஸ்லிம் ஒற்றுமை எக்காலத்திலும் ஏற்படாது என்று கருதினார். காந்தியின் அகிம்சை கொள்கையை எதிர்த்தார். கோட்சேயும், ஆப்தேயும் இவருடைய சீடர்கள். லண்டனில் இருந்தபோது, காந்தியை சவர்க்கார் சந்தித்துப் பேசி இருக்கிறார்.பின்னர் சவர்க்காரின் சொந்த ஊருக்கு காந்தி சென்றிருந்தபோதும், இருவரும் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள்.
4நாதுராம் விநாயக் கோட்சேயின் தம்பி. வயது 29. மெட்ரிகுலேஷன் தேறியவன். புனாவில் உள்ள ராணுவ தளவாடக் கிடங்கின் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி வந்தான். இந்து மகா சபையின் துணை அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட விரும்பினான்.
5விஷ்ணு கார்கரே: வயது 34. இளமையிலேயே வறுமையை அனுபவித்தவன். அனாதை விடுதியில் வளர்ந்து ஓட்டலிலும், நாடகக் கொட்டகையிலும் வேலை பார்த்தவன். சில சமயம் பழ வியாபாரம் செய்திருக்கிறான். பிறகு சிறிய ஓட்டல் ஆரம்பித்தான். ஆப்தேயின் நட்பு கிடைத்தது. அவன் உதவியுடன் தன் உணவு விடுதியை விரிவுபடுத்தி, "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" என்ற பெயரில் ஓட்டல் நடத்த ஆரம்பித்தான்.இந்து மகாசபையின் ஒரு பிரிவான "ஆர்.எஸ்.எஸ்" அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. "இந்து மகாசபை"யின் கிளை செயலாளராக நியமிக்கப்பட்டான்.
6 மதன்லால் பாவா (வயது 20). காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மிகவும் இளையவன். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவன். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு ஓடிவந்தான், இவன் தந்தையை பாகிஸ்தானியர் தாக்கியதால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதனால் முஸ்லிம்களை மதன்லால் வெறுத்தான். இவனுக்கும், "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" விடுதியை நடத்தி வந்த விஷ்ணு கார்கரேக்கும் அறிமுகம் ஏற்பட்டது. முஸ்லிம்கள் மீதான பகை இருவரையும் நண்பர்களாக்கியது.
6திகம்பர ராமச்சந்திர பாட்ஜே: வயது 37. மராட்டியத்தில் சாலீங்கான் நகரத்தைச் சேர்ந்தவன். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, புனா நகரசபையில் சின்ன வேலையில் சேர்ந்தான். வருமானம் போதவில்லை என்று சொந்தத் தொழில் செய்ய விரும்பினான். இவனது தந்தை, "பாதுகாப்பு கவசம்" செய்வதில் நிபுணர். தந்தையிடம் அந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டு, பிறகு கத்தி, நாட்டு வெடிகுண்டு, கையெறி குண்டு முதலியவற்றைத் தயாரிக்கலானான். இதன் மூலம், முஸ்லிம்களுக்கு எதிராகப்போராடும் இந்து தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. பல பயங்கர ஆயுதங்கள் தயாரித்து இந்து தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்ய ஆரம்பித்தான். சற்று குள்ளமான பாட்ஜே, எப்போதும் காவி உடை அணிந்து, நீண்ட தலை முடியுடன் சாமியார் போல காட்சி அளிப்பான். ஆயுதம் தயாரிப்பதுடன், ஆயுதங்களை கடத்தி விற்பதும் இவனது முக்கியத்தொழில். சங்கர் கிஸ்தியா. பாட்ஜேயின் வேலைக்காரன். ஒரு சாதாரண தச்சுத்தொழிலாளியின் மகன். முரட்டு ஆசாமி. பாட்ஜேயின் உத்தரவுப்படி, ஆயுதங்களை ரக சியமாகக் கடத்திச்சென்று, தீவிரவாதிகளிடம் கொடுப்பது, இவனுடைய முக்கிய வேலை. பாட்ஜேயின் ஆயுதப்பட்டறையில் கத்திக்கு சாணை பிடிப்பது, துப்பாக்கிகளுக்கு தேவையான குண்டுகளைத் தயாரிப்பது போன்ற வேலைகளிலும் வல்லவன்.
7சதாசிவபார்ச்சூர்: வயது 47. குவாலியர் நகரில் டாக்டராக பணி புரிந்தவர். கோட்சேக்கு துப்பாக்கி கொடுத்து உதவினார்
கொலைத்திட்டம்,
.சாமியார் வேடத்தில் ஆயுத வியாபாரம் செய்து வந்த திகம்பர் பாட்ஜேயை 1948 ஜனவரி 10ந்தேதி ஆப்தேயும், கோட்சேயும் சந்தித்தனர். "ஒரு முக்கியமான காரியத்துக்காக துப்பாக்கியும், வெடிகுண்டுகளும், கையெறி குண்டுகளும் தேவைப்படுகின்றன. அதற்குரிய தொகையை உடனடியாக ரொக்கமாகக் கொடுக்கத் தயார்" என்று பாட்ஜேயிடம் ஆப்தே கூறினான். ஆப்தேயும், கோட்சேயும் இந்து தீவிரவாதிகள் என்பது சாமியார் பாட்ஜேக்குத் தெரியும்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுவதற்காக இந்த ஆயுதங்களைக் கேட்கிறார்கள் என்று நினைத்தானே தவிர காந்தியைக் கொல்வதற்காக என்பதை அறியவில்லை. பாட்ஜேயிடம் அப்போது துப்பாக்கி இல்லை. என்றாலும் பணம் வரக்கூடிய ஒரு நல்ல வியாபாரத்தை இழந்துவிட அவன் விரும்பவில்லை. "ஜனவரி 14ந்தேதி பம்பாயில் என்னை சந்தியுங்கள். நீங்கள் கேட்கும் எல்லா ஆயுதங்களையும் தருகிறேன்" என்றான். "அப்படியானால் பம்பாயில் இந்து மகாசபை அலுவலகத்தில் சந்திப்போம்" என்று பதிலளித்தான், ஆப்தே. காந்தியை கொலை செய்யும் திட்டத்தில் தானும் உயிர் இழக்கப்போவது உறுதி என்பதை கோட்சே உணர்ந்திருந்தான். அவன் ஏற்கனவே ரூ.3 ஆயிரத்துக்கும், ரூ.2 ஆயிரத்துக்கும் இரண்டு இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுத்திருந்தான்.
ஜனவரி 13ந்தேதி மாலை கோட்சேயும் ஆப்தேயும் புனாவில் இருந்து பம்பாய்க்கு புறப்பட்டார்கள். மறுநாள் மாலை பம்பாய் போய்ச் சேர்ந்தார்கள். அன்றிரவு 7.30 மணிக்கு அவர்கள் இந்து மகாசபைத் தலைவர் வீரசவர்க்காரை சந்தித்தார்கள். பிறகு இந்து மகாசபை அலுவலகத்திற்குச் சென்றார்கள். அங்கு இவர்களை சாமியார் பாட்ஜே சந்தித்தான். துப்பாக்கியைத் தவிர மற்ற எல்லா ஆயுதங்களையும் கொடுத்தான். "எப்படியும் ஒரு நாட்டுத்துப்பாக்கியையாவது வாங்கித் தருகிறேன்" என்று உறுதியளித்தான். "நீ கொடுத்துள்ள ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று எனக்கோ, கோட்சேக்கோ தெரியாது. எனவே பயிற்சியளிக்க எங்களுடன் நீயும் டெல்லிக்கு வா. கூடுதலாகப் பணம் தருகிறேன்" என்று பாட்ஜேயிடம் ஆப்தே கூறினான்.
சாமியார் பாட்ஜேக்கு பணத்தின் மீது ஆசை அதிகம். எனவே டெல்லிக்கு வர சம்மதம் தெரிவித்தான். ஆப்தேயும், கோட்சையும் காந்தியைக் கொலை செய்யும் திட்டத்துடன் டெல்லி போகிறார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. இதன்பின் பம்பாயில் புகழ் பெற்ற "சீ கிரீன் ஓட்டல்" என்ற ஓட்டலில் கோட்சேயும், ஆப்தேயும் தங்கினார்கள். பாட்ஜே, கார்கரே, மதன்லால் ஆகியோரை இந்துமகாசபை அலுவலகத்தில் தங்க வைத்தார்கள். கோட்சே அசதியில் தூங்கிவிட்டான். ஆப்தே தன் பெண் சிநேகிதிக்கு போன் செய்தான். அவள் டாக்டர் ஒருவரின் மகள். "நாளை நான் டெல்லிக்கு போகிறேன். இன்று உன்னை சந்திக்க விரும்புகிறேன்" என்று டெலிபோனில் கூற அவள் சம்மதம் தெரிவித்தாள். கோட்சே தூங்கிவிட்டதால் அவனுக்குத் தெரியாமல் ஆப்தே அங்கிருந்து வெளியேறி தன் காதலியைச் சந்தித்தான். அவளுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஓட்டலுக்குத் திரும்பினான். பொழுது விடிந்தது.
கோட்சேயும், ஆப்தேயும் இந்துமகாசபை அலுவலகத்துக்குச் சென்று தங்களுடைய நண்பர்களைச் சந்தித்தனர். கோட்சேயும், ஆப்தேயும் டெல்லிக்கு விமானத்தில் செல்வது என்றும் மற்றவர்கள் வெவ்வேறு ரெயில்களில் டெல்லிக்கு செல்வது என்றும் டெல்லியில் இந்து மகாசபை அலுவலகத்தில் ("சவர்க்கார் சதன்") அனைவரும் சந்தித்துப் பேசுவது என்றும் முடிவாயிற்று.
இதற்கிடையே பாட்ஜே ஏற்கனவே உறுதியளித்தவாறு நாட்டுத்துப்பாக்கி ஒன்றை கொண்டுவந்து கொடுத்தான். எனினும் அது கோட்சேக்கு திருப்தி இல்லை. தம்பி கோபால் கோட்சேயிடம் ரூ.200 கொடுத்து நல்ல துப்பாக்கி ஒன்றை வாங்கி வருமாறு கூறினான். பிறகு கோட்சேயும், ஆப்தேயும் பம்பாய் "ஏர் இந்தியா" விமானப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று, டி.என்.கார்மார்க்கர், எஸ்.மராத்தே என்ற போலிப் பெயர்களில் இரண்டு டிக்கெட்டுகளை ரிசர்வ் செய்தனர்.
பின்னர் ஒரு ஜவுளி மில்லுக்குச் சென்று நன்கொடையாக ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டார்கள். திட்டமிட்டபடி 17ந்தேதி பம்பாயில் இருந்து டெல்லிக்குப் பயணம் ஆனார்கள். அன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லிக்குப் போய்ச்சேர்ந்த கோட்சேயும், ஆப்தேயும், கனாட் சர்க்கஸ் என்ற பரபரப்பான பகுதியில் இருந்த "மரினா" என்ற ஓட்டலில் தங்கினார்கள்.
உண்மைப் பெயர்களை கூறாமல், எஸ்.தேஷ்பாண்டே, எம்.தேஷ்பாண்டே என்ற பெயர்களில் அறை எடுத்தார்கள். மதன்லால், கார்கரே ஆகியோர் முன்பு பேசியபடி ரெயில் மூலம் டெல்லிக்குச் சென்றனர். "இந்து மகாசபை" அலுவலகத்தில் இடம் கிடைக்காததால், சாந்தினிசவுக் என்ற இடத்தில் உள்ள ஷெரீப் ஓட்டலில் அறை எடுத்தனர்.
கார்கரே தன் பெயரை "பி.எக்ஸ்.பியாஸ்" என்று குறிப்பிட்டான். ஆனால் மதன்லால், தன் உண்மைப் பெயரையே கூறினான். (உண்மைப்பெயரில் அறை எடுத்ததால், காந்தி கொலை வழக்கில் இவன் சுலபமாக சிக்க நேரிட்டது). அண்ணன் கொடுத்த ரூ.200 ஐக்கொண்டு ஒரு கைத்துப்பாக்கியை வாங்கிக்கொண்டு கோபால் கோட்சே 19_ந்தேதி டெல்லி போய்ச்சேர்ந்தான். போலி சாமியார் பாட்ஜேயும், தன் வேலையாள் சங்கர் கிஸ்தயாவுடன் வேறு ரெயிலில் 19_ந்தேதி டெல்லியை அடைந்தான். மறுநாள் ஆப்தேயை கார்கரே சந்தித்தான்.
இந்து மகாசபாவில் தனக்கு அறை கிடைக்கவில்லை என்றும் வேறு இடத்தில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தான். ஆப்தே ஒரு துண்டுச் சீட்டில் ஏதோ எழுதி "இதை இந்து மகாசபை செயலாளரிடம் கொண்டு போய் கொடு. ரூம் கிடைக்கும்" என்றான். அதன்படியே அங்கு சென்று துண்டுச்சீட்டைக் காட்டியதும் அறை கிடைத்தது. கோபால் கோட்சே 19_ந்தேதி டெல்லி வந்து சேர்ந்து தன் அண்ணனை சந்தித்தான். அன்று மாலை பிர்லா மாளிக்கைக்கு சென்ற கோபால் கோட்சே, பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியை முதன் முதலாகப் பார்த்தான்.
நிறைய போலீசார் சாதாரண உடை அணிந்து ("மப்டி"யில்) கூட்டத்தோடு கலந்திருப்பதையும் கவனித்தான். காந்தியை சுட்டுவிட்டு, போலீசாரிடமிருந்து தப்பிச் செல்வது கடினம் என்று அவனுக்குத் தோன்றியது. பின்னர் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே ஆகியோர் மரினா ஓட்டலில் சந்தித்துப் பேசினார்கள். கொலைத்திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று முடிவு செய்யும் முழு அதிகாரமும் ஆப்தேக்கு வழங்கப்பட்டது.
நீண்ட ஆலோசனைக்குப்பின் "1948 ஜனவரி 20_ந்தேதி மாலை 5 மணிக்கு பிர்லா மாளிகையில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தியை சுட்டுக் கொல்லவேண்டும்" என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது சாமியார் பாட்ஜே அந்த அறையில் இல்லை. வேறொரு அறையில் இருந்தான். அவனை ஆப்தே அழைத்து, "வெடிகுண்டை எப்படி வெடிக்கச்செய்வது?" என்பதை விளக்கிக் காட்டும்படி கேட்டுக்கொண்டான்.ஏதோ வன்முறை ஆர்ப்பாட்டத்துக்குத்தான் ஏற்பாடு செய்கிறார்கள் என்று ஊகித்த பாட்ஜே, வெடிகுண்டை இயக்குவது பற்றி விளக்கினான். மறுநாள் காலை பாட்ஜே, சங்கர் கிஸ்தயா ஆகியோருடன் ஆப்தே பிர்லா மாளிகைக்கு சென்றான். எந்த இடத்தில் இருந்து காந்தியை நோக்கி குண்டு வீசலாம், எங்கிருந்து துப்பாக்கியால் சுடலாம் என்று ஆராய்ந்தான். "பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வருகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடலில் சோதனையிடக்கூடாது" என்று காந்தி கண்டிப்பாக கூறியிருந்தார்.
இதன் காரணமாக கூட்டத்துக்கு வருகிறவர்களை சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்க வேண்டுமே தவிர, யாரையும் சோதனைபோடவேண்டாம் என்று உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் உத்தரவிட்டிருந்தார். இதை அறிந்த ஆப்தே மகிழ்ச்சி அடைந்தான். பின்னர் இவர்களுடன் கோட்சே, கோபால் கோட்சே, கார்கரே, மதன்லால் ஆகியோரும் வந்து சேர்ந்து கொண்டனர். இந்து மகாசபையின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றனர்.
பாட்ஜேயின் நாட்டுத்துப்பாக்கியும், கோபால் கோட்சேயின் கைத்துப்பாக்கியும் சரியாக இயங்குகின்றனவா என்று பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. துப்பாக்கிகள் இலக்கை சரியாகப் போய்த் தாக்கக்கூடிய வேகத்துடன் இல்லை என்று கோட்சே கருதினான். "என் துப்பாக்கி நீண்ட காலம் பயன்படுத்தப்படாததால் துரு பிடித்திருக்கிறது. கொஞ்சம் எண்ணையும், ஒரு சிறு கம்பியும் இருந்தால் சரி செய்துவிடலாம்" என்றான் கோபால் கோட்சே. மதன்லால் போய் அந்த இரண்டு பொருள்களையும் வாங்கி வந்தான். அதைக்கொண்டு துப்பாக்கியை சரி செய்தான் கோபால் கோட்சே. இவர்கள் அந்த இடத்திலிருந்து திரும்பிச் செல்லும்போது, மெகர்சிங் என்ற காட்டிலாகா அதிகாரி அங்கு வந்து அவர்களைத் தடுத்து நிறுத்தினார். "ஆட்கள் நடமாட்டம் இல்லாத இந்தக் காட்டில் உங்களுக்கு என்ன வேலை?" என்று கேட்டார் அந்த அதிகாரி. "நாங்கள் டெல்லியைச் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணிகள்" என்றான், ஆப்தே. மதன்லால் பஞ்சாபி மொழியில் பேசி, மெகர்சிங்கை நம்பும்படி செய்தான். (இந்த மெகர்சிங் பிறகு காந்தி கொலை வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக வந்து கொலையாளிகளை அடையாளம் காட்டினார்.)
மரினா ஓட்டலுக்குத் திரும்பிய இவர்கள் அன்று மாலை காந்தியை கொலை செய்யும் திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தனர். அந்தத் திட்டம் வருமாறு:
ஒரே சமயத்தில் காந்தி மீது பலமுனைத் தாக்குதல் நடத்தவேண்டும். சாதகமான நேரம் வந்ததும், கோட்சே தன் கன்னத்தைச் சொறிவது போல, ஆப்தேக்கு "சிக்னல்" கொடுக்கவேண்டும். உடனே ஆப்தே தன் கைகளை உயர்த்தி, மாளிகையின் பின்புறம் சுவர் அருகே வெடிகுண்டுகளுடன் காத்திருக்கும் மதன்லாலுக்கு சைகை காட்ட வேண்டும். உடனே மதன்லால் வெடிகுண்டை வெடிக்கச்செய்ய வேண்டும்.
வெடிச்சத்தத்தைக் கேட்டதும் கூட்டத்தில் குழப்பம் ஏற்படும். உடனே கார்க்கரே காந்தி மீது கையெறி குண்டை வீசவேண்டும். அதே சமயம் பிரார்த்தனை மண்டபத்தின் பின் சுவரில் உள்ள சிறு ஜன்னல் வழியாக காந்தியின் தலையை நோக்கியோ, முதுகை நோக்கியோ கையெறிகுண்டை கோபால் கோட்சே வீச வேண்டும். கோபால் அருகிலிருந்து காந்தியை நோக்கி சாமியார் பாட்ஜே துப்பாக்கியால் சுடவேண்டும். சங்கர் கிஸ்தியா கூட்டத்தில் இருந்துகொண்டு காந்தி மீது எறிகுண்டை வீசுவதுடன் துப்பாக்கியாலும் சுடவேண்டும்." மேற்கண்டவாறு முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஏதாவது தவறு ஏற்பட்டு யாராவது போலீசில் பிடிபட்டால் எப்படிப்பட்ட சித்ரவதை செய்தாலும் மற்றவர்களைக் காட்டிக்கொடுக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் விசுவாசமாக நடந்து கொள்ளவேண்டும் என்று இந்து மதத்தின் பெயரால் அனைவரும் சத்தியம் செய்து கொண்டார்கள். பின்னர் பிர்லா மாளிகைக்குப் புறப்படத் தயாரானார்கள்,
காந்தியை கொல்ல முதல் முயற்சி,,,,
காந்திஜியின் பிரார்த்தனை கூட்டத்துக்கு செல்லும்போது தங்களை யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்று கோட்சேயும், மற்றவர்களும் நினைத்தனர். கோட்சே, மராத்திய பாணியில் உடை அணிந்து கொண்டான். ஆப்தே வேட்டி சட்டையிலும், மதன்லால் மேற்கத்திய உடையிலும் இருந்தனர். கார்கரே நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு பிராமணர் போலத்தோன்றினான். ஒவ்வொருவருக்கும் புதிய புனை பெயர்கள் சூட்டப்பட்டதுடன், அவரவர்களுக்கு உரிய ஆயுதங்களும் தரப்பட்டன. கோட்சே, மதன்லால், கார்கரே ஆகியோர் குதிரை பூட்டிய சாரட்டு வண்டிகளில் ("டோங்கா") தனித்தனியே புறப்பட்டனர். ஆப்தேயும், மற்றவர்களும் ஒரு காரில் சென்றனர். ஏற்கனவே திட்டமிட்டபடி, கோபால் கோட்சேயும், சாமியார் பாட்ஜேயும் பிர்லா மாளிகையின் பின்புறமுள்ள குடியிருப்பு பகுதியின் வழியாக உள்ளே நுழைய வேண்டும். அவர்களை அங்கு கொண்டு போய் விடுவதற்காக ஆப்தேயும், கார்கரேயும் உடன் சென்றனர்.
வழியில் பிர்லா மாளிகையின் ஊழியர் (கார் கழுவும் சிப்பந்தி) சோதிராம் என்பவர் அவர்களை வழிமறித்து, "எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டார். "காந்தி பிரார்த்தனை கூட்டத்தில் பேசும்போது பின்பக்கம் இருந்து அவரை போட்டோ எடுக்கப் போகிறோம்" என்று கார்கரே பதில் அளித்தான். "எங்கே கேமராவை காட்டுங்கள்" என்று சோதிராம் கேட்க, உடனே ஆப்தே, வெடிப்பொருள்கள் அடங்கிய பெட்டியை காண்பித்து, "இதற்குள்தான் கேமரா இருக்கிறது" என்றான்.
சோதிராம் தயங்கவே, கார்கரே இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து சோதிராமின் கையில் அழுத்தினான். உடனே அவர்களுக்கு வழிவிட்டான் சோதிராம். சாமியார் பாட்ஜே, கோபால் கோட்சே இருவரையும் ஜன்னல் அருகே விட்டு விட்டு, ஆப்தே திரும்ப முயன்றபோது, "கொஞ்சம் நில்லுங்கள்" என்று கூறினான், பாட்ஜே. அவன் குரலில் கோபம் தொனித்தது. "நான் உங்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்தேன். அவற்றை இயக்கிக் காட்டவே வந்தேன். மகாத்மா காந்தியை கொலை செய்யும் திட்டத்தில் நான் சேரமாட்டேன்" என்று கூறிய பாட்ஜே,"நான் மத வெறியன் அல்ல.
ஆயுதங்களை விற்பவன் என்றாலும் என் கையால் யாரையும் சாகடிக்க மாட்டேன்" என்று கூறிவிட்டு தரையில் உட்கார்ந்து விட்டான். பாட்ஜே இப்படி கடைசி நேரத்தில் பின்வாங்குவான் என்று ஆப்தே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனவே அப்படியே திகைத்துப்போய் நின்றான். "காந்தியை கொலை செய்யப்போவதாக முன்பே நீங்கள் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் இந்த தேசத்துரோக காரியத்திற்கு நான் உடந்தையாக இருந்திருக்க மாட்டேன்" என்றான் பாட்ஜே.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. இனி அவனுடன் விவாதித்து பயனில்லை என்று ஆப்தே உணர்ந்தான். "அப்படியானால் நீ இங்கே இருக்க வேண்டாம். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு போய்விடு" என்று கூறினான். "காந்தியை சுடும் பொறுப்பை நீ நிறைவேற்று" என்று கோபால் கோட்சேயிடம் கூறிவிட்டு ஆப்தே அங்கிருந்து வெளியே விரைந்தான்.
கோபால் கோட்சே சுவரில் இருந்த ஜன்னலை நோக்கினான். அது மிக உயரத்தில் இருந்தது. தரையில் நின்று கொண்டு அதன் வழியாக யாராலும் சுடமுடியாது. ஏணி அல்லது நாற்காலி இருந்தால்தான் அதில் ஏறி காந்தியை நோக்கி சுடமுடியும். என்ன செய்வது என்று புரியாமல் கோபால் திகைத்தான். உண்ணாவிரதம் இருந்ததால் மிகவும் பலவீனமாக இருந்த காந்திஜியை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து பிரார்த்தனை நடைபெறும் இடத்திற்கு தூக்கி வந்தார்கள்.
கூட்டம் தொடங்கியது. "காந்தி மீது பலமுனை தாக்குதல் நடத்த இதுவே நல்ல தருணம்" என்று நினைத்தான் கோட்சே. தன் கன்னத்தை சொறிந்து ஆப்தேக்கு சமிக்ஞை செய்தான். உடனே ஆப்தே தன் கையை உயர்த்தி குண்டை வெடிக்கச் செய்ய மதன்லாலுக்கு சிக்னல் கொடுத்தான். பிர்லா மாளிகையின் பின்புறச் சுவர் அருகே நின்று கொண்டிருந்த மதன்லால், தன் வசம் இருந்த குண்டை வெடிக்கச் செய்தான். குண்டு வெடித்தது. பிர்லா மாளிகையின் பின்புறச்சுவரின் ஒரு பகுதி தகர்ந்தது. இந்த சத்தத்தினால் கூட்டத்தில் குழப்பம் ஏற்படவே கார்கரே நெரிசலில் சிக்கி பின்னுக்குத் தள்ளப்பட்டான். அந்த இடத்தில் இருந்து காந்தி மீது அவன் கை குண்டை வீசமுடியாத நிலை ஏற்பட்டது.
ஜன்னல் வழியாக காந்தியின் தலையை நோக்கி சுடவேண்டிய கோபால் கோட்சேயும், ஜன்னல் உயரமாக இருந்த காரணத்தால் சுட முடியவில்லை. காந்திக்கும், அவரைச்சுற்றி இருந்தவர்களுக்கும் என்ன நடந்தது என்பதே தெரியாது. பிர்லா மாளிகைக்கு அருகே ராணுவத்தினர் எதையாவது வெடித்து ஒத்திகை பார்ப்பது வழக்கம். வெடிச்சத்தத்தைக் கேட்ட காந்தியும், மற்றவர்களும் அதை வழக்கமான ராணுவ ஒத்திகை என்றே நினைத்தனர். பிரார்த்தனைக் கூட்டம் தடங்கல் இன்றி நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையே பிர்லா மாளிகைப் பூங்காவுக்கு தனது இரண்டு குழந்தைகளுடன் வந்திருந்த சுலோசனாதேவி என்ற பெண் வெடிகுண்டை மதன்லால் வெடித்ததையும், பிறகு அவன் தப்பி ஓட முயற்சிப்பதையும் பார்த்துவிட்டாள்.
"பிடியுங்கள்! பிடியுங்கள்!" என்று கூச்சலிட்டாள். அந்தப் பகுதியில் இருந்த ஒரு ராணுவ அதிகாரியும், சில போலீசாரும், மற்றும் சிலரும் மதன்லாலை சுற்றி வளைத்துப் பிடித்துக்கொண்டனர். அவன் திமிறிக்கொண்டு தப்பி ஓட முயன்றபோது, சரியான அடி_உதை விழுந்தது. அதனால் அவன் சட்டை கிழிந்தது. அவனை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பிர்லா மாளிகைக்குள் இழுத்துச்சென்றனர். மதன்லால் போலீசாரிடம் பிடிபட்டுவிட்டதை தூரத்தில் இருந்து கோட்சேயும், ஆப்தேயும் மற்றவர்களும் பார்த்தனர்.
இனி தப்பி ஓடுவதுதான் புத்தசாலித்தனம் என்ற முடிவுக்கு வந்து அந்த இடத்தில் இருந்து நழுவத் தொடங்கினர். கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே ஆகியோர் காரில் தப்பிச்சென்றனர். வழியில் தன் தம்பியிடம் கோட்சே சொன்னான்: "மதன்லால் மூலம் போலீசார் உன்னைப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. போலீசாரிடம் சிக்காமல் நீ எப்படியாவது புனாவுக்குச் சென்றுவிடு. அதுதான் உனக்கும் உன் குடும்பத்துக்கும் நல்லது. மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதே. காந்தியை நான் கவனித்துக்கொள்கிறேன். துணிந்தவனுக்கு தோல்வி என்பதே இல்லை." இப்படிக் கூறிய கோட்சே வழியில் காரை நிறுத்தி கோபாலை இறக்கிவிட்டான்.
பிறகு கோட்சேயும், ஆப்தேயும் மரினா ஓட்டலுக்குச் சென்றனர். அறையை உடனடியாக காலி செய்துவிட்டு டெல்லி ரெயில் நிலையத்துக்கு விரைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி அருகில் உள்ள துக்ளக் ரோடு போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அந்த நிலையத்தின் சப்_இன்ஸ்பெக்டர் தசோந்தாசிங் உடனே பிர்லா மாளிகைக்கு விரைந்தார். மதன்லாலை அவர் பரிசோதித்தார். மதன்லால் தன் உடலில் இன்னொரு கையெறி குண்டை மறைத்து வைத்திருந்தான்.
அதை போலீஸ் அதிகாரி கைப்பற்றி செயல் இழக்கச் செய்தார். மதன்லாலை "விசாரிக்க வேண்டிய விதத்தில்" விசாரித்தால், உண்மையைக் கக்கிவிடுவான் என்று போலீசார் கருதினர். அதன்படி போலீஸ் காவலில் வைத்து விசாரித்தார்கள். சித்ரவதைக்குள்ளான மதன்லால் உண்மையைக் கக்கினான். போலீசாரிடம் அவன் கூறியதாவது:-
"நான் மட்டும்தான் சொன்னபடி செய்தேன். மற்றவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். எனக்கு துரோகம் செய்த அவர்களைப் பிடிக்க நான் ஒத்துழைக்கிறேன்.
என்னுடன் வந்தவர்கள் மொத்தம் 6 பேர். அவர்கள் ஓட்டல் மரினாவிலும், இந்துமகா சபை அலுவலகத்திலும் இருப்பார்கள். " இவ்வாறு மதன்லால் கூறினான். மதன்லாலுடன் ஓட்டல் மரினாவுக்கு போலீசார் விரைந்தனர். அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எப்படியும் மதன்லால் தங்களைக் காட்டிக்கொடுத்து விடுவான் என்று எதிர்பார்த்த கோட்சேயும், ஆப்தேயும் சுமார் மூன்று மணி நேரத்துக்கு முன்பே அறையை காலி செய்து விட்டுப் போய்விட்டது தெரிந்தது.
எஸ்.தேஷ்பாண்டே, எம்.தேஷ் பாண்டே என்ற பெயர்களில் கோட்சேயும், ஆப்தேயும் ஓட்டலில் ரூம் எடுத்திருந்தது விசாரணையில் தெரிந்தது. அவர்கள் தங்கி இருந்த அறையை சோதனையிட்டார்கள். கோட்சே "என்.வி.ஜி" என்று குறியிடப்பட்ட மூன்று உடைகளை சலவைக்குப் போட்டிருந்தான். அதற்கான ரசீது அந்த அறையில் சிக்கியது. இந்துமகா சபை பொதுச்செயலாளரின் ஆங்கிலத்தில் டைப் செய்யப்பட்ட கடிதம் ஒன்றும் போலீசுக்குக் கிடைத்தது. அதில் காந்திக்கு எதிரான வாசகங்கள் இருந்தன.
ஓட்டல் அறையை காலி செய்த கோட்சேயும், ஆப்தேயும் டெல்லியில் இருந்து கான்பூருக்கு ரெயிலில் செல்ல முடிவு செய்தனர். கோட்சேக்கு முதல் வகுப்பு டிக்கெட்டும், ஆப்தேக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டும் வாங்கப்பட்டன. அவர்கள் இருவரும் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் சென்றபோது அதிர்ச்சி தரும் காட்சியைக் கண்டார்கள்.
மதன்லாலை போலீசார் இழுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அவன் தலை கறுப்புத்துணியால் மூடப்பட்டு இருந்தது. கண்களால் பார்ப்பதற்காக இரண்டு துவாரங்கள் மட்டும் இருந்தன. "நன்றாகப் பார்! உன்னுடன் வந்த கொலையாளிகள் இங்கு இருக்கிறார்களா?" என்று மதன்லாலிடம் போலீசார் கேட்பது கோட்சேக்கும், ஆப்தேக்கும் கேட்டது. இருவரும் போலீசார் கண்களில் படாமல் ரெயிலில் ஏறினார்கள். ரெயில் புறப்படும் வரை அவர்களை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. மறுநாள் கான்பூர் போய்ச்சேர்ந்தார்கள். அடுத்த நாள் அங்கிருந்து ரெயிலில் புறப்பட்டு 23_ந்தேதி மாலை பம்பாய் போய்ச்சேர்ந்தார்கள்.
காந்தியை கொல்ல இரண்டாவது முயற்சி,,,,,,,,,,
மே 1944, காந்தி அகா கான் அரண்மணை சிறையில் இருந்து மலேரியா தாக்குதலினால் விடுவிக்கப்பட்டார். மருத்துவர் அறிவுறுத்தலின் படி பஞ்ச்கனி மலை வாழ்விடத்தில் தங்கவைக்கப்பட்டார். இவர் இருப்பிடத்தை எப்படியோ அறிந்து நாதுராம் கோட்சே குழுவினர் 20 இளைஞர்களுடன் சிறப்பு பேருந்தில் வந்திறங்கினர். மாலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை நோக்கி காந்தி எதிர்ப்பு வாசகங்களைக் கூறிக்கொண்டே மிகுந்த ஆவேசத்துடன் உள்ளே நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்த கூட்ட நெரிசலில் அவர்களால் காந்தியை நெருங்க முடியவில்லை காந்தியை பத்திரமாக அவர் தொண்டர்கள் அழைத்துச் சென்று விட்டனர்.
காந்தியை கொல்ல மூன்றாவது முயற்சி,,,,,,,,,
காந்தி முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வர்த்தை நடத்துவதற்காக செப்டம்பர் 9, 1944 ல் சேவாகிராம் ஆசிரமத்தை விட்டு மும்பைக்கு பயணமானார் வழியில் இந்து முன்னணியினர் இடைமறித்தனர். அவரை மும்பையில் ஜின்னாவுடன் சந்திப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த கூட்டத்தின் தலைவனாக நாதுராம் கோட்சே அவர்கள் காந்தியைக் கொல்வதற்கு முயன்றனர். அவர்களை காவலர்கள் தடுத்து எதற்கு காந்தியை கொல்வதற்கு முயல்கிறாய் என்று வினவியதற்கு வீர் சாவர்க்கர் கட்டளைப்படி அவரைக் கொல்லவேண்டும் என்று கூறினர். டாக்டர் சுசிசிலா நாயர் கப்பூர் ஆணையத்தின் முன் இவ்விவரங்களை அளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
காந்தியை கொல்ல நான்காவது முயற்சி,,,,,,,
ஜூன் 29,1946 ல் காந்திக்கென்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தொடர்வண்டியில் பிராயாணித்தபொழுது அத்தொடர்வண்டி மும்பை அருகேயுள்ள நேரல் க்கும் கர்ஜட் க்கும் இடையே தடம் புரண்டது. தொடர் வண்டியின் ஒட்டுநர் அறிக்கை இருப்புப்பாதையின் கடையாணிகளை விசமிகள் வேண்டுமென்றே காந்திக்கு குறிவைத்து கழற்றியுள்ளதால் தடம் புரண்டது என்ற அறிக்கையை சமர்ப்பித்தார். ஏனென்றால் காந்தியின் சிறப்பு தொடர்வண்டி மட்டுமே அவ்வழியில் செல்வதாயிருந்தது. வேறு எந்த வண்டியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவது முயற்சசி மகாத்மா சுட்டுக்கொல்லப்பட்டார்,,,,,,, காந்தி கொலை முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது என்பது பற்றி அலசி ஆராய்ந்தார்கள். அடுத்து என்ன செய்வது என்பது பற்றியும் விவாதித்தனர். "பல பேர் கூட்டமாகச் சேர்ந்து மகாத்மாவை கொலை செய்யத் திட்டமிட்டோம். அது மாபெரும் தவறு. தனி நபராக இருந்து கொலை செய்வதுதான் பலனளிக்கும்" என்றான் ஆப்தே.
நானே தனி மனிதனாக காந்தியை சுட்டுக்கொல்கிறேன்" என்று சபதம் செய்தான் கோட்சே. "ஒருவேளை இம்முறை காந்தி உயிர் தப்பிவிட்டால் பிறகு அவரை மீண்டும் கொல்ல முயற்சி செய்யமாட்டேன்" என்றும் தெரிவித்தான்.
கோட்சேயும், ஆப்தேயும் முயற்சி செய்து எப்படியாவது ஒரு நல்ல துப்பாக்கியை வாங்க"பாங்க் சில்வர்" என்ற கம்பெனிக்கு சென்று ஹிந்து ராஷ்டிரா அமைப்புக்காக ரூ.10 ஆயிரம் கடன் பெற்றுக்கொண்டார்கள்.
27_ந்தேதி காலை 6.30 மணி விமானத்தில் பம்பாயில் இருந்து டெல்லிக்குப் பயணம் ஆனார்கள். வி.விநாயக்ராவ் என்ற பெயரில் கோட்சேயும் டி.நாராயணராவ் என்ற பெயரில் ஆப்தேயும் பயணம் செய்தனர்.
ரெயில் மூலம் குவாலியர் நகருக்கு சென்றார்கள். அங்கு இந்து தீவிரவாதியான டாக்டர் பார்ச்சூரை சந்தித்து துப்பாக்கி தேவைப்படுவதாக கூறினார்கள். இதில் ஏதாவது பிரச்சினை வரலாம் என்று நினைத்த டாக்டர் பார்ச்சூர், "கங்காதர் தாந்த்வாதே என்பவரை சந்தியுங்கள். அவரிடம் துப்பாக்கி கிடைக்கும்" என்றார். அதன்படி தாந்த்வாதேயை சந்தித்தனர். அவன், ஜகதீஷ் பிரசாத் கோயல் என்பவன் மூலமாக 300 ரூபாய்க்கு கறுப்பு நிற துப்பாக்கி (பெராட்டா பிஸ்டல்) ஒன்றை வாங்கித் தந்தான்.
மகிழ்ச்சி அடைந்த கோட்சேயும், ஆப்தேயும் குவாலியரை விட்டு ரெயிலில் புறப்பட்டு, 29_ந்தேதி காலை பழைய டெல்லிக்குப் போய்ச்சேர்ந்தார்கள். ரெயில்வே நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறை ஒன்றை "விநாயக் ராவ்" என்ற பெயரில் எடுத்து தங்கினார்கள். அங்கு அவர்களை கார்கரே சந்தித்தான். "துப்பாக்கி கிடைத்துவிட்டது" என்று அவனிடம் கோட்சே மகிழ்ச்சியுடன் கூறினான். "நாளை (30_ந்தேதி) காந்தியை சுடப்போகிறோம். இன்றிரவு நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்" என்று கோட்சே கூறினான்.
கார்கரே எப்போதும் சைவ சாப்பாடு சாப்பிடுபவன். எனவே மூவரும் சைவ சாப்பாடு சாப்பிட முடிவு செய்தனர். அரிசி சோறு, தயிர், சப்பாத்தி, காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டனர். பின்னர் அறைக்குத் திரும்பினர். தனக்கு மறுநாள் உள்ள பெரும் பொறுப்பை உணர்ந்திருந்த கோட்சே நன்றாக ஓய்வு எடுக்க விரும்பி படுக்கையில் போய் படுத்துக்கொண்டான். தூக்கம் வராததால் ஒரு துப்பறியும் நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்தான். ஆப்தேயும், கார்கரேயும் ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு சினிமாத் தியேட்டருக்குச் சென்று ஆங்கிலப்படம் பார்த்தனர். மறுநாள் காலை ரெயில்வே கேண்டினில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மூவரும் பிர்லா மாளிகைக்கு சென்றனர். பிரார்த்தனை கூட்டத்துக்கு காந்தி வரும்போது நேருக்கு நேர் நின்று அவரை சுடப்போவதாக கோட்சே தெரிவித்தான்.
காந்தியை கோட்சே சுடும்போது அவனுக்கு இடைஞ்சலாக எதுவும் நிகழாமல் தடுக்க அவனுக்கு இரு புறத்திலும் ஆப்தேயும், கார்கரேயும் பாதுகாப்பாக நிற்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. பிறகு பிர்லா மாளிகையின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்கள். துப்பாக்கியை இயக்குவது எப்படி என்று அங்கு பயிற்சி பெற்றான் கோட்சே. மொத்தம் இருந்த 20 குண்டுகளில் 13 குண்டுகளை சுட்டுப் பழகுவதற்கு செலவிட்டான். காட்டில் இருந்த மரம், அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆகியவற்றை ஆப்தே குறிப்பிட்டுக்காட்ட மிகச்சரியாக சுட்டான்கோட்சே. மீதி 7 குண்டுகளை துப்பாக்கியில் நிரப்பிக் கொண்டான். பின்னர் ரெயில் நிலைய ஓய்வு அறைக்குத் திரும்பினார்கள். காந்தியை சுடுவதற்கு பிர்லா மாளிகைக்குள் எப்படி நுழைவது என்று ஆலோசிக்கப்பட்டது. இரண்டு வழிகள் யோசிக்கப்பட்டன. முதலாவது கோட்சே புகைப்படம் எடுப்பவர்போல கேமராவுடன் உள்ளே நுழையவேண்டும். கேமராவுக்குள் துப்பாக்கியை மறைத்துக்கொண்டு போகலாம். அடுத்தது முஸ்லிம் பெண் போலஉடம்பை கறுப்பு நிற பர்தா துணியால் மூடிக்கொண்டு துப்பாக்கியை மறைத்துக்கொண்டு செல்லலாம். "முஸ்லிம் பெண் போல சென்றால் யாரும் சோதனை போடமாட்டார்கள். காந்தியின் அருகே செல்ல முடியும்" என்றான் கார்கரே.
"முஸ்லிம் பெண்மணி போல பர்தாவுக்குள் ஒளிந்துகொண்டுபோக நான் தயாராக இல்லை. அதைவிட காந்தியை சுடாமலேயே விட்டுவிடலாம்" என்றான் கோட்சே. "பெண் வேடத்தில் காந்தியை சுட முயன்று அதில் தோல்வி அடைகிறேன் என்று வைத்துக்கொள்வோம். முஸ்லிம் பெண் வேடத்தில் என் படம் பத்திரிகைகளில் வரும். அதைவிட வேறு அவமானம் எனக்கு வேறு என்ன இருக்கமுடியும்? உலகமே என்னைப் பார்த்து சிரிக்கும்" என்று கூறினான் அவன். புகைப்படக்காரன் போல கேமராவுக்குள் துப்பாக்கியைக் கொண்டு போகும் திட்டத்தை ஆப்தே விரும்பவில்லை. "இப்போது சிறிய கேமராக்கள் வந்துவிட்டன. நிகழ்ச்சிகளுக்கு பெரிய கேமராக்களை யாரும் கொண்டு போவதில்லை. தவிர கடந்த 20_ந்தேதி புகைப்படக்காரர்கள் என்ற வேடத்தில்தான் பிர்லா மாளிகைக்குச் சென்றோம். மீண்டும் அதே தோற்றத்தில் போவது ஆபத்து" என்று கூறினான். நீண்ட ஆலோசனைகளுக்குப்பின் கடைசியாக ஆப்தே ஒரு யோசனையைச் சொன்னான்.
அப்போது, டெல்லி இளைஞர்களிடையே ராணுவ மாடல் உடை என்பது பிரபலமாக இருந்தது. முழுக்கால் சட்டையில் லூசான சட்டையை "இன்" செய்து கொள்ளவேண்டும். இடுப்புப்பகுதியில் சட்டை தொளதொளப்பாக இருக்கும். அந்தப் பகுதியில் சிறிய கைத்துப்பாக்கியை சொருகிக் கொள்ளலாம். யாரும் கண்டுபிடிக்க முடியாது. ஆப்தே சொன்ன இந்த யோசனையை கோட்சே ஏற்றுக்கொண்டான். பிறகு கோட்சேயும், ஆப்தேயும் கடைக்குச்சென்று சாம்பல் நிறத்தில் ராணுவ மாடல் உடையை வாங்கிக்கொண்டு ரெயில் நிலைய ஓய்வு அறைக்கு சென்றார்கள். அந்த அறையில் தங்குவதற்கான நேரம் முடியவும் முதல் வகுப்பு பிரயாணிகளுக்கான ஓய்வு அறையை எடுத்து அங்கு தங்கினார்கள். மாலை 4 மணியாகியது. காந்தியைக் கொலை செய்யும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும்.என்ற எண்ணத்துடன் கோட்சேயும், மற்ற இருவரும் புறப்படத் தயாரானார்கள். 1948 ஜனவரி 30ந்தேதி வரலாற்றில் ரத்தக்கறை படிந்த நாள். அன்று மாலை 4.30 மணிக்கு கோட்சே, ஆப்தே, கார்கரே ஆகிய மூவரும் ஒரு சாரட்டு வண்டியில் ஏறி பிர்லா மாளிகைக்குச் சென்றார்கள். 4.45 மணிக்கு பிர்லா மாளிகையை அடைந்தார்கள். பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு காந்திஜி வரும் வழியில் படிக்கட்டின் அருகே நின்று கொண்டார்கள்.
காந்தி பிரார்த்தனை மண்டபத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது அவரை சுட்டுவிடவேண்டும் என்பதே கோட்சேயின் திட்டம். இப்போது அவன் திட்டத்தை மாற்றிக்கொண்டான். காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு செல்லும்போது வழியிலேயே சுட்டுவிடுவது நல்லது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.
"காந்தி எப்போது வருவார்?" என்று மூவரும் படபடப்புடனும், பதைபதைப்புடனும் காத்திருந்தார்கள். வழக்கமாக சரியாக ஐந்து மணிக்கு பிரார்த்தனைக் கூட்டம் ஆரம்பமாகிவிடும். அன்றைய தினம் காந்திஜியை சந்தித்துப்பேச உள் விவகார மந்திரி சர்தார் பட்டேல் வந்திருந்தார்.
பட்டேலுக்கும், பிரதமர் நேருவுக்கும் அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்படுவதும், அதுபற்றி அவர்கள் காந்தியிடம் முறையிடுவதும், இருவரையும் காந்தி அழைத்து சமாதானம் செய்வதும் வழக்கமாக இருந்தது. அன்றும் நேருவுடன் ஏற்பட்டுள்ள தகராறு பற்றி காந்தியிடம் பட்டேல் முறையிட்டார். "இருவரும் இவ்வாறு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது நல்லதல்ல" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு நேரம் ஆகிவிட்டதை ஆபா காந்தி நினைவூட்டினார்.
"நீங்கள் நாளை வாருங்கள். இதுபற்றி மீண்டும் பேசுவோம்" என்று பட்டேலிடம் காந்தி கூறினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி இருவரும் காந்தியின் இருபுறமும் வர, அவர்களுடைய தோள்களில் கை வைத்தபடி காந்தி நடந்தார். ஆபாவுடன் நகைச்சுவையாக பேசிக்கொண்டு சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். பத்து நிமிடம் தாமதமாகிவிட்டதால் காந்திஜி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று வணங்கி வழிவிட்டனர். பதிலுக்கு காந்தியும் கை கூப்பி வணங்கியபடி நடந்தார். காந்தி வழக்கமாக செல்லும் பாதை வழியே செல்லாமல் குறுக்குப்பாதையில் சென்றார். கோட்சே நின்ற பாதை வழியாகத்தான் அவர் செல்லவேண்டும். "நம் எண்ணம் எளிதாக நிறைவேறப்போகிறது" என்று நினைத்தான் கோட்சே.
யாரும் அறியாதவாறு இடுப்பிலிருந்த சிறிய துப்பாக்கியை எடுத்தான். இரு கைகளுக்கு இடையே அதை மறைத்துக்கொண்டான். சுடுவதற்குத் தயாராக விசையை இழுத்து வைத்தான். காந்தி நெருங்கியபோது கூட்டத்தை விலக்கிக்கொண்டு முன்னேறினான். காந்தியின் பாதங்களைத்தொட்டு வணங்கும் நோக்கத்துடன் அவன் வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலைத் தொட்டு வணங்குவதை காந்தி விரும்புவதில்லை.
எனவே "வேண்டாம்! பாபு விரும்பமாட்டார்" என்று மனு காந்தி தடுத்தார். மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளினான் கோட்சே. மனு காந்தியின் கையில் இருந்த காந்தியடிகளின் நோட்டுப்புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே சிதறி விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக மனு காந்தி கிழே குனிந்தார். கண் மூடி கண் திறப்பதற்குள் காந்திக்கு எதிரே நின்று அவர் மார்பை நோக்கி மூன்று முறை சுட்டான் கோட்சே. குண்டுகள் குறி தவறாமல் காந்திஜியின் நெஞ்சில் பாய்ந்தன. இரண்டு குண்டுகள், நெஞ்சை ஊடுருவி முதுகு வழியாக வெளியே சென்று விட்டன. ஒரு குண்டு இருதயத்தில் தங்கிவிட்டது. முதல் குண்டு பாய்ந்ததும் காந்திஜியின் கால்கள் தடுமாறின.
இரண்டாவது குண்டு பாய்ந்ததும் ரத்தம் பீறிட்டு அவருடைய உடையை நனைத்தது. "ஹே...ராம்" என்று அவர் இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும் தரையில் ஈரமண்ணிலும், புல் தரையிலும் சாய்ந்தார். அப்போது மணி 5.17. இவ்வளவும் அரை நிமிடத்திற்குள் நடந்து முடிந்துவிட்டன. என்ன நடக்கிறது என்பதை உணரக்கூட சக்தியற்றவர்களாய் கூடியிருந்தவர்கள் அப்படியே திகைத்து நின்றார்கள்.
சுட்டவுடன் கோட்சே தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. புகையும் துப்பாக்கியுடன் அப்படியே சிலை மாதிரி நின்றான். காந்தி சுடப்பட்டார் என்பதை உணர்ந்ததும் சுற்றிலும் நின்றவர்கள் பாய்ந்து சென்று துப்பாக்கியுடன் நின்ற கோட்சேயைப் பிடித்துக் கொண்டனர். சிலர்"துரோகி! கொலைகாரா!" என்று ஆத்திரமாக கூக்குரலிட்டபடி அவனைத் தாக்கத் தொடங்கினார்கள். பலமாக தாக்கப்பட்ட கோட்சேக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இன்னும் சிறிது நேரம் ஆகியிருந்தால் அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான்.
போலீசார் விரைந்து வந்து அவனை மீட்டு அங்கிருந்து இழுத்துச்சென்றனர். காந்தியைக் கோட்சே சுடுவதையும் குண்டு பாய்ந்து காந்தி கீழே விழுவதையும் சற்று தூரத்தில் இருந்து ஆப்தேயும், கார்கரேயும் பார்த்தார்கள். இனி அங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவி வெளியே வந்தார்கள். ஒரு சாரட்டு வண்டியைப் பிடித்து அங்கிருந்து புறப்பட்டார்கள். பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வந்திருந்த பெண் டாக்டர் ஒருவர் காந்தி கிடந்த இடத்துக்கு ஓடோடி வந்தார்.
அவர் தலையை மடியில் வைத்துக்கொண்டு நாடித்துடிப்பை பரிசோதித்தார். காந்தியின் உடலில் உயிர் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவர் வாய் ஏதோ முணுமுணுத்தது. உடனே ஒரு தேக்கரண்டியில் தேனும், வெந்நீரும் அவருக்குக் கொடுத்தார்கள். அதற்குள் அவர் உயிர் பிரிந்துவிட்டது. தேனும், வெந்நீரும் வாய்க்குள் செல்லாமல் வெளியே வடிந்துவிட்டது.
டாக்டர் பார்க்கவா வந்து பரிசோதித்துவிட்டு, "காந்தி நம்மைப் பிரிந்துவிட்டார். உயிர் போய்விட்டது" என்று துயரத்துடன் அறிவித்தார். கூடியிருந்தவர்கள் கூக்குரலிட்டு அழுதனர். காந்தி மரணச்செய்தியை சரியாக மாலை 6 மணிக்கு அகில இந்திய ரேடியோ அதிகாரபூர்வமாக அறிவித்தது. "பிர்லா மாளிகையில் இன்று மாலை 5.20 மணிக்கு மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக்கொன்றவன் நாதுராம் விநாயக் கோட்சே என்ற இந்து." சுட்டவன் ஒரு இந்து என்பது மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லப்பட்டது. பொதுமக்கள் வேறுவிதமாக நினைத்து, இந்து, முஸ்லிம் கலவரம் மூண்டுவிடக்கூடாதே என்பதுதான் இதற்குக் காரணம். ஆனாலும், டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், மராட்டியம் ஆகிய பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர்.(கோட்சே காந்தியை கொள்வதற்கு முன் தன் கையில் இஸ்லாமிய பெயராகிய இஸ்மாயில் என்று பசை குத்தி இருந்தான் இதன் மூலம் மத சண்டை மூண்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் அளிக்க படுவார்கள் என்று அவன் போட்ட திட்டம் அவன் வுஇறுடன் பிடி பட்டதால் பலிக்கவில்லை)
மகாத்மா காந்தி கொலையையொட்டி கோட்சே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்,,,,
கோட்சே பிடிபட்டதைத் தொடர்ந்து பிர்லா மாளிகையில் இருந்து நழுவிய ஆப்தேயும், கார்கரேயும் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பித்துவிடவேண்டும் என்று தீர்மானித்தார்கள். 30_ந்தேதி இரவை டெல்லி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் தங்கியிருந்த அகதிகள் கூட்டத்துடன் தங்கியிருந்தார்கள். மறுநாள் (31_ந்தேதி) பிற்பகல் டெல்லியில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில், ஆப்தே இரண்டாம் வகுப்பிலும், கார்கரே மூன்றாம் வகுப்பிலும் பிரயாணம் செய்தார்கள்.
பிப்ரவரி இரண்டாம் தேதி பம்பாய் சென்று, "சீகிரீன்" ஓட்டலில் அறையெடுத்து தங்கினார்கள். பின்னர் போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க புனாவுக்கும், மற்றும் பல இடங்களுக்கும் சென்று தலைமறைவாக இருந்தார்கள். இதற்கிடையே ஜனவரி 20_ந்தேதி காந்தியடிகளைக் கொல்ல பிர்லா மாளிகையில் குண்டு வீசி போலீசில் சிக்கிய மதன்லால், கொலை சதித்திட்டம் பற்றி முக்கிய விவரங்களையெல்லாம் கூறியிருந்தான்.
காந்தியடிகளை சுட்டுக்கொன்ற கோட்சேயிடமும் தீவிர விசாரணை நடந்தது. தங்களுக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்தக் கொலைத்திட்டத்தின் "மூளை"யாக செயல்பட்டவன் ஆப்தே என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவனைப் பிடிக்க பல இடங்களில் வலை விரித்தனர். பம்பாய், புனா நகரங்களில் உள்ள பல்வேறு ஓட்டல்களுக்கும் யார் யார் வருகிறார்கள் என்று ரகசியமாகக் கண்காணித்தனர்.
ஓட்டல்களுக்கு வரும் டெலிபோன்களும் ஒட்டு கேட்கப்பட்டன. பிப்ரவரி 13_ந்தேதி ஆப்தேயும், கார்கரேயும் பம்பாய் சென்றனர். அங்குள்ள "அப்பல்லோ பைரக்ஸ்" என்ற ஓட்டலில் தங்கினர். இந்த சமயத்தில் ஆப்தேயின் காதலி (டாக்டரின் மகள்) அந்த ஓட்டலுக்கு போன் செய்தாள். "ஆப்தே அங்கு வந்திருக்கிறாரா? எந்த நெம்பர் அறையில் தங்கியிருக்கிறார்?" என்று கேட்டாள். ஓட்டல் வரவேற்பாளர் ஓட்டல் ரிஜிஸ்தர் புத்தகத்தைப் புரட்டிப்பார்த்துவிட்டு, ஆப்தேயின் ரூம் நெம்பரை சொன்னார். "நான் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கு வந்து அவரை சந்திக்கிறேன்" என்று கூறிவிட்டு டெலிபோனை வைத்துவிட்டாள் அந்தப்பெண்.
ஓட்டல் வரவேற்பாளர் இன்டர்காம் மூலம் ஆப்தேயுடன் தொடர்பு கொண்டு, "டாக்டரின் மகள் டெலிபோனில் பேசினார். இன்னும் அரை மணி நேரத்தில் ஓட்டலுக்கு வந்து உங்களைச் சந்திப்பதாகச் சொன்னார்" என்று தகவல் தெரிவித்தார். போலீசுக்கு பயந்து கவலையுடன் தலைமறைவாகத் திரிந்தாலும், தன் காதலி தன்னைச் சந்திக்க இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறாள் என்ற தகவல், ஆப்தேயின் மனதில் மகிழ்ச்சி அலைகளை எழுப்பியது. அவள் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தான்.
ஓட்டலுக்கு அவன் காதலி போன் செய்து பேசியபோது, போலீசார் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தது அவனுக்குத் தெரியாது. பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். அறைக்கதவு "டொக், டொக்" என்று தட்டப்படும் ஓசை கேட்டது. "காதலி வந்துவிட்டாள்" என்ற பரவசத்துடன் ஓடிச்சென்று கதவைத் திறந்தான் ஆப்தே. வெளியே அவன் கண்ட காட்சி அவனை நிலைகுலையச் செய்தன. அவன் கண்கள் நிலைகுத்தி நின்றன. பேயறைந்தவன்போல் ஆனான். காரணம் வெளியே நின்று கொண்டிருந்தது அவன் காதலி அல்ல; போலீசார்! காமத்தால் மதியிழந்த ஆப்தே அதற்கு மேல் தப்பிக்க வழி இல்லை என்பதை உணர்ந்தவனாக போலீசாரிடம் சரண் அடைந்தான்.
போலீசார் தயாராகக் கொண்டு போயிருந்த விலங்கை அவன் கைகளில் மாட்டினர். அதே அறையில் பதுங்கியிருந்த கார்கரேயும் கைது செய்யப்பட்டான். இதைத்தொடர்ந்து காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் பிப்ரவரி 15_ந்தேதிக்குள் கைது செய்யப்பட்டனர்.
கோட்சேயின் தம்பி கோபால் கோட்சே, மராட்டியத்தில் உக்சான் என்ற இடத்துக்கு அருகே கைது செய்யப்பட்டான். புனாவில் உள்ள காடுகளில் அலைந்து திரிந்துவிட்டு திரும்பிய திகம்பர் பாட்ஜே, ஒரு காளி கோவில் அருகே பிடிபட்டான். பாட்ஜேயின் வேலைக்காரன் இஸ்தியா பம்பாயில் போலீசாரிடம் சிக்கினான். ஜனவரி 20_ந்தேதி பிர்லா மாளிகையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தபோது கடைசி நேரத்தில் காந்தியைக் கொல்ல முடியாது என்று மறுத்துவிட்ட சாமியார் பாட்ஜே போலீஸ் தரப்பு சாட்சியாக ("அப்ரூவர்") மாறினான்.
"ஒருநாள் கோட்சேயும், ஆப்தேயும் இந்து மகா சபை தலைவர் வீரசவர்க்காரை சந்தித்தார்கள். பேச்சு முடிந்ததும் வாசல் வரை வந்து அவர்களை சவர்க்கார் வழியனுப்பினார். அப்போது வெற்றியோடு திரும்புங்கள்" என்று வாழ்த்தினார்" என்று போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் பாட்ஜே கூறினான். அந்த அடிப்படையில் வீரசவர்க்காரும் கைது செய்யப்பட்டார். துப்பாக்கி வாங்க உதவி புரிந்ததாக குவாலியரை சேர்ந்த சதாசிவ பார்ச்சூர் என்ற டாக்டரும் கைதானார்
மகாத்மா காந்தி கொலையையொட்டி கோட்சே உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயாரிக்க நான்கு மாத காலம் பிடித்தது. இந்த வழக்கை விசாரிக்க டெல்லி செங்கோட்டையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதியாக ஆத்மசரண் நியமிக்கப்பட்டார். இந்த நீதிமன்றத்தில் 1948 மே 27_ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 9 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்:
(2) நாராயண் தாதாத்ரேய ஆப்தே. வயது 34. நிர்வாக இயக்குனர், "ஹிந்து ராஷ்டிரா" நாளிதழ், புனா.
(3) விஷ்ணு ராமகிருஷ்ண கார்கரே. வயது 38. "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" உரிமையாளர். ஆமத்நகர்.
(4) திகம்பர ராமச்சந்திர பாட்ஜே. வயது 37. ஆயுத விற்பனையாளர், புனா. இவர் அரசாங்க தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
(5) கோபால் கோட்சே. வயது 27. நாதுராம் கோட்சேயின் தம்பி. ஸ்டோர் கீப்பர், ராணுவ கிடங்கு, புனா.
(6) மதன்லால் பாவா. வயது 20. அகதி. புனா.
(7) சங்கர் கிஸ்தியா. வயது 20. பாட்ஜேயின் வீட்டு வேலைக்காரன்.
(8) சதாசிவ பார்ச்சூர். வயது 47. டாக்டர். குவாலியர்.
(9) விநாயக் தாமோதர் சவர்க்கார். வயது 65. பாரிஸ்டர் மற்றும் நிலக்கிழார், பம்பாய். (மேற்கண்ட 9 பேர்களுடன் கங்காதர் தாந்த்வாதி, கங்காதர் ஜாதவ், சூர்யோதவ் சர்மா என்ற மூவரும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் என்று, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் இறுதிவரை போலீசாரிடம் சிக்கவில்லை) இந்த வழக்கில், போலீஸ் தரப்பு சாட்சிகளாக 149 பேர் இடம் பெற்றிருந்தனர்.
காந்தியை சுட்டுக் கொல்ல கோட்சே பயன்படுத்திய "கறுப்பு பெரட்டா" துப்பாக்கி, கொலையாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கொலையாளிகளின் உடைகள், சாமியார் பாட்ஜே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கு விசாரணை திறந்த நீதிமன்றத்தில் நடந்தது. பத்திரிகை நிருபர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் விசாரணையைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரும்பிய வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ளவும், வாதத்தை எடுத்து வைக்கவும், ஆவணங்களை பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டனர். 1948 ஜுன் 22_ந்தேதி விசாரணை தொடங்கியது.
காந்தி கொலையை தடுக்க முடியாமல் போனாலும், குற்றவாளிகளைப் பிடிப்பதிலும், சாட்சிகளை தயார் செய்வதிலும் போலீசார் திறமையாக செயல்பட்டார்கள். போலீஸ் தரப்பு சாட்சிகள் சிலரின் சாட்சியங்கள் வருமாறு:-
மிஸ் மனோரமா சால்வே:_ எனக்கு ஆப்தேயைத் தெரியும். ஜனவரி 28_ந்தேதி பம்பாயில் உள்ள "ஸீ கிரீன்" ஓட்டலில் அவரை சந்தித்தேன். ஜனவரி 31_ந்தேதி டெல்லி வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறும் டெல்லி "இந்து மகா சபை"க்கு அவர் பெயரில் தந்தி அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி தந்தி கொடுத்தேன்.
ராம்சிங் (இந்து மகாசபை அலுவலக கூர்க்கா):_ ஜனவரி 20_ந்தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேரை இந்து மகாசபை அலுவலகத்தில் பார்த்தேன். அவர்கள் பகல் 12 மணிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். இரவு 8 மணிக்கு பதற்றத்துடன் திரும்பி வந்தார்கள். தங்கள் சாமான்களுடன் அவசரமாகத் திரும்பினார்கள்.
பேச்சிகா (மெரினா ஓட்டல் மானேஜர்):_ கோட்சேயும், ஆப்தேயும் எங்கள் ஓட்டலில் தங்கியிருந்தார்கள். அப்போது, கார்கரே, மதன்லால், பாட்ஜே ஆகியோர் வந்து அவர்களை சந்தித்தார்கள் (கோட்சேயையும், மற்றவர்களையும் அடையாளம் காட்டினார்).
காளிராம் (மெரினா ஓட்டல் சிப்பந்தி):_ கோட்சே தன் துணிகளை என்னிடம் கொடுத்து சலவை செய்து கொடுக்குமாறு சொன்னார். அந்தத் துணிகளை சலவைத் தொழிலாளியிடம் கொடுத்தேன்.
கன்யாலால் (மெரினா ஓட்டல் சிப்பந்தி):_ கோட்சேயின் துணிகளில் "என் வி ஜி" என்று ஆங்கிலத்தில் சலவைக்குறி போடப்பட்டிருந்தது. அந்தத் துணிகளை நான் சலவை செய்து கொடுத்தேன்.
சோத்ராம் (பிர்லா மாளிகை தொழிலாளி):_ ஜனவரி 20_ந்தேதி குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக கார்கரே, மதன்லால் ஆகியோர் பிர்லா மாளிகையை ஒட்டியுள்ள என் குடியிருப்பு வழியாக பிர்லா மாளிகை பிரார்த்தனை மண்டபத்துக்கு பின்புறம் சென்றார்கள். அங்கு செல்ல அனுமதிப்பதற்காக எனக்கு 20 ரூபாய் கொடுத்தனர்.
பேராசிரியர் ஜெயின்:_ காந்தியை கொலை செய்யப்போவதாக மதன்லால் என்னிடம் சொன்னான். இவ்வாறு கொலை சதி பற்றி பல சாட்சிகள் கோர்ட்டில் சாட்சியம் அளித்தனர். சாட்சிகள் இந்தி, மராத்தி, தெலுங்கு முதலிய மொழிகளில் சாட்சியம் அளித்தனர். அவை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டியிருப்பதால், சாட்சியத்தை பதிவு செய்ய நீண்ட நேரம் பிடித்தது.
"கொலை செய்வதற்கு நான் சதி செய்யவில்லை" என்று ஆப்தே மறுத்தான். வீரசவர்க்காரும், கொலையில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று மறுத்தார். அவர் கூறியதாவது:-
"நான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவன். பின்னர் இந்துமகாசபையைத் தொடங்கினேன். இந்து மகாசபை அலுவலகத்திற்கு பலரும் வந்து போவார்கள். அதுபோல் கோட்சேயும், ஆப்தேயும் வந்திருக்கிறார்கள். என்னை கோட்சேயும், ஆப்தேயும் சந்தித்து காந்தியைக் கொலை செய்யப்போவது பற்றி பேசியதாகவும், நான் வாசல் வரை வந்து "வெற்றியுடன் திரும்புங்கள்" என்று வாழ்த்தி வழியனுப்பியதாகவும் போலீஸ் தரப்பு சாட்சி பாட்ஜே கூறுவது பொய்.
நாங்கள் பேசியபோது பாட்ஜே அந்த இடத்தில் இல்லை. அப்படியிருக்க என்ன பேசினோம் என்று அவனுக்கு எப்படித் தெரியும்? அவன் கூறுவது அனைத்தும் கற்பனை." இவ்வாறு சவர்க்கார் கூறினார்.
தனக்கு மரண தண்டனை கிடைக்கப்போவது உறுதி என்று கோட்சேக்குத் தெரிந்திருந்தது.அதன் பிறகு நடந்தவை அனைவர்க்கும் தெரிந்ததே மகாத்மாவை கொன்றவனுக்கு இதை விட பெரிய தண்டனை வேற என்ன கொடுக்க முடியும்?