Sunday, May 30

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்,HISTORY(Biography)of MG.RAMACHANDRAN

 பெயர்.................................:மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்,

நாம் அறிந்த பெயர்......:(இராமச்சந்திரன்)MGR.

பிறப்பு.................................: ஜனவரி 17, 1917


பிறந்த இடம்..................:நாவலப்பிட்டி(இலங்கை)
 
இறப்பு................................:டிசம்பர் 24, 1987,


மனைவிகள் .................:3,தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி,
 
பிள்ளைகள்....................:கிடையாது,
 
தந்தை பெயர்.........................................................:திரு. கோபாலமேணன்


தாயார் பெயர்........................................................ திருமதி. சத்தியபாமா


சகோதரர் பெயர்................................................... திரு.எம்.ஜி.சக்கரபாணி


பள்ளியின் பெயர்.................................................கும்பகோணம் ஆணையடி பள்ளி.

படிப்பு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 3-ம் வகுப்பு

கலை அனுபவம்...................................................7 வயது முதல்


நாடக அனுபவம்...................................................1924 முதல் 1963 வரை - 40 வருடங்கள்


சென்னை வருகை................................................சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்-1932 யானைகவுனி


சென்னையில் முதலில் வசித்த இடம்..........பங்காரம்மாள் வீதி


திரையுலகில் அறிமுகம் செய்தவர்................திரு.கந்தசாமி முதலியார்


திரை உலக அனுபவம் ......................................1934 முதல் 1977 வரை - 44 வருடங்கள்.


நடித்து வெளிவந்த படங்கள் .............................137 படங்கள்


கதாநாயகனாக நடித்த திரைப் படங்கள்.........115 படங்கள்


முதல் படம் வெளியான தேதி.........................28/03/1936 - சதிலீலாவதி

முதல் வேடம்........................................................காவல் துறை அதிகாரி - சதிலீலாவதி

முதல் கதாநாயகன் வேடம்...............................ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்


100 வது படம்..........................................................ஒளி விளக்கு - 20/09/1968


கடைசி படம் வெளியான தேதி .....................14/01/1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்


மறைவுக்கு பின் வெளியான படம்................அவசர போலீஸ் 100


அரசியல் அனுபவம் ...........................................1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள்


முதன் முதலாக இருந்த இயக்கம் ................இந்திய தேசிய விடுதலை காங்கிரஸ்

தி.மு.க.வில் இருந்த ஆண்டுகள் ....................1950 முதல் 1972 வரை


அ.தி.மு.க. துவங்கிய ஆண்டு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,1972


மிழக முதல்வரானது,.......................................1977 முதல் 1987 வரை - 11 வருடங்கள்


சென்ற வெளிநாடுகள்


மலேஷியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர்,ஹாங்காங், பாங்காக், தாய்லாந்து, ஜப்பான்,பிரான்ஸ், கிழக்கு ஆப்பிரிக்கா, லண்டன்,ரஷ்யா, அமெரிக்கா, மொரீஷியஸ்.

எம்.ஜி.ஆர் பற்றி சில சுவையான தகவல்கள்....

•எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936).கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).


•பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !

•எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !

•எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !

•விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் !

•சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். ‘நினைத்ததை முடிப்பவன் ’படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !

•முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார் !

•‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம் ’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

•நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும்,ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார் !

•எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !

•எம்.ஜி.ஆர் – கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

•காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரிமைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !

•நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் – மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள்.

•சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

•எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !

•தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 – ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான்….‘அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும் !’

•‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !

•அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் – சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார்!

•ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !

•ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !

•அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

•எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !

•முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போல’ என்பாராம் !

•அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்.

•‘நான் ஏன் பிறந்தேன்?’ – ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !

வாழ்க்கைக் குறிப்பு,,,,,,,,
இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேன்னுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடை தந்தையின் மறைக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால் இவர்
நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்பட்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிக்கையாலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவர். இவர் தங்கமணியை மணந்தார். இவர் நோய்க்காரணமாக இறந்தார. அதன்பிறகு சதானந்தவதியை மணந்தார். இவரும் நோய்க்காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்து கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது

பறக்கும் கார் அடுத்த ஆண்டில் அறிமுகம்

இறைவனின் பெயரால்.
 வீதியில் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகின்றது.


ஒரு கோடி ரூபா விலை கொண்ட இந்த கார், 2011 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜி யாஸ் என்னும் நிறுவனம்,பறக்கும் காரைத் தயாரிக்கவுள்ளது.

இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், வீதியில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது மடிக்கப்பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயங்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமானக் காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து வீதி வழியாக விமான நிலையம் வரை காராகச் செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும். விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும். இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன.

வீட்டில் இருந்து விமான நிலையத்திற்குச் சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்'' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்துசெல்லும் போது மோசமான வானிலை, புயல்க் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் வீதியில் இறங்கி விட லாம் வீதியில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும். அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார்,மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. இந்த காரின் விலை, 95 லட்சம் ரூபா. வரும் 2011 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மஜீத் குவைத்.

Saturday, May 29

வீடு கட்ட துவங்கும் முன் (சில ஆலோசனைகள்)

 நாம் வீடு கட்ட துவங்கும் போது பல விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்



இடம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.

 இடத்திற்கான வரைப்படம்

இடம் வாங்கும் போது அந்த இடத்திற்கான வரைப்படம் மிக முக்கியமாகும். அந்த இடத்தின் முழுஅமைப்பையும், நீங்கள் தேர்வு செய்யும் இடத்தின் அளவையும், உங்கள் இடத்திற்கு முன், பின், இட, வலப் புறங்களின் நிலவரத்தையும், அகல நீளங்களையும் உங்கள் பார்வைக்கு வைப்பது அந்த இடத்தின் லேஅவுட் என்று சொல்லப்படும் இடத்தின் வரைப்படமாகும்.


சாலை வசதி, மின்சாரம், தண்ணீர் வசதி, மருத்துவமனை, விளையாட்டுத் திடல், பள்ளிவாசல், அருகில் உள்ள - வரவிருக்கின்ற தொழிற்சாலைகள் போன்றவைக் குறித்து விபரம் அறிதல். இவை வரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கின்றதா என்று அறிதல்.

நாம் வாங்கும் இடம் பற்றிய அறிவு மிக முக்கியம். நம் இடம் தாழ்வான பகுதியில் இருக்கின்றதா... மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குமா என்று அறிதலும் அவசியம்.

இந்த இடத்திற்கான அரசாங்க அனுமதி (விற்க - வாங்க) பெறப்பட்டுள்ளதா என்று பார்ப்பதும் நம் இடத்திற்கான சாலை வசதி (வீடு சாலையை ஒட்டி இருக்கின்றதா - தூரமா) எப்படியுள்ளது என்று கவனிப்பதும் அவசியமாகும்.

தண்ணீர் வசதி நம் இடத்தில் இருந்தாலும் அரசாங்கம் வழங்கும் தண்ணீர் வசதி இருக்கின்றதா... இல்லையென்றால் அது கிடைக்கும் வாய்ப்புள்ளதா.. என்று அறிதல்.


லீகல் ஒப்பீனியன்!!!!!வழக்குறைஞர் மூலம் பெறப்படும் தகவல்,,,

நாம் வாங்கும் இடம் விற்பவரின் சொந்த சொத்தா என்று அறிதல்.


அரசாங்கத்திலிருந்து பெறப்படவேண்டியத் தகவல்
அரசின் எதிர்காலத்திட்டங்களில் நம் இடம் இடம்பெறுகின்றதா..? உதாரணமாக அரசின் சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் இடங்களில் நம் இடமும் அடங்குமா என்றத் தகவல்


வீடு கட்ட துவங்கும் முன்,இவற்றை கருத்தில் கொள்ளுங்கள்

வீடு கட்டத்துவங்கும் முன் நம் குடும்பத்தாருடன் ஆலோசனையில் ஈடுபடுதல். இது மிக முக்கியமாகும்.கட்டிடத்தின் அளவு தேவையானதாகவும் போதுமானதாகவும் இருக்க வேண்டும்


தேவைக்கதிகமாக கட்டப்படும் கட்டிடங்களை பராமரிக்க ஒரு பெரும் தொகை ஒதுக்கும் நிலை ஏற்படும். அல்லது பராமரிக்கப்படாமல் அவை பொலிவிழந்து போகும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.



விசாரணை.


நாம் வீட்டு வேலையைத் துவங்குமுன் முடிந்த அளவு இடம் உட்பட, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் - அதன் விலைகள், வீடுகட்ட பொறுப்பேற்கும் நபர்கள் பற்றி விசாரணையில் ஈடுபடுவது முக்கியமாகும்.


முன்னேற்பாடு
வீடு கட்டத் துவங்கு முன் தேவையான முன்னேற்பாடுகளை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். பொருளாதாரம் இதர தகவல்கள் அனைத்தும் இதில் அடங்கும்.

நிபுணர்களின் ஆலோசனை.
நம் வீட்டுக்குத் தேவையான கட்டுமான இதர பொருட்களை வாங்குமுன் அன்றைய மார்க்கட் நிலவரம் என்னவென்பதை அறிவதும் அதற்கு அத்துறையின் நிபுணர்களை அனுகுவதும் முக்கியமாகும். வீட்டில் நமக்கு தேவை என்னவென்பதையும் நமது பொருளாதார நிலைமையையும் மறைக்காமல் நிபுணர்களிடம் சொல்ல வேண்டும். அது பலவகையில் நமக்கு உதவியாக இருக்கும். தாழ்வான பகுதி என்றால் வீட்டை உயர்த்திக் கட்டும் நிபுணரின் ஆலோசனையை ஏற்க வேண்டும். அது நம் வீட்டுக்கு தக்கப் பாதுகாப்பை ஏற்படுத்தும். அவர்களின் ஆலோசனையில் முறையான திட்டங்கள், வீட்டு அமைப்புப்பற்றிய விபரமான வரைப்படம் ஆகியவற்றை வேலையைத் துவங்குமுன் தயாரித்துக் கொள்வது சிறந்தது.
எக்காரணம் கொண்டும் சிமெண்ட்டை ஸ்டோர் பண்ணக் கூடாது. அதிகப்பட்சமாக நாம் வாங்கும் சிமண்ட் மூட்டைகளை தொண்ணூறு நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். இந்த அவகாசத்தை கடந்தால் அதன் இறுக்கம் குறைந்து விடும்.


எல்லா சிமெண்ட்களுக்கும் நல்லவைதான் முறையான கலவை கலந்து பயன்படுத்தும் போது.


உலர்ந்த மரமாக பார்த்து - சிறந்த மரத்தை தேர்வு செய்து தேவையான அளவுகளில் வேலைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ள வேண்டும்.

பெரிய அளவாகவும், அழுத்தமான கல்லாகவும் பார்த்து செங்கற்கள் வாங்குதல் முக்கியம். இவ்வாறான கற்கள் செங்கற்களின் எண்ணிக்கையையும், சிமெண்டையும், கட்டுமான கூலியையும், நம் நேரத்தையும் கனிசமான அளவு மிச்சப்படுத்திக் கொடுக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

லேபர் ஒப்பந்தக்காரர்களை தேர்வு செய்வது,,,

நேர்மையான, அனுபவமுள்ள, தான் செய்யும் தொழிலில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும் பண்புள்ள, ஆர்வத்துடனும் எல்லாத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சிறந்த லேபர் ஒப்பந்தக்காரர்களை தேர்வு செய்வது மிக முக்கியம். நீங்கள் எவ்வளவு சிறந்த பொருட்களை வாங்கினாலும் அதை முறையாக பயன்படுத்தினால் தான் அதன் பயன்பாடு சிறப்பாக இருக்கும் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.


எந்தப் பொருளையும் தேவைக்கு மட்டும் வாங்குவதும், வாங்கும் பொருட்களை அந்தந்த நேரத்தில் முறையாக பயன்படுத்துவதும், ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து செயல்படுத்துவதும் நமது மொத்த செலவீனங்களிலிருந்து ஐந்து சதவிகிதத்தை மிச்சப்படுத்தி நமக்கு கொடுக்கும் என்பதை இறுதியாக கூறிக் கொள்கிறோம்

majeed kuwait.

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை by P Jainulabdeen(video)


இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை from majeed on Vimeo.

பல GMail ID சமாளிப்பது எப்படி ?

இறைவனின் பெயரால்!!!!

சிலருக்கு பல காரணங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட GMAIL Id தேவைப்படுகிறது. Personal, Official, Data Storage எனத் தேவைகள் பெருகிவிட்டன. ஒரு ID ஐ நிர்வகிப்பதே பெரும்பாடாக இருக்கிறது. பல GMAIL கணக்குகளைக் கையாள GMail Manager 0.6 உதவுகிறது. இதில் வுள்ள சில சிறப்பம்சங்கள் * பல GMail களை நிர்வகிக்கலாம்.
* புதிய மின்னஞ்சல் வருகையை உணர்த்தும்.* GMail Hosting ஐயும் ஆதரிக்கிறது.
* Import / Export வசதி உள்ளது.
இன்னும் பல வசதிகள் GMail Manager ல் உள்ளது. தற்சமயம் Firefox பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. வரவேற்பைப் பொறுத்து வருங்காலத்தில் அனைத்து உலவிகளுக்கும் கிடைக்கலாம்.
தேவைபடுவோர் இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும் 
மஜீத் குவைத்.

வல்லுநர் பார்வையில் அண்ணா(video)கீ வீரமணி அண்ணாவை பற்றீய பேச்சு









Thursday, May 27

உடல்அமைப்பு சில தகவல்கள்

உடலில் உள்ள மொத்த எலும்புகளில் பாதிக்குமேற்பட்டவை கை, கால் விரல்களிலேயே தான் அமைந்திருக்கின்றன.


ஒவ்வொரு சிறுநீரகத்திலும் சுமார் பத்து லட்சம் ஃபில்டர்கள் உள்ளன. இவை ஒரு நிமிடத்திற்கு 13 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன. கழிவுகள், சிறுநீராக வெளியேறுகின்றன.

தினமும் நாம் பார்ப்பதற்காக, கண்ணைச் சுற்றியுள்ள தசைகளை சுமார் ஒரு லட்சம்முறை இயக்குகிறோம். இந்த அளவுக்குக் கால் தசைகளை நாம் இயக்க வேண்டுமெனில் ஒரு நாளைக்கு 80 கிலோ மீட்டர்கள் நடந்தால் தான் முடியும்.

நமது கண்ணின் கருவிழிக்குள் கிட்டத்தட்ட பதினேழுகோடி பார்வை செல்கள் உள்ளன. இதில் பதின்மூன்று கோடி செல்கள் கருப்பு, வெள்ளையைப் பார்க்க உதவி செய்பவை. மீதியிருக்கும் சுமார் நாலு கோடி செல்கள், மூலமாகத்தான் நாம் வண்ணங்களைப் பார்க்க முடிகிறது.

உடலிலேயே மிகவும் சிறிய தசை காதுகளுக்குள் உள்ளது. அதன் மொத்த நீளம் ஒரு மில்லிமீட்டர்தான். அதேபோல் காதுக்குள் இருக்கும். சில பகுதிகள் விசேஷமானவை. இவைகளுக்கு ரத்தம் செல்வதில்லை. இவை நமக்கு வேண்டிய சத்துக்களை மிதந்து கொண்டிருக்கும் திரவத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றன. செவிப்பறை மிகவும் நுண்மையான அமைப்பு, ரத்தக் குழாய்கள், அங்கு வந்தால், நாடித்துடிப்பின் சத்தத்திலேயே செவிப்பறை செயலற்றுப் போய்விடும் என்பதால் ரத்தக் குழாய் இல்லை.

மூளை, உடலில் மொத்த எடையில் மூன்று சதவிகிதம் உள்ளது. அது நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து 20 சதவிகித ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. நாம் உண்ணும் உணவில் 20 சதவிகித கலோரிகளும், அதற்குத்தான் போகிறது. அது மட்டுமல்ல, 15 சதவிகித ரத்தமும் அதன் உபயோகத்திற்குத் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நாடித்துடிப்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இல்லை. ஓய்வாக இருக்கையில் ஒரு ஆணின் துடிப்பு, ஒரு நிமிடத்திற்கு எழுபத்திலிருந்து எழுபத்திரண்டு வரை இருக்கிறது. பெண்ணுடையதோ, எழுபதெட்டிலிருந்து எண்பத்திரண்டு வரை இருக்கிறது. கடுமையாக உடற்பயிற்சிகளில் ஈடுபடும்போது நிமிடத் திற்கு 200 துடிப்புகள் வரை கூட உயரும்

Goripalayam (2010) pdvd print

அன்பு நண்பர்களே ,
கோரிபாளையம் படத்தின் பெயர்,ஒவ்வொரு இளைஞனும் காண வேண்டிய படம். 

Wednesday, May 19

Sunday, May 16

ஜி மெயில் திறப்பதில் சிக்கல்??????????

இறைவனின் பெயரால்,,,,,,,,,,
பொதுவாக நாம் பயன் படுத்தும் ஜிமெயில் சில வேளைகளில் திறக்கமுடியாமல் பிழை செய்தி வரும்போது நமக்கு வருத்தமாகத்தான் இருக்கும்,இந்த பிரச்னை அனைவருக்கும் இருக்கிறது ,சில அவசர தேவைக்காக நாம் ஜிமைலை திறக்கும்போது இதே பிழை செய்திகள் வந்தால் எவ்ளோ கஷ்டம் என்று என்னைப்போல் பாதிக்க பட்டவர்களுக்குத்தான் தெரியும்,. இந்த பிரச்சனைக்கு தீர்வு இருக்கின்றதா என்றால் வேறுவழியில் தீர்வு கிடைத்தது

ஜி மெயிலை வேறு வழிகளில் பெறலாம் பொதுவாக நாம் பயன் படுத்துவது ஜி மெயிலில்  ஸ்டாண்டர்ட்(ஸ்டாண்டர்ட்), அது அல்லாமல் எளிதில் திறபதற்க்காக மற்றொரு வைகயான தளம்  இங்கு கிளிக் செய்து ஜி மயிலின் இந்ததளம் நமக்கு மிகவும் பயன் வுள்ளதாக இருக்கும்  இதை பேவரைட்டீல்(favorites)  வைத்து கொள்ளுங்கள் ,ஜி மெயிலில் ஸ்டாண்டர்ட் திறப்பதில் சிக்கல் ஏற்படும் பொது இது மிகவும் வுதவியாக இருக்கும்.

அதேபோல் இன்னொரு வகை வுள்ளது அதை ஜி மெயில் மாக்ஸ் என்று சொல்கின்றார்கள் இதைதான் ஜி மெயில் தொலைபேசியில் இணையம் மூலம்   வழங்கி வருகின்றது இதை நமது கணினிகளிலும் திறக்க முடியும் அதுவும் மிக மிக எளிதாக.தேவைபடுவோர் இங்கு  கிளிக் செய்து பெறலாம்
மஜீத் குவைத்.

Friday, May 14

Nadanthathu Enna tv show,about Nityananda.





Niyam 13-05-2010 tv show.







Nadanthathu Enna tv show







அமெரிக்க வரலாறு United States(America)Etymology

இறைவனின் பெயரால்!!!!!!!   நண்பர்களே வுலகை ஆட்டி படைத்து கொண்டு இருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடு (United States)என்று சொல்லகூடிய அமெரிக்காவை  கொஞ்சம் தெரிந்துகொள்வோம்,
தலைநகரம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வாஷிங்டன், டி.சி.

வர்த்தக நகரம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நியூயோர்க்.
 
ஆட்சி மொழி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,எதுவுமில்லை.
 
பயன்பாட்டு மொழி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஆங்கிலம்(81% )
 
இரண்டாம் பெரிய மொழி,,,,,,,,,,,,,,,,,,,,,ஸ்பேனிஷ்(12%)
 
மதம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா ஒரு மதச்சார்பற்ற நாடு,
(எந்த மதரீதியான ஆட்சியையை ஸ்தாபிப்பதையும் தடை செய்து இருக்கின்றது)

கிறிஸ்தவர்கள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,(78.4% )

முக்கிய  தகவல்,,,,,,,,அமெரிக்காவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் குறைந்து கொண்டு வருகின்றது.

அமெரிக்காவில் வளர்ந்து வரும் மதங்கள்,,,,,,,,,,,,,,,,,,,,ஜூதாயிசம் (1.7%)மற்றும் இஸ்லாம் (2.6%),

ஆட்சிமுறை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மக்கள் ஆட்சி,

சுதந்திரம் நாடானது ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,July 4, 1776 .
 
சுதந்திரம் யாரிடம்இருந்து வாங்கினார்கள்,,,,,,,,,,,,,இங்கிலாந்
 
மக்கள் தொகை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,முப்பது கோடி( 281,421,906)வுலகின் முன்றாவது இடம்,

எழுத்தறிவு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, (99%)

அமெரிக்கரின் சராசரி ஆயுள் காலம் ,,,,,,,,,,,, 77.8 வருடங்கள்

கலாச்சாரம்,,,,,,,,,,,, பல கலாச்சார தேசம்

உணவு,,,,,,,,,,,,,,,,,,,,,,,கோதுமை தான் பிரதான உணவு தானியமாக இருக்கிறது.

நாணயம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அமேரிக்க டாலர்,United States dollar ($),(USD).

தனிநபர் வருமானம்(1ஆண்டுக்கு) ,,,,,,22லட்சம்($55755)தோரனயமாக.
 
நிலபரப்பு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வுலகின் நான்காவது பெரிய நிலபரப்பு(9,826,630 கிமீ)
 
  அமெரிக்காவை கண்டுபிடித கொலம்பஸ் அமெரிக்காவுக்கு வைத்த பெயர்,,,,, கொலம்பியா.
 
1507 லிற்கு பிறகு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அமெரிக்கா என்ற பெயர்,,
 
நவம்பர் 15, 1777,ஆண்டுக்குப்பின் ,,,,,, யுனைடெட் ஸ்டேட்ஸ்(யுஎஸ்ஏ)
 
அமெரிக்காவில் குடியேறிய மக்கள்  ,,,,, இங்கிலாந்தை  சேர்ந்தவர்களே அதிகம்.

மாநிலங்கள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஐம்பது மாநிலங்களும் ஒரு ஐக்கிய மாவட்டமும்


TamilBeat.Com - Columbus Columbus .mp3
Found at bee mp3 search engine


அமெரிக்கா  தேசிய பொருளாதாரம் வளரதொடங்கிய ஆண்டு,,,,,,,,,,,,1870கள் வாக்கில்,

இரண்டாம் பொருளாதார வளர்ச்சி,,,,,,1990 ஆம் ஆண்டுவாக்கில் கிளிண்டன் ஆட்சி காலத்தில் கணினி மற்றும் கணினி சம்மந்த மென்பொருள்கள் வுலகம் முழுவது அபரிமிதமாக  ஏற்றுமதி செய்தது மறுபக்கம் வுணவு விடுதிகளின் முதலாளிகள் (past food)மெக் டொனால்ஸ்(mcdonalds) போன்ற பல விடுதிகள் வுலகம் முழுவதும் கிளைகள் அமைத்தது அமெரிக்கா பொருளாதாரத்தை பெருக்க வுதவியது  ,பெட்ரோல் கண்டுபிடிப்புக்கு பிறகு அரபியர்களே தனிநபர் வுலக பணகாறர்கள் வரிசைசில் இருந்தார்கள்,இந்த காலகட்டத்தில்தான் அரேபியர்களை முந்தி கொண்டு அமெரிக்கா தொழில் அதிபர்கள் வுலக பணக்கார வரிசையில் வந்தார்கள்.

அரசாங்கத்தின்  மிக முக்கிய வருமானம் ,,,,,,,ஆயுதம் விற்பனை,தொலை தொடர்பு  சாதனங்கள் மற்றும்  தொழில் நுட்பம்.

கண்டுபிடிப்புகள் ,,,,,,,,,,,,,,,,,,,,,19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகலீல் தொடங்கிய இவர்களது கண்டுபிடிபுகலானது இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது இன்று நாம் பயன் படுத்தும் நவீன சாதனங்களில் என்பது சதவிதம் அமெரிக்கர்கள் கண்டு பிடித்ததே,குறிப்பாக,நாம் பயன் படுத்தும் பால்பைன்ட் பேனாவில் இருந்து விமானம் வரை அமெரிக்கர்கள்லின் கண்டுபிடிப்பே,
தொமஸ் அல்வா எடிசன்,,,,,பல்புகள்,சினிமா,மற்றும் இவருடைய கம்பெனி மட்டும் நூற்றுக்கு மேற்பட்டவைகளை கண்டுபிடித்து,.நிகோலா டெஸ்லா அல்டர்னெடிங் மின்சாரம், ஏசி மோட்டார் மற்றும் ரேடியோவை உருவாக்கினார்
1876 இல்------------ அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசியை அறிமுகம் செய்தார்,

ஹென்ரி போர்ட் ---------கார்.
1903 இல் ரைட் சகோதரர்கள்----------விமானத்தை உருவாக்கினர்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்----எழுதிக்கொண்டே போகலாம் அவ்ளோ கண்டுபிடிப்புகள் அமெரிக்கர்களால் கண்டுபிடிக்க பட்டு வுள்ளது.இருபதாம் நூற்றாண்டின் அதிசயம் என்று சொல்லகூடிய கணினியும் அமெரிக்கர்களின் கண்டு பிடிப்பே,இண்டர்நெட்டும் அவர்களே.

அமெரிக்கா சிறப்புவுறவு கொண்டு இருக்கு நாடுகள்,,,,,,,,, இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இஸ்ரேல், மற்றும் சக நேட்டோ உறுப்பு நாடுகளுடனும் வலிமையான உறவுகளைக் கொண்டுள்ளது

அமெரிக்கவுடன் தூதரகவுறவு இல்லாமல்  இருக்கும் நாடுகள்,,,,கியூபா, ஈரான், வட கொரியா, பூட்டான், சூடான், மற்றும் சீனக் குடியரசு.

ராணுவதளங்கள் ,,,,,,,,,,,,,, வுலகின் அணைத்து கண்டத்திலும் அமெரிக்க ராணுவதளம் வுள்ளது அப்படி அமெரிகாவிற்கு வெளியே எத்தனை தளங்கள் வைத்து இருகின்றார்கள் தெரியுமா 770 தளங்கள்!!!!!!!!!!(ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது)

ராணுவசக்தி ,,,,,,,,,,,,,,,,,,, (புள்ளி விபரம் சொன்னால் தலைசுத்தும் சுருக்கமாக சொல்கிறேன்)அமெரிக்கவை எதிர்த்து வுலகநாடுகள் அனைத்தும்  ஒன்றுசேர்ந்து போரிட்டாலும் அமெரிக்கவை வெல்லமுடியாது இதுதான் தற்போதைய நிலை,

  ஒரு ராணுவ சக்தியாக நாட்டின் அந்தஸ்தை வுயர்தியது ,,முதலாம் வுலகபோரின்போது.
 
அணு ஆயுதங்கள் கொண்டிருந்த முதலாவது நாடானது,,,,,,,,,,,,,.1945 ஆம் ஆண்டில் (இரண்டாம் உலகப் போருக்கு பின்)
 
அமெரிக்கா தான் ஒட்டுமொத்த வல்லரசு என்று ஆனது ,,,,,,,,,ரஷ்யா நாடு சிதறியதும்.

எதிர் காலத்தில் அமெரிக்காவிற்கு போட்டியாக வல்லரசு ஆகும் நாடு,,,,,சீனா
 
அமெரிக்காவிற்கு எதிர்கால ஆபத்துகள் ,,,,,,,,,,,,,, இன்னும் சில ஆண்டுகளில் அல் காய்தா  கையில் அணு ஆயுதம் வந்துவிடும் அப்படி அவர்கள் கையில் அணு ஆயுதம் வந்து விட்டால் அமெரிக்க?????????????

TamilWire.com - New York Nagaram .mp3
Found at bee mp3 search engine

  மஜீத் குவைத்.
 
 
 
 
.

Wednesday, May 12

Niyam 12-05-2010(video)





Unearthed-Tamil Dubbed English Movie-Watch Online for free

















இஸ்லாமியர்களின் கணினியில் இருக்கவேண்டிய(prayer bell) ஸாப்ட்வேர்,,,,,

இறைவனின் பெயரால்!!!!!!

நண்பர்களே இந்த மென்பொருளானது(software)எந்த நாட்டில் நீங்கள் இருந்தாலும் தொழுகை நேரத்தை வுங்கள் கணினியில் காட்டுவதுடன் ஐவேளை தொழுகை நேரம் வந்ததும்  பாங்கு சொல்வதுதான்,அதோடு இல்லாமல் நாம் இருக்கும் இடத்தில் இருந்து கிப்லா எந்த திசையில் இருக்கின்றது என்பதையும் காட்டுகின்றது
திரு குரானின் அணைத்து வசனங்களும் mp3யாகவும் வுள்ளது,இஸ்லாமிய காலண்டரும் வுள்ளது,மற்றும் வுங்கள் கணினியை இந்த விண்டோவ் மூலம் லாக் செய்யவும் முடியும்,இதுபோல் இன்னும் பல ஆப்சன்கள் கொண்ட இந்த மென்பொருள் அளவிலோ மிக மிக குறைந்த கொள்ளளவு கொண்டுள்ளதால் வுங்கள் கணிணியி ரோம் மேமொரிக்கு இது இயங்க இலகுவாகவும் வுள்ளது,இதை இங்கு கிளிக் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.இதை இயக்க தொடங்கும்போது மேலே வுள்ளதுபோல் சிறிய விண்டோ திறக்கும் அதில் வுலகவுருண்டை லோகோ இருக்கும் கீழே படத்தை பாருங்கள்
இதில் நான் ,மார்க் செய்து இருக்கு இடத்தில் சொடுக்கினால் கீழே வுள்ளதுபோல் ஒரு விண்டோ திறக்கும்
 இதில் இடது பக்கம் நீங்கள் எந்த நாட்டில் இருகிண்றீர்களோ அந்த நாட்டையும்  வலது பக்கம் வூரையும் தேர்ந்து எடுத்து ok குடுக்கவும் அவ்வளவுதான் இனி நேரம் தவறாமல் தொழுகையின் நேரம் வந்ததும் வுங்கள் கணினி பாங்கு சொல்ல ஆரமித்துவிடும்(கணினி இணைய தொடர்பில் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை)
நீங்கள் தொழுக போவதற்கு முன் இதில் இருக்கும் லாக் படத்தில் ஒரு சொடுக்கு செய்தால் வுங்கள் கணினி லாக் ஆகி விடும்,,.வுங்களுக்கு பிடித்தமாதுரி இந்த விண்டோவின் அமைப்பை மாற்றலாம் இந்த விண்டோவில் இருக்கும் பள்ளிவாசல் மீது கர்சரை வைத்து சொடுக்கி பாருங்கள் வேறு வேறு பள்ளி வாசல்கள் வந்து கொண்டே இருக்கும்.
நமது கணினியை திறந்தவுடன் பிஸ்மில்லாஹ் என்று சொல்வதை கேட்கும் போது பிரமாதமாகவும் வுள்ளது.
மஜீத் குவைத்.

Nadanthathu Enna(video) 12-05-2010





Monday, May 10

(டெஸ்க்டாப் மேஜிக்) வுங்கள் பெயரை பனிமலையில் செதுக்க The penguin show

இறைவனின் பெயரால்!!!

நண்பர்களே கணினியின் திரையில் விளையாடி(மேஜிக்செய்துபலநாள்ஆகிவிட்டது,
வாருங்கள் இப்போது சுவாரசியமானா விளையாட்டை பாப்போம்,அதாவது பனி மலையில் வுங்கள் பெயரோ அல்லது வுங்களுக்கு பிடித்தவர்கள் பெயரோ செதுக்கி கணினி திரையில் பார்த்தல் எவ்ளோ நன்றாக இருக்கும்,அதைதான் இந்த பதிப்பில் தருகின்றேன் இங்கு கிளிக் செய்தால் கீழே வுள்ளது போல் ஒரு விண்டோ  திறக்கும்
 
அதில் Message என்று இருக்கு வார்த்தை அருகில் வுங்களுக்கு பிடித்த மான பெயரை டைப் செய்யவும் பின் submit என்னும் பட்டனை சொடுக்கவும் கீழே பாருங்கள் நான் என் வலையின் பெயரை தந்து இருக்கின்றேன் அதை பணியில் வாழும் பென்குயீன்  பறவைகள் மலையில் செதுக்கி எனக்கு தந்து விட்டது,
 வுங்களுக்கு பிடிதவர்கர் பெயரை இதில் எழுதி பார்த்து ரசியுங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.அதே போல் என் பழைய பதிப்பில் ஒரு கிளிக்கில் மேஜிக் தந்து இருக்கின்றேன் இங்கு  கிளிக் செய்து அதுவென்ன என்று பார்க்கவும்.
மஜீத் குவைத்.

Sunday, May 9

போடோஸ் டிசைன் ஸாப்ட்வேர் photos design software.

இறைவனின் பெயரால்!!!!



                             ஸ்மூத் போடோஸ் டிசைன் ஸாப்ட்வேர்.

 போடோஸ் டிசைன் செய்ய பல சாப்ட்வேர்கள் இருந்தாலும் இது சற்று வித்யாசமானது அதாவது நமது  போட்டோவை ஸ்மூத்தாக மாற்றி தந்துவிடும்.


 முதலில் இங்கு கிளிக் செய்து மிகவும் குறைந்த கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளவும்


(கிளிக் செய்ததும் கீழ்காணும் விண்டோவ் திறக்கும் அதில் நான் சிகப்பு கலரில் மார்க் செய்து இருக்கும் இடத்தில சொடுக்கி பதிவிறக்கம்)





பிறகு வுங்கள் கணினியின் திரையில்தோன்றும் இதன் ஐகானை(icon)கிளிக் செய்தால் கிழே வுள்ளதுபோல் விண்டோவ் திறக்கும்,





இதில் open என்பதை சொடுக்கி வுங்களுக்கு ஸ்மூத் பண்ணவேண்டிய படத்தை கணினியில் இருந்து தேர்ந்து எடுக்கவும் நான் ஒருபடத்தை தேர்வு செய்து இருகின்றேன் கீலேபார்கவும்







 





இதில் smooth என்பதை சொடுக்கியதும் எப்படி மாறுகின்றது என்று  கீலேபார்கவும்






கீழே இருக்கும் இந்த tool மூலம் இன்னும் சிறப்பாக மெருகேற்றமுடியும்.



போட்டோவை வித விதமாக அழகுப்படுத்திபாற்பவர்களுக்கு மிக மிக அற்புதமான software நான் ஒன்றுதான் செய்து காட்டி இருகின்றேன் இந்த மென்பொருள் மூலம் இன்னும் அதிகமாக    வுங்கள் போட்டோவை மேருகேத்திகொள்ளலாம்.

என் பலயபதிபில் போட்டோஸ் டிசைன் ஸாப்ட்வேர்,(photos design software) என்று  ஒரு நல்ல மென்பொருள் தந்திருந்தேன் தேவை படுவோர்  இங்கு கிளிக் செய்துபார்க்கவும். 


மஜீத் குவைத்.

Saturday, May 8

சார்லி சாப்ளின் Charlie Chaplin comedy.video







சார்லி சாப்ளின் வரலாறு Charlie Chaplin Biography

பெயர்                             _ சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின்,

நாம் அறிந்த பெயர்  _ சார்லி சாப்ளின்.

பிறப்பு                            _ ஏப்ரல் 16, 1889 .

பிறந்த இடம்               _ வால்வோர்த்தில்(லண்டன்)

படித்தது                           _ அநாதை இல்லத்தில்.

அமெரிக்காவுக்கு
குடிபெயர்ந்தது             _ October 2, 1912 .

ஆஸ்கர் விருது            _  இருமுறை,

மற்ற பெரிய விருது  _ சர் பட்டம்.

இவர் சம்பளம்              _ ஒரு மில்லியன் டாலர் (1917)

கடைசியாக இவருக்கு
வழங்கப்பட்ட விருது _உலகத்தின் தலைச் சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

மணவாழ்க்கை              _ நான்கு மனைவிகள்

விவகாரத்து                         _ மூன்று மனைவிகளை,

பிள்ளைகள்                          _மொத்தம் பதினோரு பிள்ளைகள்,

இவர் வாழ்க்கை முறை

ஒரு கலைங்கனாக  வெற்றி பெற்றாலும் இவர் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சர்சைக்குறியது,

"தி கிரேட் டிக்டேடர்?        - இது இவர் நடித்த ஒரு படத்தின் தலைப்பு கிட்லரை கேலிசெய்து இவர் எடுத்த இந்த படத்தை கிட்லரே பலமுறை பார்த்ததுதான்.

சாப்ளின் பற்றிய சுவையான செய்திகள்
*சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும் பொழுது பெரிதும் வியப்புற்றனர்.
*சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பல நடத்தப் பட்டு வந்தன. சாப்ளின் ஒரு முறை அப்போட்டி ஒன்றில் ரகசியமாகப் பங்கு பெற்றார்.இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது

இவரது கடைசி திரைப்படங்கள் -"தி கிங் இன் நியூ யார்க்" (1957) , "தி சாப்லின் ரெவ்வூ" (1959) மற்றும் சோ·பியா லாரென்,

கடைசி காலகட்டம்         - இவர் கடைசி பத்து வருடங்கள் வுடல் வுபாதையால் மிகவும் சிரம பட்டார் wheelchair.மூலமே இவரால் நகர முடிந்தது.

சாப்ளினின் மரணம் 

            டிசம்பர் 25, 1977ஆம் ஆண்டு, கிருஸ்மஸ் தினத்தன்று அவரது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில்(சுவிட்சர்லாந்த்) இறந்தார்,இவரது உடல் வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டது.

அதிர்ச்சியான தகவல்

 அடக்கம் செய்யபட்ட சிலதினங்களில்  உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது.சாப்ளினின் உடல் பதினோறு வாரங்களுக்குப் பின் ஜெனீவா(சுவிட்சர்லாந்த்)  ஆற்றின் அருகில் கைப்பற்றப் பட்டது. பிறகு ஆறரை அடி குழியில் மிக கடினமான சிமென்ட் கலவையால் இவர் கல்லறை அமைக்க பட்டது  இவர் நினைவாக இவரது சிலை ஒன்று வெவேவில் அமைக்கப் பட்டது

வாருங்கள் இன்னும் விரிவாக பாப்போம்

since 23-07-2010

free counters