Friday, July 2

இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பு சதவீதத்தை அறிய

இறைவனின் பெயரால்!!!
எதிர்வரும் ஜூலை 4-ல் சென்னை தீவுத்திடலில் இலட்சக்கணக்கான மக்கள் கூடி உரிமை முழக்கம் எழுப்ப உள்ளனர். அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று உங்களை அழைக்கிறோம்.
தலைவர்களுக்கு புகழ் சேர்ப்பதற்காகவோ, அரசியல்வாதிகளிடம் உங்களைக் காட்டி தலைவர்கள் ஆதாயம் அடைவதற்காகவோ, கேளிக்கை நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பதற்காகவோ, தலைவர்களின் தர்ம தரிசனத்துக் காகவோ உங்களை அழைக்கவில்லை. இது முழுக்க முழுக்க உங்களுக்காகவும், உங்கள் நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவும், நீங்கள் படும் அவஸ்தைகளை உங்கள் வழித்தோன்றல்கள் பெறக் கூடாது என்பதற்காகவும் நடத்தப்படும் உங்களுக்கான மாநாடு.


நமது நாடு விடுதலை அடைந்த பிறகு மாபெரும் வல்லரசு நாடாக வளர்ச்சி பெற்றுள்ளது உங்களுக்கு தெரியும். இந் நாட்டின் அடக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்கு சென்றுக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. எல்லா சமுதாய மக்களும் உயர் கல்வி கற்று பதவிகளையும் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளதையும், அரசியல் அதிகாரத்தையும் மற்றவர்களுக்குச் சமமாக பெற்றுள்ளதையும் நீங்கள் பார்க்கிறீர்கள்.


ஆனால் உங்களின் நிலை என்னவென்பது உங்களுக்கு தெரியுமா? இந்திய நாட்டை உருவாக்கியதிலும், அதை வளப்படுத்தியதிலும், வெள்ளையனிடம் இருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களை விட நாம் அதிக உழைப்பு செய்தோம். வெள்ளையனை எதிர்ப்பதற்காக அவனுடைய மொழியைப் படிக்கக்கூடாது என்றோம். படிப்பைப் பாதியில் நிறுத்தி னோம். வெள்ளையனுடைய அரசாங்கத்தில் வேலை பார்க்கக் கூடாது என்று முடிவு எடுத்து அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளினோம்.


வழிபாட்டுத் தலங்களைக் கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தபோது வெள்ளையனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் பிரச்சார மேடையாகப் பள்ளிவாசல்களை நாம் பயன்படுத்தினோம். வெள்ளையன் கொடுத்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மற்ற சமுதாய மக்கள் முன்னேறியபோது அதையும் பயன்படுத்த மறுத்தோம். உடலாலும், பொருளாலும், உயிராலும் தியாகம் செய்வதில் மட்டும் அனைவரையும் நாம் மிஞ்சினோம். நாட்டின் விடுதலைக்காக கல்வியையும், வேலை வாய்ப்புகளையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளி விட்டு பல மடங்கு மேலே சென்று விட்டார்களே, அது பற்றிச் சிந்தித்தீர்களா?


கூலித்தொழிலாளியாகவோ, இறைச்சிக்கடைக்காரராகவோ, நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப் பட்டறையில் கடின வேலை செய்பவராகவோ, தோல் பதனிடும் தொழிலாளியாகவோ, குறைந்த ஊதியத்தில் வேலை செய்பவர்களாகவோ இருப்பவர்கள் நம் சமுதாய த்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?


சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?


ஒட்டகம் மேய்த்தல், சாலை போடுதல், கழிவுகளை சுத்தம் செய்தல், உயிரை பயணம் வைத்து உயரமான கட்டடப் பணிகளில் கூலித் தொழில் செய்தல், தனியாருக்குக காரோட்டும் வேலை, வீடுகளை சுத்தம் செய்தல், சமையல் வேலை இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?.


மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்?


இதை மாற்றியமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா? இல்லையா?


88 லட்சம் அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்க வேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் மட்டும்தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப் பட்ட சச்சார் கமிட்டி அறிக்கை கூறுகிறதே! இந்த இழி நிலை இனியும் தொடரலாமா?


பாதுகாப்பு தொடர்பான பணிகளில் மூன்று சதவிகிதம் தான் உள்ளனர் என்றும், தலித் மக்களின் நிலையை விட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சச்சார் அறிக்கை கூறுகிறதே? அதை மாற்றி அமைக்க வேண்டாமா?


முஸ்லிம்களின் கல்வி, அரசியல், பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப் பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உங்களைக் கவலையில் ஆழ்த்தவில்லையா?


முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம் என்கிறார். அதாவது ஒவ்வொரு நூறு முஸ்லிம்களில் 35 பேர் ஐந்தாம் வகுப்பு கூட படிக்கவில்லை.


ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்பு வரை படித்த வர்கள் 15.14 சதவிகிதம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது நூறு முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்பு வரை படிக்கவில்லை.


எட்டாம் வகுப்புக்கு மேல் பத்தாம் வகுப்பு வரை படித்த வர்கள் 10.96 சதவிகிதம் என்ற அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது நூறு முஸ்லிம்களில் 11 பேர் தான் பத்தாம் வகுப்பு படித்தவர்கள்.


பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரெண்டு வரை படித்த வர்கள் 4.53 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது நூறு முஸ்லிம்களில் ஐந்து பேர் தான் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்.


பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது நூறு முஸ்லிம்களில் 3 பேர் தான் பட்டப்படிப்பு படித்துள்ளனர்.


இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் எந்தச் சமுதாயமும் இல்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இந்த அவல நிலை என்றால் பொருளாதார நிலையிலாவது நமது நிலை உயர்ந்து இருக்கிறதா? அல்லது மற்ற சமுதாயங்களைத் தொட்டு விடும் தூரத்தில் இருக்கிறதா? பொருளாதாரத்தில் கடைசி நிலையில் இருக்கும் தலித் மக்களுடன் போட்டியிடும் அளவுக்குத் தான் நமது நிலை உள்ளது.


முஸ்லிம் குடும்பங்களின் சரசாரி மாத வருமானம் 1832 ரூபாயும் இருபது காசுகளும் தான் என்கிறது அந்த அறிக்கை. அது மட்டுமின்றி ஒவ்வொரு நூறு முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.


மற்ற சமுதாய மக்களில் நூற்றுக்கு இருபது பேர் வறுமை கோட்டுக்குக் கீழே இருக்கும்போது நமது சமுதாயத்தில் நூற்றுக்கு 31 பேர் வறுமையில் உள்ளனர் என்றால் இந்த நிலையை உயர்த்திட நாம் பாடுபட வேண்டாமா?


வறுமைக்கோடு என்பதன் அர்த்தம் தெரிந்தால் இட ஒதுக்கீட்டை நம்மால் அலட்சியப்படுத்தவே முடியாது. கீழ்க்காணும் தகுதியில் இருப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் என்று நிர்ணயித்துள்ளனர்.


சொந்தமாக இடம் இல்லாதவர்கள். இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்பவர்கள். வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள்.


வீட்டு உபகரணங்கள் (டி.வி.,ரேடியோ, மின்விசிறி, குக்கர்)இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள், நிலையான தஙகுமிடம் இல்லாதவர்கள்.


இத்தகைய நிலையில் நம் சமுதயாம் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லையா? பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஒப்பான வாழ்க்கை வாழும் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கண்டிப்பாக உழைக்கும் கடமை நமக்கு உள்ளதா? இல்லையா?


நூறு முஸ்லிம்களில் 35 பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வசிக்கின்றனர் என்றும், நூறு முஸ்லிம்களில் 41 பேர் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாத வீடுகளிலும், நூற்றுக்கு 23 முஸ்லிம்கள் தான் வசிக்க தகுந்த வீடுகளில் வசிக்கிறார்கள் என்றும் ரங்கநாத் மிஸ்ரா கூறுகிறார்.


நமக்கு தாராளமான உரிமை கிடைத்துள்ளது என்றால் வகுப்புக் கலவரங்களில் கொல்லப்படுவதில் கிடைத்து உள்ளது.


குஜராத் கலவரத்துக்கு முன்வரை நடந்த மொத்த கலவரங்கள் 3949. இதில் 2289 பேர் கொல்லப்பட்டதில் இந்துக்கள் 530 பேரும் முஸ்லிம்கள் 1598 பேரும் ஆவர். அதாவது 65 சதவிகிதம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள் ளனர். இதில்தான் நமது சதவிகிதத்தை விட நான்கு மடங்கு இடம அதிகம் கிடைத்துள்ளது.


நாட்டில் உள்ள சிறைக் கைதிகளிலும் நமக்கு தாராளமான இடம்கிடைத்துள்ளது. மொத்த கைதிகளில் முஸ்லிம்கள் 25 சதவிகிதம் உள்ளனர். நமது பேரன் பேத்திகளுக்குஇதைத்தான் பரிசாக விட்டுச் செல்ல வேண்டுமா?


நம்முடைய சமுதாயமும், கலெக்டர்களாக, உயர் அதிகாரிகளாக, டாக்டர்களாக, இஞ்சினியர்காளக, தொழில் நுட்ப வல்லுனர்களாக, வெளிநாடு சென்றாலும் மனைவி மக்களுடன் சென்று அதிக ஊதியத்துடன் பணிபுரிவோராக, பெரிய தொழில் அதிபர்களாக ஆக வேண்டாமா? இது பற்றி சிந்திக்கும் கடமை நமக்கு இருக்கிறது.


நீதிபதி மிஸ்ரா அவர்கள் நமது அவல நிலையை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. அரசாங்கம் என்ன செய்தால் இந்த அவல நிலை மாறும் என்பதற்கான பரிந்துரைகளையும் செய்தள்ளார்.


எல்லா நிலையிலும் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு அளிப்பதற்கு அரசியல் சாசனம் 16(4) விதி அனுமதிக்கிறது.


எனவே நாடு முழுவதும் கல்வி வேலை வாய்ப்பு உள்ளிpட்ட அனைத்து துறைகளிலும் நூற்றுக்குப் பத்து என்ற கணக்கில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். சுய தொழில் தொடங்க கடன் வழங்குதல் போன்ற அனைத்து சமூக நலத்திட்டங்களிலும் பயன் பெறுவோரில் நூற்றுக்கு பத்து பேர் முஸ்லிம்கள் இருக்க வேண்டும்.


தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் தளர்வு இருப்பதுப் போல் முஸ்லிம் மாணவர்களுக்கும் மதிப்பெண்ணை தளர்த்த வேண்டும்.


ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் பல்கலைகழகங்கள் அமைக்க வேண்டும். மேலும், நவோதயா போன்ற கல்விக் கூடங்கள் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தோறும் நிறுவ வேண்டும்.


முஸ்லிம் மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்காக வட்டி இல்லாத கடன் கொடுக்க வேண்டும்.


சொந்த வீடு இல்லாத முஸ்லிம்களுக்கு இலவசமாக வீடு கட்டி தர வேண்டும். சமையல் கேஸ் இணைப்பு மிகக் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.


நமது நிலையை படம் பிடித்து காட்டியதுடன் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் எனவும் மிஸ்ரா வழி காட்டியுள்ளார்.


மேற்கண்ட பரிந்துரைகளை நிராகரிக்கவோ தள்ளிப் போடவோ எந்த நியாயமும் இல்லை. நாடு விடுதலை அடைந்தது முதல் பாபர் மசூதி இடிக்கும் வரை முஸ்லிம்கள் காங்கிரசுக்கே வாக்களித்து வந்தனர். ஆனால் முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு காங்கிரஸ் ஒன்றுமே செய்யாத போதும் காங்கிரஸின் வாக்கு வங்கியாகவே முஸ்லிம்கள் இருந்தனர்.


இதன் பின்னரும் உடனே முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை இயற்றாமல் காங்கிரஸ் இழுத்தடிக்கப் பார்க்கிறது. முஸ்லிம் சமுதாயத்தை ஏமாளிகளின் சமுதாயம் என்று பிரதமர் தப்புக் கணக்கு போடுகிறார்.


முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த கருணாநிதி அவர்களும், ஜெயலலிதா அவர்களும் கும்பகோணத்திலும் இன்னபிற போராட்டக் களங்களிலும் நாம் கட்டுக்கடங்காமல் கூடி பொங்கி எழுந்ததால் அவர்களின் கருத்தை மாற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இட ஒதுக்கீட்டின் பலனை தமிழகத்தில் ஓரளவு பெற்றுள்ளோம். அதனை மிஞ்சும் வகையிலான போராட்டத்தின் மூலமாகவே நாம் கோரிக்கையை வென்றெடுக்க முடியும். முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது என்பதை மன்மோகன் சிங் உணரும் வகையில் நமது எழுச்சியைக் காட்டும் நிர்பந்த்துக்கு முஸ்லிம் சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.


சென்னையில் சரித்திரம் காணாத அளவுக்கு ஆள்வோரின் செவிட்டுக் காதுகளுக்கும் எட்டும் வகையில் நாம் பொங்கி எழுந்தால் மட்டுமே மிஸ்ரா அவர்களின் அறிக்கைக்கு உயிர் கொடுக்கப்படும். மிஸ்ரா கமிஷன் அறிக்கையை அமுல்படுத் தினால் அடுத்து வரும் தேர்தலில் காங்கிரஸூக்கும் அதனுடன் சேர்ந்துள்ள அணிக்கும் வாக்களிப்போம். இல்லாவிட்டால் பழைய கதை திரும்பும் என்பதை தெளிவாக அறிவிக்கவே இந்த மாநாடு.


இப்போது உனக்காக மானத்தோடும், மரியாதையோடும் நீ வாழ்வதற்காக, நாங்கள் பட்ட துன்பங்கள் எங்கள் சந்ததி களுக்கும் விட்டுச் செல்ல மாட்டோம் என்பதை அழுத்தமாக பதிவு செய்திட, 60 ஆண்டுகள் ஏமாந்தது போதும் இனியும் ஏமாறமாட்டோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட, இட ஒதுக்கீட்டை அடைய எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்திட குடும்பத்துடன் சென்னை தீவுத்திடலில் ஒன்று கூடுவோம். இறையருளால் வென்று காட்டுவோம்.
  
(நன்றி tntj அமீரகம்)
மஜீத் குவைத்.


No comments:

since 23-07-2010

free counters