Friday, April 30

முதல் நிலவுப் பயணத்தில் சில சுவாரசியங்கள்!(with video)

இறைவனின் பெயரால்!!!



 
41 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் முதன் முதலில் நிலவில் கால்பதித்தான். அமெரிக்காவைச் சேர்ந்த நீல்ஆம்ஸ்ட்டிராங், ஆல்ட்ரின், காலின்ஸ் ஆகிய 3 விண்வெளி வீரர்களும் 1969ம் ஆண்டு ஜுலை மாதம் 21-ந்தேதி நிலவில் இறங்கினார்கள். பரபரப்பாக பேசப்படும் 'ராக்கெட் மேன்' புத்தகத்தில் சுவாரசியமான விஷயங்கள் இதோ... திட்டமிட்டபடி இறங்காத விண்கலம்




1. விண்வெளி வீரர்கள் சென்ற அப்பலோ 11 விண்கலம் நிலவுக்கு சிறிது தூரத்தில் சென்றபோது சிறு பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. இதனால் திட்டமிட்ட இடத்தில் இறங்க முடியாமல்போனது. 31/2 மைல் தொலைவுக்கு அப்பால் சென்று இறங்கியது.


2. அப்போது விண்கலத்தில் பயன்படுத்திய கம்ப்யூட்டர் தற்போது இருக்கும் செல்போன் அளவு வேகம் கூட இருக்கவில்லை. 3. குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட வேண்டியதாக இருந்தது. ஏனெனில் எரிபொருளுடன் சம்பந்தப்பட்டு வடிகட்டியே பெறப்பட வேண்டியதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால் இந்த ஏமாற்றம் நிகழ்ந்தது. அதேபோல் சிறுநீர் கழிப்பது, மலஜலம் கழிப்பது போன்றவற்றுக்கும் மிகுந்த சிரமப்பட வேண்டியதாக இருந்தது. இதனால் மலஜலத்தை நிறுத்தி வைப்பதற்காக விண்வெளி வீரர்கள் மருந்து சாப்பிடும் நிலைக்கு ஆளாகினர்.


4. அதேபோல் பெரிய விண்கலத்தில் இருந்து ஈகிள் எனப்படும் குட்டி விமானம் மூலம் நிலவில் தரை இறங்கினார்கள். ஈகிளிலும் பிரச்சினை ஏற்பட்டதால் 4 மைல் தூரத்துக்கு அப்பால்தான் தரை இறங்க முடிந்தது.


5. நீல் ஆம்ஸ்டிராங் ஈகிள் மூலம் நிலவில் இறங்கும்போது அது ஏறக்குறைய எரிபொருள் தீர்ந்து நிலவின் தரையில் மோதுவதுபோல சென்றது.


6. நிலவில் காலடி வைத்ததை 'மனிதனின் சிறிய அடி' என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அதுசிறிய அடியாக இருக்கவில்லை. அவர் ஈகிளின் ஏணிப்படியிலிருந்து 3.5 அடி தாவித்தான் நிலவில் கால் வைத்தார்.


7. ஆம்ஸ்டிராங்கை தொடர்ந்து ஆல்ட்ரின் இறங்கினார். அப்போது ஈகிள் விண்கலத்தின் கதவை பூட்ட முடியாமல் சிரமப்பட்டார். ஏனெனில் அதை வெளியில் இருந்து பூட்டும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. கொடியை நடுவதில் சிரமம்


8. நிலவில் இறங்கும் முன்பு நடந்திருந்த ஆய்வுப்படி நிலவின் மணல் மிருதுவாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் நிலவில் இறங்கிய பிறகுதான் கடினமாக இருந்தது தெரியவந்தது. மனிதன் இறங்கிய இடம் முழுவதும் பாறையாக இருந்தது. இதனால் கொடியை நடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள்.


9. நிலவில் நட்ட அமெரிக்கக் கொடி விறைப்பானதாக இருந்தது. ஆனால் அதை நாசா நிறுவனம் மறுத்துவிட்டது.


10. விண்வெளி ஆடை, அங்குள்ள சூழலுக்கு ஏற்ற கம்ப்யூட்டர் சிப் அனைத்தும் "லிட்டில் ஓல்டு லேடிஸ்'' என அழைக்கப்படும் குழுவினரால் கையால் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த விஷயங்கள் அனைத்தையும் நாசாவின் கருவூலத்தில் இருந்து சேகரித்து தொகுத்து உள்ளார்.


நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்கள், நிலவுக்கு செல்லும் முன் தாங்கள் உயிருடன் திரும்புவது சந்தேகம் என்ற நிலையிலேயே பயணத்தை தொடங்கினர். இதற்காக தங்கள் உயிருக்கு இன்சூரன்ஸ் செய்ய முயன்றபோது எந்த நிறுவனமும் அதற்கு பொறுப்பு ஏற்கவில்லை.


இதனால் தங்களின் நினைவுச் சின்னங்களாக சில பொருட்கள், ஓவியங்களை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டே விண்வெளி வீரர்கள் பயணத்தை தொடங்கினர். இந்த விஷயங்கள் ஏற்கனவே விண்வெளி வீரர்களால் வெளிப்படுத்தப்பட்டு பல நூல்களில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மஜீத் குவைத்.


Wednesday, April 28

ஓரே சமயத்தில் பல்வேறு விண்டோக்களில் பணிபுரிய

இறைவனின் பெயரால்.
நண்பர்களே நமது கம்யூட்டரில் சிலசமயங்களில் நாம் மூன்று அல்லது நான்கு அப்ளிகேஷன்கள் திறந்து வைத்துப்பணிபுரிவோம். அந்த மாதிரியான நேரங்களில் அனைத்து விண்டோக்களையும் ஒன்றாக பார்த்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்.நான் ஓரே சமயத்தில் மூன்று விண்டோக்களை திறந்துவைத்துள்ளேன்.கீழே உள்ள படத்ததை பாருங்கள்.

 அந்த வசதி நமது கம்யூட்டரிலேயே உள்ளது. அதை எவ்வாறு பெறுவது என்று இன்று பார்க்கலாம்.டாக்ஸ்பாரில் காலியாக உள்ள இடத்தில் வைத்துகர்சரை ரைக்ட்  கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் முதலில் உள்ள Cascade Window வை தேர்வு
செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட படம் கிடைக்கும்.
நீங்கள் தேர்வு செய்தபின் கீழே உள்ளவாறு படங்கள்
கிடைக்கும். அதாவது ஒரு விண்டோவின் மீது மற்றும்
ஓரு விண்டோக்கள் அடுக்கி வைத்தது மாதிரி
விண்டோக்கள் நமக்கு கிடைக்கும்.கீழே உள்ள படத்தை
பாருங்கள்.

அடுத்துள்ள The Windows Horizontally தேர்வு செய்தபின்னர் நமக்கு
விண்டோக்கள் ஒன்றன்பின்னர் ஓன்றாக வருவதை காணலாம்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அடுத்துள்ள The Windows Vertically தேர்வு செய்தால் உங்களுக்கு

விண்டோக்கள் அடுத்தடுத்து வருவதை காணலாம்.கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
 இந்த வசதி வேறு எந்த மாதிரியான சந்தர்பங்களில்

நமக்கு பயன்படும்?. ஓரு புதிய சாப்ட்வேர் பயன்படுத்து
கின்றோம். அதில் உள்ள வழிமுறைகள் தெரியவில்லை.
அப்போது உதவிக்கு சென்று பார்ப்போம். அப்போது இந்த
அப்ளிகேஷனை முடிவிட்டு அதற்கு சென்று பின்னர்
இங்கு வந்து பார்த்துக்கொள்வோம். அந்த மாதிரியான
சமயங்களில் அதே அப்ளிகேஷனையும் திறந்து கொண்டு
உதவி விண்டோவினையும் திறந்து கொண்டு பணிபுரிந்தால்
மிகவும் உதவியாக இருக்கும். நாம் மீண்டும் பழையபடி
டெக்ஸ்டாப்பிற்கு செல்லவேண்டும் என்றால் Show the Desktop கிளிக் செய்தால் நாம்
பழையபடி டெக்ஸ்டாப்பினை பெறலாம்.
மஜீத் குவைத்.

ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் வெற்றி பெறாதது ஏன்?

‘ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்த கிரையோஜெனிக் இன்ஜின் இயங்காததே இத்திட்டத்தின் தோல்விக்கான காரணம்’ என, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.


கடந்த 15ம் தேதி, ஜி-சாட் 4 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட் திட்டம், வெற்றி அடையவில்லை. இதற்கான காரணம் பற்றி, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.இதன் முடிவாக, ”கிரையோஜெனிக் இன்ஜின் இயங்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. அது ஏன் இயங்கவில்லை என்பது தான் கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது,” என்கிறார், ‘இஸ்ரோ’வின் செய்தித் தொடர்பாளர் சதீஷ்.ராக்கெட் ஏவப்பட்டது தொடர்பான அத்தனை விவரங்களும், மறுநாளே கையில் கிடைத்துவிட்டன. ‘இஸ்ரோ’வின் மூத்த விஞ்ஞானிகள், கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு, அவற்றை வரிக்கு வரி படித்துக் கொண்டிருக்கின்றனர்.ஜி.எஸ்.எல்.வி., டி 3 ராக்கெட், மூன்று நிலைகளைக் கொண்டது.

மூன்றாவது நிலையில், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின், முதல் முறையாக பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின், மைனஸ் 253 டிகிரி செல்சியசில் உள்ள ஹைட்ரஜன் திரவத்தையும், மைனஸ் 183 டிகிரி செல்சியசில் உள்ள ஆக்சிஜன் திரவத்தையும் எரிபொருளாகக் கொண்டது.திட்டமிட்டபடி, 15ம் தேதி மாலை 4.27 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. அதன் இரண்டாம் நிலை முடியும் வரை, அதாவது 293வது வினாடி வரை, எல்லாம் சரியாகவே சென்று கொண்டிருந்தது.ஆனால், மூன்றாம் நிலையில், கிரையோஜெனிக் இன்ஜின் இயங்கத் துவங்கியிருக்க வேண்டிய 304வது வினாடியில், பிரச்னை உருவானது; ராக்கெட் கடலில் விழுந்தது.

இதுதொடர்பாக, ‘இஸ்ரோ’வின் முன்னாள் மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறும்போது, ”இரண்டாவது நிலையின் இறுதி வரை எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை என்பதும், கிரையோஜெனிக் இன்ஜின் இயங்கவில்லை என்பதும் உறுதியாகிவிட்ட விஷயங்கள். அதன் பிறகு, ராக்கெட்டின் வேகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை; சரியவும் துவங்கிவிட்டது,” என்றார். கிரையோஜெனிக் இன்ஜின் ஏன் இயங்கவில்லை என்பது பற்றி, ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள், தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம், ஜி.எஸ்.எல்.வி., டி 3யில் பொருத்தப்பட்டிருந்த கிரையோஜெனிக் இன்ஜின், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பதால், ஏகப்பட்ட முறை பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

போதாதக்குறைக்கு, ‘இஸ்ரோ’வின் முன்னாள் தலைவர்கள், கிரையோஜெனிக் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய தேசியக் குழு ஒன்றும், இந்த ராக்கெட்டை பல முறை ஆய்வு செய்து, ‘தாராளமாக ஏவலாம்’ என, பச்சைக்கொடி காட்டியிருந்தது. அதுமட்டுல்ல, அந்த கிரையோஜெனிக் இன்ஜின், அடுத்தடுத்து 7,767 வினாடிகளுக்கு தரையில் பரிசோதிக்கப்பட்டது. இத்தனைக்கும், வானத்தில் அது 720 வினாடிகள் தான் இயங்க வேண்டியிருந்தது.

‘இஸ்ரோ’ தலைவர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டது போல, இன்ஜின் உள்ளிட்ட ஒட்டுமொத்த கிரையோஜெனிக் இயந்திரமும் 2007ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதியே தகுதிச் சோதனையில் முழு வெற்றி பெற்றுவிட்டது. ஆனால், வான்வெளியின் வெற்றிடத்தில் (வேக்குவம்) கிரையோஜெனிக் இன்ஜின் இயங்க வேண்டியிருந்தது தான் மிகப் பெரிய சிக்கல். ஏனெனில், தரையில் அதுபோன்ற வெற்றிடத்தை செயற்கையாக உருவாக்கி சோதித்துப் பார்க்க முடியாது.அதனால் என்ன? விண்வெளி விஞ்ஞானத்தில் எத்தனையோ வெற்றிடத்தை நிரப்பி, வெற்றி கண்டவர்கள் நம் விஞ்ஞானிகள்; இதிலும் அவர்கள் வெற்றி காண்பர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Saturday, April 24

மறுமை (கியாமத்) நாளின் அடையாளங்கள்

இறைவனின் பெயரால்.

   நண்பர்களே வுலகம் ஒருநாள்  அழிந்து விடும் என்பது மதம் வேறுபாடு இல்லாமல் அனைவரும் நம்புகிறோம் அது எப்போது என்பதில் கருது வேறுபாடும் குழப்பமும்,வதந்திகளும் நிலவி வருகின்றது, சமிபத்தில் இஸ்லாத்தில் வுலக அழிவு நாள் பற்றி என்ன சொல்கின்றது வுலகம் எப்போது அழியும் என்று எதார்த்தமாக பார்த்தேன், எப்போது என்று சரியாக சொல்லவில்லை என்றாலும்,வுலகம் அழிவதற்கு சில அடையாளங்கள்(முன் அறிவுப்புகள்)சொல்ல பட்டு இருக்கின்றது என்ன ஆச்சர்யம்!!!?,அதை கீழே தந்து இருக்கின்றேன் நிங்களே பாருங்கள்.

மறுமை(வுலகம் அழிவு நாள்)வருவதற்கான சில அடையாளங்கள்!
~விபச்சாரம், குடி அதிகரிக்கும்!
~கொலை’ அதிகரித்தல்!
~காலம் சுருங்கும்!
~தனிமையே விருப்பமாகும்
~வாழும் ஆசை அற்றுப் போய் விடும்
~ மகளின் தயவில்  தாய்
~பின்தங்கியவர்கள் பொருளாதாரத்தில் வுயர்ந்த நிலை அடைதல் 
~குடிசைகள் கொபுரமகுதல்
~தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
~பாலைவனம் சோலைவனம் ஆகுதல்
~கொலைகள் பெருகுதல்
~நிலா அதிர்வுகள் போகம்பம்களும் அதிகரித்தல்
~பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
~நெருக்கமான கடைவீதிகள்
~பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
~ஆடை அணிந்தும் நிர்வாணம்
`வுயிர் அற்ற பொருள்கள் பேசுவது
~பேச்சை  தொழிலாக்கி பொருள் திரட்டுவது
~தெரிந்தவருக்கு மட்டும் சலாம் சொல்லுவது
~பள்ளிவாசல்களை பாதைகளாக பயன் படுத்துவது
~சாவதற்கு ஆசைபடுதல்
~இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
~முந்தய சமுதாயத்தை காபி அடித்தல்
~இது வரை நிகழாத அடையாளங்கள்
~யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
~காப ஆலயம் சேத படுத்த படுத்தல்
~கஞ்சனத்தனம் ஏற்படும்
~தவறான தொழிலும் நல்லது என ஆகும்
~முஸ்லிமாக இருக்கமாட்டான்
~இறை நம்பிக்கை (ஈமானில்) தடுமாற்றம்
என்ன வியப்பாக வுள்ளதா இன்னும் வுள்ளது விரிவாக பாப்போம்

ஆங்கிலம் ஆன்லைனில் கற்க(learn English for free)

இறைவனின் பெயரால்.

               நண்பர்களே நமக்கு என்னதான் திறமைகள் படிப்புகள் இருந்தாலும் ஆங்கிலம் பேச எழுத தெரியவில்லை என்றால்,இன்றைய சூழ்நிலையில் நல்ல வேளையில் பணிபுரிவது என்பது சற்று  கடினம்தான் போட்டிகள்
நிறைந்த இந்த  வுலகினிலே வெல்ல நாம் பல தகுதிகளை வளர்த்து கொள்கிறோம் அப்போதுதான் அது நம்மை மற்றவர்களை விட மேலே வூயர்த்தும்,

அந்தவகையில் ஆங்கிலம் தெரிந்து கொள்வது என்பது அனைத்தையும்விட  ஒருபடி மேல்தான் வெளிநாடுகளில் நல்ல வேளையில் பணிபுரிய ஆங்கிலம் மிக அவசியம், வுலகமயம் ஆகிவிட்ட இந்திய பொருளாதாரத்தால் இந்தியாவில் பனிபுரியக்கூட  தற்போது ஆங்கிலம் அவசியம் என்று ஆகிவிட்டது.

 ஆங்கிலம் கற்க பலவழிகளில்  நாம் முயற்சி செய்துதான் இருக்கின்றோம் ஆனால் சிலருக்கு என்ன படித்தாலும் புரிவது இல்லை, அவர்களுக்கு  புரிய வில்லையா அல்லது  அவர்கள் வாங்கும் புத்தகங்கள் புரிவது போல் எழுதவில்லையா?

அந்தவகையில் இணையத்தில் ஆங்கிலம் எளுமையாக கற்க  பலதலங்கள் இருக்கின்றது அதில் ஒன்றை தற்போது தருகின்றேன் இங்கு கிளிக் செய்து அத்தளம் சென்று ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் நன்றாகவும் புரிவது போலவும் தந்து இருக்கின்றார்கள் மிகவும் பயன்வுள்ள நல்லதளம்.

அதேபோல் தமிழ் இங்க்லீஷ் டிக்சனரியும் நமக்கு மிகவும் முக்கியம் அதுதான் நமக்கு தெரியாத ஆங்கில வார்த்தைகளை தமிழில் மாற்றித்தரும்,ஆங்கிலத்தை தமிழில் மொழிபெயர்க்கும் கணினி மென்பொருள் (dictionary )யை ஏற்கனவே என் பழைய பதிப்பில் தந்து இருக்கின்றேன் அதை பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து வுங்கள் கணினியில் நிறுவி பின் இயக்கி பார்க்கவும் மிகவும் அற்புதமான சாப்ட்வேர் இது இலவசமாக கிடைப்பது வியப்பாகவே வுள்ளது.

ஆன்லைனிலும் தமிழ் இங்க்லீஷ் டிக்ஸ்னரி வுள்ளது இது தேவைஎன்றால் இங்கு கிளிக் செய்து இயக்கவும் இதை இயக்க இணைய தொடர்பு  தேவை படுகின்றது ஆனால் முன் நான் தந்து இருக்கும் மென்பொருளோ நமது கணினியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எப்போது வேண்டும்மானாலும் இயக்கலாம்.
மஜீத் குவைத்.

ஆன்லைனில் பாஸ்போர்ட் எடுக்க(online indian Passport Office)

இறைவனின் பெயரால்.

           நண்பர்களே பொதுவாக பாஸ்போர்ட் (passport)நமக்கு தேவைஎன்றால் முதலில் நாம் அணுகுவது ஏதேனும்  ஒரு டிராவல்ஸ்குதான், அதுவும் நல்லதுதான் நமக்கு அலைச்சல் குறைவு,ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமல் நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம்  வழிவகை செய்துதருகின்றது,

நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் ட்ராவல்ஸ் சென்று எடுக்கிறோம் ஆனால் நான் தந்து இருக்கும் இந்த தளத்திற்கு சென்று பார்த்திர்கள் என்றால் வுங்களுக்கு அணைத்து வழிமுறைகளும் தெரிந்து விடும்  இந்த தளம் நமக்கு மிகவும் பயன்வுள்ளதாக வுள்ளது இங்கு கிளிக் செய்து இந்திய அரசாங்கத்தின் அதிகார பூர்வ இணையதளம் சென்று   விண்ணப்ப படிவம் மற்றும் பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ளவும் மற்றும் ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்துகொள்ளவும் அனைத்திற்கும் மேலேவுள்ளதளம் வுதவுகின்றது.

திருச்சிராப்பள்ளி பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையத்தளம் இங்கு கிளிக் செய்து பார்க்கவும் இவைகளில் அணைத்து விபரங்களும்வுள்ளன எனவே இனி நமக்கு பாஸ்போர்ட் எடுக்கவோ அல்லது புதுபிக்கவோ துளைந்து போனாலோ இந்த இணையதளம் நமக்கு மிக வுதவியாக இருக்கும் நாமே யாரின் வுதவியும் இன்றி நேரடியாக பாஸ்போர்ட் சம்மந்தமான வேலைகளை முடித்து கொள்ள முடியும்.

அதேபோல் சென்னை,மதுரை,கோயமதூர்,ஆன்லைன் பாஸ்போர்ட்
அலுவலகத்தின் இணையதளம் இங்குகிளிக் செய்து ஆன்லைனில் அப்ளை செய்யலாம் .

 என்னுடைய பழைய பதிப்பில் குவைத்தில் இருக்கும் இந்திய தூதரகம் பற்றியும் குவைத் வாழ் இந்தியர்கள் பாஸ்போர்ட் சம்மந்தமாகவும் எழுதி இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும் அதேபோல் சௌதி  அரேபியாவில் இருக்கும் இந்தியர்களுக்கு அவர்கள் பாஸ்போர்ட் சம்மந்தமாக அறிய என்பழைய பதிப்பில் தந்து இருந்தேன் அதை காணாதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.
மஜீத் குவைத்.

Saturday, April 17

பேய்! பிசாசு! ஆவிகள்!! இருப்பது உண்மையா?




இன்றைய நாள்களில் நம்முடன் வாழ்ந்து வரும் நம்மில் சிலருக்கு பேய் பிடிப்பதாக  கூறுவதுண்டு. இன்னும் சிலர் ஆவியுடன் பேசுவதாகச் சொல்கிறார்கள். இன்றும் பில்லி,  சூனியம், செய்வினை ஆகியவற்றிற்கு உள்ளாகி மந்திரவாதிகளை அழைத்துத் தகடு  எடுப்பதையும் பார்க்கிறோம். ஜாதகம், ஜோதிடம் உள்ளிட்ட பல எதிர்காலக் கணிப்புக்கு  பலர் உள்ளாவதைப் பார்க்கலாம். இவையெல்லாம் உண்மையா? அல்லது கற்பனையா? அல்லது  மோசடியா? இது தொடர்பாக அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவு என்ன? என்பன போன்ற  வினாக்களுக்கான விடைகளை இனிக்காண்போம்.
பேய்! பிசாசு! ஆவிகள்!!!

இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் உள்ளிட்ட எல்லா மதத்தாரும் பேய்! பிசாசு! ஆவிகளை!  நம்புகிறார்கள். இந்து மதத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு விசேடமான பேய்!  பிசாசு! இருப்பதும் பூசாரிகளைக் கொண்டு அவற்றை விரட்ட முயல்வதும் பொதுவான  அம்சமாகும்.
கிறிஸ்துவ மதத்தின் புனித நூலாகக் கருதப்படும் பைபிளிலும், இஸ்லாம் மதத்தின்  புனித நூலாகக் கருதப்படும் குர் ஆனிலும் பேய் ! பிசாசுகள் ! உண்டு. இன்றும்  தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கிறிஸ்துவ மத போதகர்களால் சரீரசுகமளிக்கும்  கூட்டங்களில் பேய் விரட்டும் நிகழ்ச்சிகளும் உண்டு.
கத்தோலிக்க மதத் தலைவர் போப் அண்மையில் பேய் விரட்டலுக்குச் சில நெறிமுறைகளை  அறிவித்திருக்கிறார். ஏர்வாடி ஊரிலுள்ள முஸ்லீம் தர்கா பேய் விரட்டலுக்கு பிரபலமான  இடமாகக் கூறப்படுகிறது. இந்தப் பேய் விரட்டல் போட்டியில் வெற்றி பெற்றவர் யார்  என்று சொல்ல முடியாத வண்ணம் மூன்று மதத்தைச் சார்ந்தவர்களாலும் பேய் விரட்டல்  இன்னும் நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
தற்கொலை செய்துக்கொண்டவர்கள் :
பிறரால் கொல்லப்பட்டவர்கள், விபத்தால் இறந்தவர்கள் ஆகியோரே- பேயாக! ஆவியாக!  உலவுவதாக பொதுவாக நம்பப்படுகிறது. விபத்தால் அல்லது உணவுக்காக கொல்லப்படும் ஆடுகள்,  கோழிகள், மாடுகள் போன்ற பிராணிகள் ஆவியாக பேயாக உலவுவதாகப் பொதுவாக யாரும்  நம்புவதில்லை. இதுபோல் கொல்லப்படும் தாவரங்கள் பேயாக ஆவியாக உலவுவதாக யாரும்  நம்புவதில்லை. இந்தப் பேய்! பிசாசு! ஆவிகள்!! யாரைத் தொந்திரவு செய்கின்றன  தெரியுமா? படித்த அய்.பி.எஸ். ஆதிகாரிகளை, மருத்துவர்களை , பொதுவாக படித்த ஆண்களை  தொந்திரவு செய்வதில்லை. அதே போல் பார்ப்பன ஆண்களையும், பெண்களையும் தொந்திரவு  செய்வதில்லை. இன்று வரை இவர்களை எல்லாம் ஏன் பேய்! பிசாசு! ஆவிகள்! தொந்திரவு  செய்யவில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இதே பேய்! பிசாசு! ஆவிகள்!! கிராமப்புற மக்களை, அதிலும் படிப்பு அறிவு  இல்லாதவர்களை, அதிலும் பெரும்பாலும் பெண்களையே தொந்திரவு செய்வது ஏன்? இவையெல்லாம்  தந்தை பெரியார் இந்நாட்டு மக்களைப் பார்த்து எழுப்பிய கேள்விகளாகும்.
அடுத்து இந்தப் பேய் பிசாசு ஆவிகள் ஆகியவற்றின் தொந்திரவுக்கு உள்ளானவர்கள்  நிலையைப் பார்ப்போம்:
இவர்களில் சிலர் பேய்! பிசாசு! ஆவியைப் பார்த்ததாகவும், சலங்கை ஒலியைக்  கேட்டதாகவும், கடவுள் காட்சி கொடுத்ததாகவும் சொல்லுவார்கள். இவர்கள் பொய்  சொல்லவில்லை. தாம் உணர்ந்ததைச் சொல்கிறார்கள். எனவே இவர்களைப் பொய்யர்கள் என்று  அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டியதில்லை. அப்படியென்றால் இவையெல்லாம் உண்மையா?
அதாவது பேய்! பிசாசு! ஆவிகள்!! இருப்பது உண்மையா? என்ற கேள்விகள் எழலாம்.மேற்  சொன்னவை எல்லாம் புலன்களை ஏய்க்கும் உணர்ச்சிகளே! (Deceptive perceptions ) ஆகும்.  இவற்றை அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் மூன்று வகையாகப் பிரிக்கின்றன.
1- மாயப்புலன் உணர்ச்சி. (IIIUSION )
2- மயக்கப்புலன் உணர்ச்சி. ( HALLUCINATION )
3- மருட்சி. (DELUSION )
1- மாயப்புலன் உணர்ச்சி:
கண், காது, மூக்கு, உள்ளிட்ட அய்ந்து புலன் உணர்ச்சிகளின் அடிப்படையில் மாய  உணர்ச்சிகள் அய்ந்து வகையாகப் பிரிக்கப்படுகின்றன. நல்ல வெயிலில் நீண்ட தார்ச்  சாலையில் நடக்கும் போது மிகத் தொலைவில் நீர் இருப்பது தெரியும். உண்மையில்  இருக்காது. இதனைக் காணல் நீர் என்பர். இது கண் உணரும் மாயக் காட்சியாகும்.  நெல்லிக்காய் தின்றபின் நீரைக் குடித்தால் இனிப்பது போல் உணர்பவர். அதனால் நீர்  இனிப்பாகாது. இது நாக்கின் ஒருவகை மாய உணர்ச்சியாகும். இதுபோல் மாய உணர்ச்சிகளை  நமது அய்ம்புலன்கள் உணர வாய்ப்பு உண்டு. சரியான ஆய்வின் மூலம் இந்த மாய உணர்ச்சிகளை  வெளிப்படுத்தலாம்.
2-மயக்கப் புலன் உணர்ச்சி:
இயற்பியல் (Phygics ) வேதியல் (Chemistry ) உயிரியல் (Biology ) மற்றும் உளவியல்  (Psychological ) காரணங்களால் உண்டாகும் உணர்ச்சிகளே மயக்கப் புலன்  உணர்ச்சிகளாகும்.
3- சிறு பிள்ளையிலிருந்து பொய்யான கருத்துக்களை மனதில் திணித்து வந்ததன் விளைவாக  ஏற்படுவதே மருட்சியாகும். பேய், பிசாசு, ஆவிகள், ஜோதிடம், கைரேகை, மறுபிறப்பு,  மந்திரம் போன்றவையெல்லாம் இந்த மருட்சியில் அடங்கும்.
இயற்பியல் காரணங்களால் உண்டாகும்
மயக்கப்புலன் உணர்ச்சி:
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த வால்டர்ஹெஸ், மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச்  சேர்ந்த ஜே. டெல்காடோ ஆகியோர் மின் துடிப்புகள் (Electric Impulses ) மூலம்  மூளையில் பல்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகளை (Controls ) தூண்டிவிட்டு சினம்,  அச்சம், பசி, வருத்தம், துக்கம், துயரம், எக்களிப்பு, காதல், காமம், ஆர்வம்,  ஆக்கிரமிப்பு, உணர்ச்சி, நட்பு, விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம்- போன்றவற்றை  சாதாரண நடைமுறையில் வாழ்வில் உணர்வது போல் செயற்கையாகத் தூண்டும் முயற்சியில்  வெற்றி பெற்று அதனைப் படைத்துள்ளார்கள்.
தாளக்கட்டமைந்த பறையோசை, சீராகக் கைத்தட்டும் ஓசை, மந்திர உச்சாடணம், பண்ணோடு  இசைந்த பாடல், பாடல் ஒப்புவித்தல், ஒலி முழக்கமிடல், நடனம், அங்க அசைவுகள்,  கண்களில் மாற்றி மாற்றி வெளிச்சத்தையும் இருட்டையும் உண்டாக்குதல், ஒரு பொருளை  உற்று நோக்கல், ஜோதி, படிகம் (Crystal ) மை போன்றவற்றை உற்றுநோக்கல், போன்ற  செயல்கள் மூலம் மயக்கப்புலன் உணர்ச்சி அனுபவங்களை உண்டாக்க முடியும்.”பேய்” ஆட்ட  அங்க அசைவுகள், மிகச் சுழிப்புகள், காலடியாட்டம், கரக ஆட்டம், ஆலய பூசை, அங்க  அசைவுகள், பெந்த கோஸ்ட் என்னும் கிறிஸ்துவப் பிரிவினரின் பக்தி அசைவுகள் , உடல்  முறுக்கு நடனம், பாப் இசை நடனம்- போன்றவை நரம்பு மண்டல இயக்கத்தின் சத்த  இசைத்தூண்டல்களே ( Rythamical Stimulations of the nervous system ) ஆகும்.
வேதியல் காரணங்களால் தோன்றும் மயக்கப்புலன் உணர்ச்சி:
தொல்பழங்காலம் முதல் கள், சாராயம், கஞ்சா, அபின், ஊமத்தை விதை- ஆகியவற்றினை  உட்கொண்டு மயக்கக் காட்சிகளை நாமே உருவாக்கிக் கொள்ளும் நுட்பங்களை நம் முன்னோர்கள்  தெரிந்து வைத்து இருந்தனர். அண்மைக் காலத்தில் எல்.எஸ்.டி., மாரிஜினோ ஹிராயின்,  மெஸ்காலின், போன்ற போதை மருந்துகள் மூலம் இத்தகைய மயக்கக் காட்சிகளை அனுபவித்து  சீர்செய்ய இயலாத அளவுக்கு உடலைப் பலர் சீரழித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சென்னை முத்து முதலி தெருவில் உள்ள பாலாஜி
கோயிலில் பூசை  பிரசாதத்தை உட்கொண்ட பக்தர்கள் புதுவகையான
பக்திப் பரவசவத்தில் ஆழ்ந்து  வந்தார்கள். 07-05-1963-இல். இந்தக் கோயிலின் தலைமை அர்ச்சகர் 3,960 கிராம் கஞ்சா  வைத்து இருந்ததற்காக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது பூஜை  பிரசாதத்தில் கஞ்சாவைத் தாம் கலந்த செயலை ஒப்புக் கொண்டார்.
உயிரியல் காரணங்களால் தோன்றும் மயக்கப்புலன் உணர்ச்சி:
மனிதர்களின்  குறிப்பிட்ட வித்தியாசமான நடத்தைப் போக்குகள் அவர்கள் உடலில் உள்ள குரோமோசோம்கள்  (Chromosomes ) உடன் தொடர்புடையவை என்று கனடா நாட்டைச் சேர்ந்த ஆர்லண்டோமில்லரும்,  பேரா ஆலன்பிஷரும் கண்டுபிடித்துள்ளனர். உடலில் சிலவகை வைட்டமின்கள் நொதிகள்  (Enzymes ) போன்ற பற்றாக்குறையின் காரணமாக மனக் கோளாறுகள் உண்டாக முடியும்.  வைட்டமின் “பி”- குறைவின் காரணமாக பெரி பெரி என்னும் மனநோய் உண்டாகும். மனப்  பிறழ்வான நடத்தை இந்த நோயின் இன்றியமையாத அறிகுறிகளாகும். வைட்டமின் குறைவால்  ஏற்படும் நோய்களில் ஒன்று பெல்லாக்ரா ஆகும். உடலில் உள்ள சில சுரப்பிகளின் கோளாறு
காரணமாகவும் சில மனநோய்கள் உண்டாகும். எண்டாக்கிரினல் சுரப்பிக் (Endocrinal Gland  ) கோளாறு காரணமாக ஒரு குறிப்பிட்ட மனநோய் உண்டாகும். பாராதைராய்டு சுரப்பி  (Parathyroid Gland ) குறைவாகச் சுரப்பதால் மயக்கக் காட்சிகள் அதிகம் தெரியும்.
உளவியல் காரணங்களால் தோன்றும் மயக்கப் புலன் உணர்ச்சிகள்:
மனித மனமானது கருத்தேற்றங்களினால் (Suggetions ) பாதிக்கப்படக்கூடும் என்பது  உளவியல் உண்மையாகும். இத்தகைய கருத்தேற்றங்கள் தன் கருத்தேற்றம் (Auto – Suggestion  ) அல்லது தன்வசியம் (Auto – hypnosis ) என்றும் இரு வழியில் நடைப்பெறும். மதக்  கருத்துக்கள் ஊட்டுதலும், மூளைச்சலவை (Brain Washing ) செய்தலும் மெதுவான  தொடர்ச்சியான மன வசிய முறையாகும்.
பேய்! பிசாசு! ஆவி! தொடர்பான மன வசிய முறையில் சிறு பிள்ளையிலிருந்தே  மனத்திற்குள் திணிக்கப்படுகின்றன.பேய் பிடித்தவரைப் போல் பிதற்றுதல், அயல் மொழியில்  பேசுதல், சாமி வந்து ஆடுதல்- போன்றவை எல்லாம் மேற்சொன்ன கருத்தேற்றங்களின்  விளைவுகளே ஆகும். இதில் பேய் பிடித்து அயல் மொழியில் பேசுபவர் குளோசோலேலியா  (Clossolalia ) என்னும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர்கள் வாயில் அயல்  மொழி போல் வெளிப்படுவது உண்மையில் அயல் மொழி அல்ல என்பதனை அந்தக் குறிப்பிட்ட மொழி  தெரிந்தவரை அருகில் வைத்து நிருபிக்கலாம்.
சாதாரணமாகக் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்குக் கண் மருத்துவரை அணுகுவர். தோல்  நோய் சம்பந்தப்பட்ட நோய்களுக்குத் தோல் நோய் மருத்துவரை அணுகுவர். காது  சம்பந்தப்பட்ட நோய்களுக்குக் காது மருத்துவரை அணுகுவர். ஆனால் மனம் சம்பந்தப்பட்ட  நோய்களுக்கு மனநோய் மருத்துவரை அணுகாமல் பேய்! பிசாசு! ஆவி விரட்டும் செயலில்  ஈடுபடுவது அறிவுடமையாகுமா?
அய்.ஏ. எஸ்., அய்.பி.எஸ்., மருத்துவர்- ஆகியோரை பேய்! பிசாசு! ஆவி பிடித்து ஏன்  ஆட்டுவதில்லை? பாபார்ப்பன ஆண்களை, பெண்களை ஏன் இவை ஆட்டுவதில்லை? எனவே இனிமேலும்  பேய்! பிசாசு! ஆவி! மூட நம்பிக்கைகளுக்கு நாமும் பலியாகாமலும், மற்றவரையும்  பலியாகாமல் காப்பதும், முக்கிய மனித நேயக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
மனநோய் மருத்துவரைப் பைத்தியம் பிடித்தவர் மட்டுமே அணுக வேண்டும் என்ற தவறான  கருத்து மக்களிடையே நிலவிவருகிறது. அதைப் போக்கி மனநோய் மருத்துவரை நாடுமாறு  அறிவுறுத்த வேண்டும்.
மருட்சி :
சிறு பிள்ளையிலிருந்து பொய்யான கருத்துக்களை மனதில் திணித்து வந்ததன் விளைவாக  ஏற்படுவதே மருட்சியாகும். பேய், பிசாசு, ஆவிகள், ஜோதிடம், கைரேகை, மறுபிறப்பு,  மந்திரம், போன்றவையெல்லாம் இந்த மருட்சியில் அடங்கும். மேற் சொன்னவற்றிலிருந்து  படிப்பு அறிவு இல்லாத கிராம மக்களே பெரும்பாலும் பேய்! பிசாசு! ஆவி!  தொந்திரவுகளுக்கு உள்ளாவதன் காரணங்கள் தெளிவாகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கும்  கிராமங்களுக்குப் பகுத்தறிவாளர் குழு நேரில் சென்று ஆய்வு செய்ததும் உண்டு.

உதாரணமாக ஆந்திர மாநிலத்தில் 1983 – இல் மேடக் மாவட்டத்தில் பனிமதி!! (Banimathi  ) என்ற பெயரில் பேய்! பிசாசு! பில்லி! சூனியங்களுக்கு- பல கிராமங்களில் மக்கள்  பலியாகி, பலர் உயிருடன் எரிக்கப்பட்டும், சிலர் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி  மக்களை ஏமாற்றி பணம் பறிக்க- மாவட்ட காவல்துறைக்கு இது ஒரு பெரும் சட்ட ஒழுங்கு  பிரச்சனையாகி விட்டது. உடனே மாவட்ட காவல் அதிகாரி விஜயவாடாவில் உள்ள நாத்திக  மைய்யத்திற்கு அழைப்பு விடுத்தார். அங்கிருந்த ஒரு நோய் மருத்துவர், இரண்டு பொது  மருத்துவர்கள், ஒரு இயல்பியல் அறிஞர், ஒரு சமூகவியல் அறிஞர், ஒரு மனோவசிய அறிஞர்,  ஒரு மாஜிக் நிபுணர், மற்றும் சில சமூக சேவர்கள் அடங்கிய ஆய்வுக்குழு மேற்சொன்ன  கிராமங்களுக்கச் சென்று ஆய்வு செய்தது. யார் யார் என்னென்ன நோங்களுக்கு உள்ளாயினர்  எதெது மோசடி வேலை என்பதையெல்லாம் கண்டறிந்து அறிக்கையின் மூலம்  வெளிப்படுத்தினர்.
பேய்! பில்லி! சூனியம்! ஒரு கலாச்சார நம்பிக்கையாக இருந்தது என்றும், பல்வேறு  சமூம பொருளாதார அரசியல் மற்றும் மனோவியல் காரணங்களே இந்த மூடநம்பிக்கைகளை  உருவாக்கின என்றும் ஆய்வின் முடிவில் வெளிப்படுத்தினர். படிப்பு அறிவு அற்ற  கிராமப்புறப் பெண்களை பேய் பிடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு. பருவம்  அடையும் கிராமப்புறப் பெண்ணுக்குத் தனது உடலில் உணர்வில் ஏற்படும் மாற்றங்களைப்  பற்றிச் சரியான விளக்கம் பெறுவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அதனால் மனநோய்க்கு  ஆளாகி பேய் பிடிப்பது உண்டு.
அடுத்து பாலியல் உடலுறவு :
குழந்தை பிறப்பு பற்றிய அடிப்படைத் தகவல்கள் சரியாகத் தெரியாத
பெண் திருமணம்  செய்துக் கொண்டு விவரமற்ற கணவனால் கட்டாய உடலுறவுக்குள்ளாகி திகில் அடைந்து  மனநோய்க்குள்ளாகி பேய் பிடிப்பதும் உண்டு. இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்தவுடன்  இந்த பேய்கள் ஓடிவிடும். ஆக இவையெல்லாம் அறியாமையால் விளைந்த மனக்கோளாறுகளே. சரியான  மனநோய் மருத்துவரை அணுகி குணப்படுத்தக்கூடிய இந்த வகைக் கோளாறுகளை பேய்  பிடித்ததாகச் சொல்லி ஏமாறுவதும், ஏமாற்றுவதும்- இனியும் நடைப்பெற நாம் அனுமதிக்கக்  கூடாது.

தீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்

இறைவனின் பெயரால்.

         பெரியார் இவரை பற்றி சொல்லத்தேவை இல்லை இன்று தமிழகம் ஒரு அமைதி பூன்காவாகதிகள்கின்றது என்றால் இவருக்கும் அதற்கு பெரும் பங்கு இருக்கின்றது,மனிதனுக்கு இருக்கும் ஏற்ற தாழ்வுகளை கண்டு மனம் நொந்து போன இந்த மனிதர் நாத்திகவாதியாக மாறி கடவுள் மறுப்பு கொள்கையை சுயமரியாத இயக்கமாக மாற்றி பல எதிர்புக்குமதியில் தன் கொள்கையில் கடைசி வரை வுருதியாக இருந்தவர் ஆனால் இஸ்லாம் என்னும் போது இவர் தனி மரியாதை குடுக்கவும் இஸ்லாம் மதத்தை மற்றவர்கள் ஏற்கவும் சொன்னார் தீண்டாமையை இஸ்லாம் மதம்
மட்டுமே கண்டிக்கின்றது என்று இவர் பேசியதை இவர் குரலிலேயே கேர்போமே சேந்தையம்பட்டியில் ஆதிதிராவிடர்கள் 69 பேர்கள் இஸ்லாத்தை தழுவியது தொடர்பாக ஈ.வெ.ரா. பெரியார் ஆற்றிய உரை  இங்கு கிளிக் செய்து கேட்கவும்.

பெரியார் தீக்காவினருடன் தமிழ்நாடு தவ்கீத் ஜமாத்தினர் கடவுள் இருக்கின்றாரா என்ற தலைப்பில் நடந்த விவாதங்கள் என் பதிப்பில் தந்து இருந்தேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.
மஜீத் குவைத்.

Friday, April 16

ஒமர் முக்தார் வரலாறு Omar al-Mukhtar Biography

இறைவனின் பெயரால்.
    நண்பர்களே இத்தாலி நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த லிபியாநாட்டு விடுதலைக்கு இருபதாம் நுற்றாண்டின் துடக்கதில் போராடியவர்  ஒமர் முக்தார், லிபியா நாடு விடுதலை போராளி  1860ஆம் ஆண்டு பிறந்த இவர் ஒரு பள்ளிகூட ஆசிரியராக இருந்தவர்.

இத்தாலி ராணுவம் லிபியா மக்களை கொடுமை படுத்துவதை கண்டு கொதிதேளுந்தார் இதாளியர்களை லிபியாவில் இருந்து அகற்றவேண்டும் என்று ஒரு பெரும் படையை அமைக்க துவங்கினார் அப்போது அவருக்கு வயதோ அறுபது!, தன் வாழ்நாளின் கடைசி பத்து வருடத்தில் லிபியாவிடுதலைக்கு வுக்கிரமாக போராடியவர்,இத்தாலி இராணுவத்திற்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

முதல் வுலக போரின் போது இத்தாலிக்கு இவர் கொடுத்த தலைவலி மிகபெரியது இவர் அமைத்த கொரிலாபடை இன்றளவும் பிகவும் பிரபல்யம்மானது அதாவது எதிகளின் படைகளை தாக்குவதற்காக தயாராகஇருக்கும் இவர் படையினர் எதிர் தரப்பு படைகள் இவர்கள் அருகில் வந்ததும் ஏதோ பயந்து ஒடுவதைபோல் இவர்கள் குதிரைய எடுத்து கொண்டு வோடுவார்கள் குறிப்பிட்ட துளைவு சென்றதும்  எதிரிகளே நினைக்காத வண்ணம்  போன வேகத்தில் திரும்பி வந்து தாக்குவது மற்றும் சுற்றிவளைத்து தாக்குவது

ஒருகட்டத்தில் இவருடன் மல்லு கட்ட முடியாமல் இத்தாலி அரசாங்கம் இவருடன் சமாதான பேச்சு வார்த்தைகள் நடத்தியது ஆனால் இவர் அதர்க்கு வுடன்படவில்லை காரணம் ஒருபுறம் சமாதானம் பேச்சு நடத்திய இத்தாலி மறுபுறம் இவரை அளிக்க மிக பெரும் சதி தீடிகொண்டு இருந்தது அதை அறிந்து இவர் சமாதன பேசில் இருந்து வெளி ஏறி இத்தாலி படைகளை துவம்சம் செய்து கொண்டு இருந்தார் கிட்டத்தட்ட லிபியாவின் ஐந்து மாவாட்டங்களை தன் கட்டுபாடுக்குள் நான்கு ஆண்டுகளுக்கு மேல் வைத்து இருந்தார்.

இவைரை பிடிக்க இத்தாலி ராணுவம் மிக பெரும் திட்டம் தீட்டி மூன்று நாட்டில் இருந்து இராணுவ வீரர்களை வரவழைத்து கடுமையான போர்செய்து இவரை சுற்றிவளைத்து கைது செய்தது இவர்மேல் வழக்கும் தொடர்ந்தது,

ஒருகட்டத்தில் இவருக்கு பொது மன்னிப்பு தர இத்தாலி ராணுவம் தயாராக இருந்த போதும் இவர் அதை ஏற்று கொள்ள வில்லை காரணம் இவருடைய கொரில்லாபடையினை சரணடைய சொல்லி இருந்தார்கள் ஆனால் இவரோ எங்கள் சுதந்திரதின்காக போராடும் நாங்கள் இறப்போம் அல்லது வுயிர்  விடுவோம்  சரண் அடையும் பேசுக்கே இடம் இல்லை என்ற இவருக்கு இத்தாலி அரசாங்கம்1931ஆம் ஆண்டு துக்கு தண்டனை கொடுத்தது.

இன்று லிபியா சுதந்திரநாடு இவர்தான் இன்றும் லிபியாவின் தேச நாயகன் பாலைவனத்து சிங்கம் என்றெல்லாம் லிபியா மக்கள் இவரை அன்போடு இன்றும் நினைத்து பார்கின்றார்கள்.

இவருடைய கடசி பத்து வருட வரலாறை படம் எடுத்து இருக்கின்றார்கள் அதை என் முந்தின பதிப்பில் தந்து இருக்கின்றேன் பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்,படத்தின் தொடக்கத்தில் வயோதிகராக அறிமுகம்ஆகும் இந்த ஹிரோவை பார்க்கும்போது இவர் என்ன போராடி இருக்க போறார் நம்ம மகாத்மா காந்தி மாதிரி வுண்ணா விருதம் இருந்து அல்லது பாதயாத்திரை  போயிருப்பார் என்று படத்தை பார்த்தல்!? பிரமாதம்

நாம் இதுவரை தமிழ் படங்களில் போலித்தனமான கதாநாயகர்களை பார்த்து போலித்தனமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் இது போன்ற படங்களில் வுன்மையான கதானாயகர்களையிம் பார்க்கவேண்டும் அப்போதுதான் நமக்கு வுன்மையான வீராம் பிறக்கும்.
நன்றி மஜீத்.

Thursday, April 15

The story of Omar Mukhtar (Lion of the Desert) movie



பாலைவனத்தில் ஒரு சிங்கம்


majeed.

பள்ளி புத்தகங்கள் ஆன்லைனில்

நண்பர்களே,அரசு பள்ளிகளில் ஒன்னாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்புவரை இலவசமாக கொடுக்கும் புத்தகங்களை இணையத்திலும் தற்போது இலவசமாக அனைத்து புத்தகங்களையும் தமிழக அரசு தருகின்றது தேவை படுவோர் இங்கு கிளிக் செய்து பார்க்கவும் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளவும் மாணவர்களுக்கு மிகவும் பயன்வுள்ள இணையதளம், இத்தளம் சென்று பார்க்கும்போது நமக்கும்கூட ஏனோ நம்மளையும் அறியாமல் அந்த பசுமையான பழைய நினைவுகள் வருகின்றது சிறுவயதில் நாம் பார்த்த,படித்த,புத்தகம் அல்லவா நம்முடனே பல வருடங்கள் பயணம் செய்த புத்தகங்கள் தற்போது இவைகள் நமக்கு தேவை இல்லையென்றாலும் இதற்கும் நமக்கு ஒரு ஆழமான தொடர்பு இருப்பதென்னவோ வுண்மை நாம் எருச்சல்லாக  ஒருகாலத்தில் பார்த்த இந்த புத்தகங்கள் இன்று இவைகளை படிக்கும் போது ஏனோ மனம் இனம் புரியாத மகிழ்ச்சி அடைகின்றது
அன்புடன் மஜீத் குவைத்.

Wednesday, April 14

பதிவிறக்கம் செய்தவைகளை தொடர்ந்து பார்க்க

நண்பர்களே நாம் இணையத்தில் ஏதேனும் படமோ அல்லது தொடர் புரோகிராமோ பகு தி பகுதியாக பதிவிறக்கம் செய்து பார்க்கும் போது ஒவ்வொரு பகுதி முடிந்தது அடுத்த பகுதிக்கு மௌசின் வுதவியுடன் ப்ளை(play)செய்து பார்க்கின்றோம் இது நமக்கு சிரமமானது,நாம் பகுதி பகுதியாக பதிவிறக்கம் செய்தவைகளை தொடர்ந்து பார்க்க வுங்கள் மௌசின் மூலம்  வுங்களுக்கு தேவையான பகுதிகளை தேர்வு செய்து பின் மௌசை வலது கிளிக் செய்து அதில் வரும் ப்ளை(play ) யை தேர்ந்து எடுத்தாள்
நிங்கள் மௌஸில் மார்க் செய்தவைகள் ஒன்று ஒன்றாக play  யாகும்.
மஜீத் குவைத்.

சாலமன் பாபையா படிமன்றம்(VIDEO)










jesus movie watch,இயேசு படம்












since 23-07-2010

free counters